படிச்ச முட்டாள், பயந்த புத்திசாலி

Tuesday, February 24, 2009

நான் கடவுள் - பதிவர்களின் விமர்சணத்திற்கு ஜெயமோகன் பதில்

கவனமில்லாமல் எடுத்த எந்தக் காட்சியும் படத்தில் இல்லை என்பதே நான் உணர்ந்தது. அவர் அளித்த கவனமும் உழைப்பும் பத்து சதவீதம் கூட பார்வையாளர்களால் ,அதிலும் தேர்ந்த பார்வையாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களால், கவனிக்கப்படவில்லை.

மேலும் படிக்க...

http://jeyamohan.in/?p=1869

http://jeyamohan.in/?p=1873

Labels:

Thursday, February 19, 2009

மீண்டும் தரணியுடன் இனைகிறார் டாக்டர்.விஜய்

எது நடக்க கூடாதுன்னு நம்ம நினைச்சு பயந்திட்டு இருந்தமோ அது நடக்க போகுது! விஜயின் ஐம்பதாவது படத்தை தரணி இயக்கவிருக்கிறார்.

கதை விவாதம் பாண்டிச்சேரிக்கு அருகில் இருக்கும் ஒரு பீச் ரிசார்டில் நடந்து வருகிறது. அதில் பங்கு பெற்ற ஒரு உதவி இயக்குனரும் பதிவருமான (அதான் இப்ப எந்த பதிவர கேட்டாலும், நான் சினிமால இருக்கேன்னு சொல்றது ஃபேஷனாயிடுச்சே) எனது நண்பர் படத்தின் கடைசி இருபது நிமிட திரைக்கதையை அனுப்பியுள்ளார்.

பிரகாஷ்ராஜ், விஜயின் அம்மாவை கொலை செய்து, தங்கச்சியை கற்பழித்து. வீட்டையும் கொளுத்தி விட்டு நயண்தாராவை அமெரிக்காவிற்கு கடத்தி போய் விடுகிறார். விஜய் உடனே காதலியை காப்பாற்ற அமெரிக்கா போக வேண்டிய கட்டாயம், ஆனால் தளபதியிடம் விசா,பாஸ்போர்ட், கையில காசு, எதுவுமே இல்லை. இப்ப இளைய தளபதி என்ன பண்ண போறாரோனு ரசிகர்கள் எல்லா டென்ஷனா இருக்க. மீனாம்பாக்கத்திற்கு மீன் பாடி வண்டியில வேகமா போயிட்டிருந்தவர் அப்படியே வண்டிய ஒரு யூ டர்ன் அடிச்சி, மவுண்ட் ரோடில் இருக்கும் எல்.ஐ.சி பில்டிங்கிற்கு வந்து ரெண்டே ஜம்பில் மொட்டை மாடிக்கு போயிடறாரு...அப்போ பார்த்து கரெட்டா சென்னை to அமெரிக்கா
போர்டை தொங்க விட்டு ஒரு ஏர் டெக்கான் ஃபளைட் அந்த பக்கமா போறத விஜய் பார்த்துட்டாரு. ரசிகர்களும் சரி தளபதி ஒரே டைவில் விமானத்தோட இறக்கையை புடிச்சுட்டே அமெரிக்கா போயிடுவாருன்னு நினைச்சு விசிலடிக்க தயாராக அங்க தான் ஒரு ட்விஸ்ட்......

மொட்டை மாடியில் இருந்து டைவ் அடித்தது என்னவோ உண்மை, ஆனா அவர் அப்படியே நேர போய் விமானத்தை பிடிக்கவில்லை அதற்கு பதிலா தனது ரெண்டு கையையும் இறக்கை மாதிரி வைத்துக் கொண்டு ஏர்லையே பனிரெண்டு மணிநேரமா மிதக்குறார். அவர் மிதந்தா என்ன பூமி தான் சுத்துதே, பனிரெண்டு மணி நேரம் கழிச்சு அவர் கீழே குதிச்சா அது அமெரிக்கா!!!

அப்புறம் என்ன, முகத்துல சந்தனத்தை பூசிட்டு எல்லா வில்லன்களையும் கொன்று விட்டு நயந்தாராவை அழைச்சுட்டு அதே ஸ்டைலில் இருவரும் இந்தியாவில் லேண்டாகிறார்கள்.

டிஸ்கி 1: sms ல வந்ததை கொஞ்சம் உப்பு, புளி,காரம் போட்டு கலந்திருக்கிறேன்..

டிஸ்கி 2: sms ல வந்தது ஒன் லைன் ஸ்டோரி தான். ஆனா திரைக்கதை எழுதியது நானு(ஹைய்... இப்ப நானும் சினிமால இருக்கேன்) அதனால என்னை கேட்காம விஜயோ அல்லது வேறு எந்த நடிகராவது இதை பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்..

Labels: