படிச்ச முட்டாள், பயந்த புத்திசாலி

Thursday, May 14, 2009

பதிவர்களுக்கு பதிவர்களே ஆப்பு !!

நாடறிந்த நகைச்சுவை எழுத்தாளர் சமிபத்தில் நான் கடவுள் படத்தை பற்றி சிலாகித்து எழுதி அதை மலையாளம், லத்தின்,ஃபிரன்ச், ரஷ்ய மொழிகளில் மொழிபெயர்த்து அதை அந்தந்த நாடுகளில் கொண்டாடியது அறிந்ததே. இப்பொழுது அவருடைய நண்பர் ஒருவர் அந்த படத்தை பார்த்து ஒரு கருத்து சொல்ல, இப்பொழுது அந்த படத்தை போய் நான் எப்படி ரசித்தேன்னு ஃபீல் பண்ணீட்டு இருக்காராம்.

இதற்கு முன் இவர் எழுதிய கொரிய படத்தை பற்றி இவர் எழுதிய விமர்சணத்தில் இருந்த தவறுகளை சுட்டி காட்டிய போது அது எல்லாம் எழுத்துப் பிழை அதை திருத்துவது ப்ரூஃப் ரீடரின் வேலைன்னு சொன்னவர், இப்பொழுது நான் கடவுள் படத்தையே நான் சிலாகித்து எழுதி இருக்க கூடாதுனு சொல்லுகிறார். பேசாமல் இனி இவர் எழுதும் கதை,கட்டுரை, விமர்சணங்களுக்கு கீழே, All my reviews and opinions are subject to change. Conditions Applyன்னு போட்டுடலாம்.

வாங்குன காசுக்கு இன்னும் திமுகாவிற்காக கூவும் பதிவர்களே. உங்கள் தலைவருக்கு நீங்க தான் ஓய்வு கொடுக்க மாட்டேங்குறீங்க, போனா போகட்டும் இனி நாங்க கொடுக்குறோம். சனிக்கிழமைக்கு பிறகு கொஞ்சமும், மூனு நாலு மாசத்திற்கு பிறகு நிறையவும் ஓய்வு கிடைக்கும். அப்புறம் என்ன பாசக் கிளிகள் பார்ட்- 2 வரும் பார்த்து மகிழுங்கள்.

நம்முடைய பதிவர்கள் ஜனரஞ்சக பத்திரிக்கைகளில் எழுத ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சியே. கதைகள் பத்திரிக்கையில் வந்த ஓரிரு நாளில் சிலர் அக்கதையை டைப் செய்தும், ஸ்கேன் செய்தும் போடுவது கண்டிக்கதக்கது. பத்திரிக்கை தரப்பில் இருந்து அவர்கள் இதற்காக வழக்கு கூட தொடரலாம். இச்செயல் இனியும் நீடித்தால் பதிவர்கள் எழுவதை பத்திரிக்கைகள் வெளியிட நிறைவே யோசிப்பார்கள். ஏன் நீங்கள் எழுதிய புத்தகங்களையும் அப்படியே ஸ்கேன் செய்து போட வேண்டியது தானே, அதுக்கு மட்டும் ஆன்லைனில் வாங்க இங்கே அமுக்கவும் அங்கே அமுக்கவும்னு விளம்பரம் எதுக்கு?

Labels:

47 Comments:

  • At May 14, 2009 at 2:50 PM , Blogger Suresh Kumar said...

    எதுக்கு இந்த kolai வெறி

     

  • At May 14, 2009 at 2:52 PM , Anonymous Anonymous said...

    சக பதிவர்கள் மீதான பொறாமையை வெளிபடையாக கொட்டிவிட்டிர்கள் பிளீச்சிங். இந்த பதிவை தூக்கிவிடுங்கள். இல்லாவிட்டால் உங்களை பற்றி எல்லோருமே தவறாக நினைப்பார்கள்.

    அங்கீகாரம் கிடைக்க பெற்றவர்கள் கொஞ்சம் ஆடவே செய்வார்கள். அவர்களை போல நாமும் முன்னேற நினைக்கணுமே தவிர இதுபோல வெளிப்படையாக வயிறு எரியகூடாது.

     

  • At May 14, 2009 at 2:55 PM , Anonymous Anonymous said...

    //ஏன் நீங்கள் எழுதிய புத்தகங்களையும் அப்படியே ஸ்கேன் செய்து போட வேண்டியது தானே, அதுக்கு மட்டும் ஆன்லைனில் வாங்க இங்கே அமுக்கவும் அங்கே அமுக்கவும்னு விளம்பரம் எதுக்கு?//

    என்ன தான் அமுக்கினாலும் யாரும் புக்கை வாங்குவேதே இல்லையாம். அதுவும் விசயகாந்த் புத்தகம் சம்ம ப்ளாப்பாம்.

     

  • At May 14, 2009 at 2:55 PM , Blogger Bleachingpowder said...

    எப்படியும் கூடவே இருக்கிற ஆமாஞ்சாமிகள் வாயவே திறக்காது, அதான் சுரேஷ்.

     

  • At May 14, 2009 at 2:58 PM , Blogger Bleachingpowder said...

    //அங்கீகாரம் கிடைக்க பெற்றவர்கள் கொஞ்சம் ஆடவே செய்வார்கள்/

    தாரளமா ஆடட்டும் அனானி, அதில் எனக்கு எந்த பிரச்சணை இல்லை.

    //அவர்களை போல நாமும் முன்னேற நினைக்கணுமே தவிர இதுபோல வெளிப்படையாக வயிறு எரியகூடாது//

    என்னுடைய எல்லை எது என்பது நன்றாகவே தெரியும் அனானி. தெரியாத, வராத விசியங்களை நான் முயற்சிப்பது கூட இல்லை.

     

  • At May 14, 2009 at 3:02 PM , Blogger Bleachingpowder said...

    //சக பதிவர்கள் மீதான பொறாமையை வெளிபடையாக கொட்டிவிட்டிர்கள் பிளீச்சிங். இந்த பதிவை தூக்கிவிடுங்கள். இல்லாவிட்டால் உங்களை பற்றி எல்லோருமே தவறாக நினைப்பார்கள்.//

    அடிக்கடி நம்ம கடைக்கு வந்து போறவர் எழுதின மாதிரி தான் இருக்கு, பின்ன ஏன் அனானிய வந்தீங்கன்னு தான் தெரியல :(

     

  • At May 14, 2009 at 3:04 PM , Anonymous Anonymous said...

    Bleachingpowder

    Are you a masochist?

    I think you are suffered from pshychyatritic problem. You want that others will zoom their limelights always to you.

     

  • At May 14, 2009 at 3:08 PM , Anonymous Anonymous said...

    //அடிக்கடி நம்ம கடைக்கு வந்து போறவர் எழுதின மாதிரி தான் இருக்கு, பின்ன ஏன் அனானிய வந்தீங்கன்னு தான் தெரியல :(//

    உண்மைதான். உண்மையை பேசவும் முகமூடி போட வைத்துவிட்டீர்கள். நட்புவேறு, கருத்து வேறு என்ற பாகுபாடு உங்களிடம் இருக்குமா தெரியவில்லை.

     

  • At May 14, 2009 at 3:12 PM , Blogger Bleachingpowder said...

    //Anonymous said...
    Bleachingpowder

    Are you a masochist?

    I think you are suffered from pshychyatritic problem. You want that others will zoom their limelights always to you.
    ///

    Hey Anony,
    what made you to think me like that and why don't you come with your own id and shit ur comments here?

     

  • At May 14, 2009 at 3:15 PM , Blogger Bleachingpowder said...

    //உண்மைதான். உண்மையை பேசவும் முகமூடி போட வைத்துவிட்டீர்கள். நட்புவேறு, கருத்து வேறு என்ற பாகுபாடு உங்களிடம் இருக்குமா தெரியவில்லை.
    //

    என்னுடைய கருத்துகள் உங்களுடன் ஒத்துப் போக வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை, அதனால் முகமுடி தேவையில்லை

     

  • At May 14, 2009 at 3:50 PM , Blogger Rajaraman said...

    ஒரு வாசகம் என்றாலும் திருவாசகம் போல் என்பார்களே அது மாதிரி நச்சென்று சில கேனைகளை கிழித்திருக்கிறீர்கள். போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும். தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்.

     

  • At May 14, 2009 at 4:20 PM , Blogger Unknown said...

    // இப்பொழுது நான் கடவுள் படத்தையே நான் சிலாகித்து எழுதி இருக்க கூடாதுனு சொல்லுகிறார். பேசாமல் இனி இவர் எழுதும் கதை,கட்டுரை, விமர்சணங்களுக்கு கீழே, All my reviews and opinions are subject to change. Conditions Applyன்னு போட்டுடலாம்.//

    சூப்பர் அண்ணே!அவரு திருந்தினா சரி.

     

  • At May 14, 2009 at 4:37 PM , Blogger கார்க்கிபவா said...

    அபப்டியா சொல்லியிருக்காரு சாரு??? இதோ படிச்சிட்டு வரேன்..

     

  • At May 14, 2009 at 4:45 PM , Blogger ரவி said...

    பின்னூட்டங்களின் உமது நோக்கம் அறிந்தோம். நன்றி.

     

  • At May 14, 2009 at 4:56 PM , Blogger Bleachingpowder said...

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ராஜாராமன்.

    //கே.ரவிஷங்கர் said...
    சூப்பர் அண்ணே!அவரு திருந்தினா சரி.//

    பின்நவினதுவ இலக்கியவாதிகள் எல்லாம் இப்படி தான் இருப்பாங்க போல :) வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ரவிஷங்கர்

    //கார்க்கி said...
    அபப்டியா சொல்லியிருக்காரு சாரு??? இதோ படிச்சிட்டு வரேன்..//

    வாங்க தல, சொல்ல முடியாது, இனி தீடீர்ன்னு வந்து ராஜாவை புகழ்ந்தாலும் புகழுவார்.

     

  • At May 14, 2009 at 4:57 PM , Blogger Bleachingpowder said...

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி செந்தழல் ரவி

     

  • At May 14, 2009 at 5:23 PM , Blogger Athisha said...

    அண்ணா நீங்க இம்புட்டு நல்லவரா ஊருக்குள்ள வேற மாதிரி ச்சொன்னாய்ங்க

     

  • At May 14, 2009 at 5:31 PM , Blogger தீப்பெட்டி said...

    நிறைய அனானி பின்னுட்டங்கள் இருப்பதால் இதையும் அனானி பின்னுட்டமா எடுத்துகோங்க...

     

  • At May 14, 2009 at 5:49 PM , Blogger வால்பையன் said...

    நான் பின்னூட்டம் போடமாட்டேன்!
    அப்புறம் எல்லாரும் சேர்ந்து அடிக்கிறாங்கன்னு அந்த எழுத்தாளர் எழுதுவாரு!

     

  • At May 14, 2009 at 7:37 PM , Blogger Bleachingpowder said...

    //அதிஷா said...
    அண்ணா நீங்க இம்புட்டு நல்லவரா ஊருக்குள்ள வேற மாதிரி ச்சொன்னாய்ங்க//

    சும்மா நேராவே சொல்லுங்க அதிஷா,பின்னூட்டங்கள் இங்கே மட்டுறுத்தப்பபடுவதில்லை.

    ஊருல என்ன சொன்னாலும் சரிங்க,எனக்கு தப்புன்னு தோனுச்சுனா சொல்லீடுவேன், நிறைய பேருக்கு சொல்லனும்னு இருக்கும் ஆனா சொல்லமாட்டாங்க, ஏன்னா உங்க பழக்கம் அப்படி.

    //தீப்பெட்டி said...
    நிறைய அனானி பின்னுட்டங்கள் இருப்பதால் இதையும் அனானி பின்னுட்டமா எடுத்துகோங்க...//

    அதெப்படி தீப்பெட்டி, சொந்த பேரோட வந்திருக்கீங்க, அதனால வருகைக்கு ஷபெஷல் நன்றி


    //வால்பையன் said...
    நான் பின்னூட்டம் போடமாட்டேன்!
    அப்புறம் எல்லாரும் சேர்ந்து அடிக்கிறாங்கன்னு அந்த எழுத்தாளர் எழுதுவாரு!//

    வாங்க வாலு ஏன் லேட்டு? ஆமாங்க கொலைவெறி தாக்குதல்னு வேற சொல்லுவாரு. அப்புறம் படிச்சீங்களா, யாராச்சு சர்க்குலேஷனை எப்படி கூட்டுவதுன்னு சொன்னா அவங்களை மல்லாக்க படுக்க வச்சு கொ*** மிதிக்கனும்னு தோனுமாம் அவருக்கு

     

  • At May 14, 2009 at 7:47 PM , Blogger வால்பையன் said...

    //யாராச்சு சர்க்குலேஷனை எப்படி கூட்டுவதுன்னு சொன்னா அவங்களை மல்லாக்க படுக்க வச்சு கொ*** மிதிக்கனும்னு தோனுமாம் அவருக்கு//

    எனக்கு கூடதான் வலையில,
    தண்ணியடிக்க காசில்லை, வாடகை கொடுக்க காசில்லை, செருப்பு வாங்க காசில்லைன்னு எழுதுறவங்க கொ***யிலயே முதிக்கனும்னு தோணுது!
    அதுக்காக ஒருத்தர் ஹைடெக் பிச்சை எடுக்குற ஜனநாயக உரிமைய கெடுக்கலாமா?

     

  • At May 14, 2009 at 8:30 PM , Blogger Bleachingpowder said...

    //காசில்லைன்னு எழுதுறவங்க கொ***யிலயே முதிக்கனும்னு தோணுது!
    அதுக்காக ஒருத்தர் ஹைடெக் பிச்சை எடுக்குற ஜனநாயக உரிமைய கெடுக்கலாமா?//

    :)))) தல இன்னோரு விசியம் தெரியுமா அவர் இப்ப ஞானியாக முயற்சி செய்து வருகிறாராம். அவர் சொன்ன கதையை படிச்சீங்களா? நம்ம எச்சி துப்புறதுனால அவர் அடிக்கடி குளிச்சு சுத்தமாகுறாராம்

     

  • At May 14, 2009 at 8:33 PM , Blogger வால்பையன் said...

    //நம்ம எச்சி துப்புறதுனால அவர் அடிக்கடி குளிச்சு சுத்தமாகுறாராம் /

    சும்மாவே நாறித்தான் கிடக்கு!
    நாம எச்சி வேற துப்புனுமா அதுல!

    லூசுபயபுள்ள சட்டைய கிழிச்சிட்டு திரிய போவுது!

     

  • At May 14, 2009 at 8:40 PM , Blogger கிரி said...

    //இந்த பதிவை தூக்கிவிடுங்கள். இல்லாவிட்டால் உங்களை பற்றி எல்லோருமே தவறாக நினைப்பார்கள்.//

    தொடர்ந்து படிக்கறேன்னு சொல்லிட்டு அருணை இப்படி சொல்லிட்டீங்க ... ஏற்கனவே பல பேர் அருண் மேல் டெர்ரராக இருப்பதாக கேள்வி ;-)


    //தல இன்னோரு விசியம் தெரியுமா அவர் இப்ப ஞானியாக முயற்சி செய்து வருகிறாராம்//

    எந்த ஞானி! ஓ! ஞானியா! அல்லது நிஜ ஞானியா!

     

  • At May 14, 2009 at 8:45 PM , Blogger மணிகண்டன் said...

    வால் / ப்ளீச்சிங் - இந்த மாதிரி பதிவு / கமெண்ட் எழுதிட்டு ஒரு மூணு நிமிஷம் பப்ளிஷ் பண்ணாம வச்சி படிச்சு பாருங்க. நீங்களே தூக்கிடுவீங்க.

     

  • At May 14, 2009 at 8:51 PM , Blogger Bleachingpowder said...

    //கிரி has left a new comment on எந்த ஞானி! ஓ! ஞானியா! அல்லது நிஜ ஞானியா! //

    வாங்க கிரி, அட நிஜ ஞானிங்க, உடனே வாயில இருந்து லிங்கம் எடுபாரா கேட்காதீங்க, அதெல்லாம் தெரியாது :))

     

  • At May 14, 2009 at 8:52 PM , Blogger வால்பையன் said...

    //வால் / ப்ளீச்சிங் - இந்த மாதிரி பதிவு / கமெண்ட் எழுதிட்டு ஒரு மூணு நிமிஷம் பப்ளிஷ் பண்ணாம வச்சி படிச்சு பாருங்க. நீங்களே தூக்கிடுவீங்க.//

    எங்களுக்கு என்ன ஜென்பபகையா?
    தொடர்ச்சியா தாக்க!

    அங்கே எழுதியதற்கு எதிர்வினை தானே இது!

    எங்க, அங்க போய் சொல்லிபாருங்க!
    எல்லா பதிவுமே மொக்கை தான்!
    எழுதிட்டு படிச்சி பார்த்து போஸ்ட் பண்ணுங்கன்னு!

     

  • At May 14, 2009 at 9:00 PM , Blogger Bleachingpowder said...

    //மணிகண்டன் said...
    வால் / ப்ளீச்சிங் - இந்த மாதிரி பதிவு / கமெண்ட் எழுதிட்டு ஒரு மூணு நிமிஷம் பப்ளிஷ் பண்ணாம வச்சி படிச்சு பாருங்க. நீங்களே தூக்கிடுவீங்க.//

    வாங்க மணிகண்டன், நான் இந்த பதிவையே நேத்திலிருந்து பப்ளிஷ் செய்யாம வச்சிருந்தேன். அது போக பதிவர்கள் எழுதும் ஒரு பக்க சிறுகதையின் தரத்தை பற்றியும் எழுதியிருந்தேன், இன்று மேலும் சில பதிவர்கள் எழுதிய கதை விகடனில் வந்திருப்பதையறிந்து படிக்காமல் பொத்தாம் பொதுவாக எழுத கூடாதுன்னு, அந்த பகுதியை தூக்கிட்டேன்.

    ஒரு வார இதழில் வெளிவந்த கதையை அதுவும் அவர் இனையத்தில் அதை பார்த்து படிக்க காசு என்னும் பட்சத்தில் அதை தங்களுடைய தளத்தில் வெளியிடுவது தவறு. இதை சுட்டி காட்டியதில் என்ன தவறு இருக்கிறது.

    இது தவறு தான்னு எல்லாருக்கும் தெரியும், ஆனா யாரும் வாய தொறக்க்க மாட்டாங்க. அதுக்காக நானும் சும்மா இருக்கனுமா?

     

  • At May 14, 2009 at 9:13 PM , Blogger மணிகண்டன் said...

    பத்திரிகை விற்பனை பாதிக்கப்படும்ன்னு சொல்றீங்களா ? இல்லாட்டி காப்பி ரைட் பத்தி சொல்றீங்களா ?

     

  • At May 14, 2009 at 9:16 PM , Blogger Bleachingpowder said...

    //எங்க, அங்க போய் சொல்லிபாருங்க!
    எல்லா பதிவுமே மொக்கை தான்!
    எழுதிட்டு படிச்சி பார்த்து போஸ்ட் பண்ணுங்கன்னு//

    கிழிச்சு தொங்கவுட்டுவாரு, மூட்டாக் **** கொ**** மிதிப்பேன்னு

     

  • At May 14, 2009 at 9:19 PM , Blogger மணிகண்டன் said...

    நான் சொன்னது தப்பு தான். விட்டுடுங்க.

     

  • At May 14, 2009 at 9:22 PM , Blogger Bleachingpowder said...

    //மணிகண்டன் said...
    பத்திரிகை விற்பனை பாதிக்கப்படும்ன்னு சொல்றீங்களா ? இல்லாட்டி காப்பி ரைட் பத்தி சொல்றீங்களா ?
    //

    பத்திரிக்கை விற்பனை பாதிக்கப்படும்னு தான் சொல்றேன் மணிகண்டன். எனக்கு தெரிஞ்சு இனையத்தை உபயோகிப்பவர்கள் நிறைய பேர் காசு கொடுத்து குமுதம், விகடன் வாங்வதை நிறுத்தி விட்டார்கள்.

    ரஜினி, கமல் படங்கள் வெளியான அடுத்த வாரம் வார இதழ்களின் சர்க்குலேஷன் ஜாஸ்தியாக இருக்கும், காரணம் ரசிகர்கள் இந்த பத்திரிக்கைகளின் விமர்சணங்களை படிக்க ஆவலாக இருப்பார்கள். அப்படி இருக்கையில் விகடனில் சிவாஜி விமர்சணம் வெளியான அன்றே அதை ஸ்கேன் செய்தோ டைப் செய்தோ rajinifans.com, onlysuperstar.comஇல் வெளியிட்டால் அதனால் பத்திரிக்கைகளுக்கு எவ்வளவு நஷ்டம்?

     

  • At May 14, 2009 at 9:23 PM , Blogger Bleachingpowder said...

    //மணிகண்டன் said...
    நான் சொன்னது தப்பு தான். விட்டுடுங்க.//

    :))))))))) சாரி மணிகண்டன், கடுப்பாயிட்டீங்களா

     

  • At May 14, 2009 at 9:25 PM , Blogger கிரி said...

    //மணிகண்டன் said...

    வால் / ப்ளீச்சிங் - இந்த மாதிரி பதிவு / கமெண்ட் எழுதிட்டு ஒரு மூணு நிமிஷம் பப்ளிஷ் பண்ணாம வச்சி படிச்சு பாருங்க. நீங்களே தூக்கிடுவீங்க.//

    :-)))))))))

     

  • At May 14, 2009 at 9:28 PM , Blogger நிகழ்காலத்தில்... said...

    \\கதைகள் பத்திரிக்கையில் வந்த ஓரிரு நாளில் சிலர் அக்கதையை டைப் செய்தும், ஸ்கேன் செய்தும் போடுவது கண்டிக்கதக்கது. \\

    மிகச் சரி, தேவையானால் தகவல் கொடுத்து லிங்க் கொடுக்கலாம்.
    வெளியிடும்போது ஏற்கனவே வெளியான கதை,கவிதை அடங்கிய (வார)புத்தக விற்பனை குறையும்.

    விளைவு அவர்கள், பதிவர்கள் படைப்பை பிரசுரத்திற்க்கு எடுக்காவிட்டால் இழப்பு பதிவருக்கு அன்றி வார இதழுக்கு அல்ல

    பதிவர் நலன் கருதி வெளியிட்ட கருத்தே இது. எந்த பொறாமையிலும்
    இல்லை என கருதுகிறேன்.

    \\மணிகண்டன் said...

    நான் சொன்னது தப்பு தான். விட்டுடுங்க.\\

    அப்பாடா இப்பவாவது புரிஞ்சதே

     

  • At May 14, 2009 at 9:37 PM , Blogger Bleachingpowder said...

    //அறிவே தெய்வம் said,
    மிகச் சரி, தேவையானால் தகவல் கொடுத்து லிங்க் கொடுக்கலாம்.
    வெளியிடும்போது ஏற்கனவே வெளியான கதை,கவிதை அடங்கிய (வார)புத்தக விற்பனை குறையும்.

    விளைவு அவர்கள், பதிவர்கள் படைப்பை பிரசுரத்திற்க்கு எடுக்காவிட்டால் இழப்பு பதிவருக்கு அன்றி வார இதழுக்கு அல்ல

    பதிவர் நலன் கருதி வெளியிட்ட கருத்தே இது. எந்த பொறாமையிலும்
    இல்லை என கருதுகிறேன்.//

    தெய்வமே, மூதல் வருகைக்கும்,கருத்திற்கும்,ஆதரவிற்கும் மிக்க நன்றி. என்னுடைய இந்த பதிவின் நோக்கத்தை உங்களை போன்ற ஒரு சிலரே புரிந்துள்ளனர். இன்னும் சில் பேருக்கு இது தவறு என தெரிந்தாலும் நட்பு கெட்டுவிடும் என்று மவுனமாகவே இருக்கிறார்கள்.

     

  • At May 15, 2009 at 7:57 AM , Blogger ஹரன்பிரசன்னா said...

    //பேசாமல் இனி இவர் எழுதும் கதை,கட்டுரை, விமர்சணங்களுக்கு கீழே, All my reviews and opinions are subject to change. Conditions Applyன்னு போட்டுடலாம்.
    //

    :-)

     

  • At May 15, 2009 at 2:53 PM , Anonymous Anonymous said...

    இப்பத்தான் முதலில் உங்க பக்கம் வந்தேன், போன பதிவில் சாருவை வாரினது ரொம்ப நல்ல இருக்கு. உங்க வெளிப்படையான விமர்சனம் நல்ல இருக்கு. நான் கூட இந்த பதிவர்களை பற்றி ஒரு பதிவு போட்டுருக்கேன். அதுக்கே ரொம்ப காட்டமாக விமர்சனம் வந்தது. இதுக்கெல்லாம் யோசிக்காம, என்ன தோணுதோ அதை எழுதுங்க. வாழத்துக்கள்

     

  • At May 15, 2009 at 3:07 PM , Blogger Bleachingpowder said...

    //mayil said...
    நான் கூட இந்த பதிவர்களை பற்றி ஒரு பதிவு போட்டுருக்கேன். அதுக்கே ரொம்ப காட்டமாக விமர்சனம் வந்தது. இதுக்கெல்லாம் யோசிக்காம, என்ன தோணுதோ அதை எழுதுங்க. வாழத்துக்கள்
    //

    வாங்க mayil, உங்களுடைய முதல் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும், ஊக்கத்திற்கும் மிக்க நன்றி. அடிக்கடி வாங்க

     

  • At May 15, 2009 at 7:43 PM , Blogger Heam said...

    Hi BP .. i just happened to visit ur blog .. ur writing were really nice and commanding . please enable following option for ur blog so it would be easy to get updated .. Sorry for the english font .. aani pidingura idathula tamil font illai and also am new to the tamil blogging world

     

  • At May 16, 2009 at 1:47 PM , Blogger ♫சோம்பேறி♫ said...

    சாரு விமர்சனத்தில் செய்த சில சின்ன நுனுக்கமான தப்புகளுக்காக அவரைக் கோமாளி என்று சொல்லியிருப்பது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்ல?

    /*All my reviews and opinions are subject to change. Conditions Applyன்னு போட்டுடலாம்.*/

    இது சாருவுக்கு மட்டுமல்ல ப்ளீச் எல்லாருக்குமே, ஏன் எனக்கும் உங்களுக்குமே கூட பொருந்தும். (சாருவைப் பற்றிய உங்கள் முன் பின் முரனான கருத்துகளை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்)

    பத்திரிக்கைகளில் வரும் பதிவர்களின் மூன்று பக்க படைப்பை படிப்பதற்காகவே கோடானு கோடி இணைய வாசிப்பாளர்கள் அந்த பத்திரிக்கையை வாங்குவதில்லை. அந்த பக்கங்களை இணையத்தில் வாசித்துவிட்டோம் என்பதற்காக அதன் வழமையான வாசகர்கள் பத்திரிக்கையை வாங்காமல் நிராகரிக்கப் போவதும் இல்லை.

    பல பதிவர்களின் படைப்பை தங்கள் எழுத்தாளர்கள் பெயர்களில் தங்கள் பத்திரிக்கைகளில் வெளியிட்ட சம்பவமும் நடந்திருக்கிறது. அதற்கான பழிவாங்கும் நடவடிக்கையாகக் கூட இதை எடுத்துக் கொள்ளலாம்:-)

    ஆனாலும் அவர்களுக்கு ethics இல்லா விட்டாலும் நமக்கு இருக்கிறது என்று தோன்றுவதால், குங்குமத்தில் வந்த என் படைப்பைப் பற்றிய இடுகையிலுள்ள புகைப்படங்களை நாளைக்கே:-) எடிட்டி விடுகிறேன்.

     

  • At May 17, 2009 at 9:53 AM , Blogger TBCD said...

    அந்த பிரபல பல்டியின் சுட்டி கிடைக்கும்மா..???

     

  • At May 21, 2009 at 3:50 PM , Blogger Bleachingpowder said...

    //Heam said...
    Hi BP .. i just happened to visit ur blog .. ur writing were really nice and commanding.//

    Thanks heam for your compliment and for your first visit as well :)

    //Please enable following option for ur blog so it would be easy to get updated//
    ??????? I dont see any option in comments. forget the paste?

     

  • At May 21, 2009 at 3:56 PM , Blogger Bleachingpowder said...

    //♫சோம்பேறி♫ said...
    சாரு விமர்சனத்தில் செய்த சில சின்ன நுனுக்கமான தப்புகளுக்காக அவரைக் கோமாளி என்று சொல்லியிருப்பது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்ல?//

    கிம் கி டுக்கை விடுங்கள், அவர் பக்கம் பக்கமா எழுதின நான் கடவுள் படத்தை பற்றி சிலாகித்து எழுதியதையே இப்போ தவறுன்னு சொல்வது நுனுக்கமான தவறா? இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்ல :)

    //பத்திரிக்கைகளில் வரும் பதிவர்களின் மூன்று பக்க படைப்பை படிப்பதற்காகவே கோடானு கோடி இணைய வாசிப்பாளர்கள் அந்த பத்திரிக்கையை வாங்குவதில்லை. அந்த பக்கங்களை இணையத்தில் வாசித்துவிட்டோம் என்பதற்காக அதன் வழமையான வாசகர்கள் பத்திரிக்கையை வாங்காமல் நிராகரிக்கப் போவதும் இல்லை.

    பல பதிவர்களின் படைப்பை தங்கள் எழுத்தாளர்கள் பெயர்களில் தங்கள் பத்திரிக்கைகளில் வெளியிட்ட சம்பவமும் நடந்திருக்கிறது. அதற்கான பழிவாங்கும் நடவடிக்கையாகக் கூட இதை எடுத்துக் கொள்ளலாம்:-)

    //ஆனாலும் அவர்களுக்கு ethics இல்லா விட்டாலும் நமக்கு இருக்கிறது என்று தோன்றுவதால், குங்குமத்தில் வந்த என் படைப்பைப் பற்றிய இடுகையிலுள்ள புகைப்படங்களை நாளைக்கே:-) எடிட்டி விடுகிறேன்.
    //

    அது என்ன நாளைக்கு? ஓ..உங்க பேரை மறந்துட்டேன் :)))

    வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சோம்பேறி.

     

  • At May 21, 2009 at 3:58 PM , Blogger Bleachingpowder said...

    //TBCD said...
    அந்த பிரபல பல்டியின் சுட்டி கிடைக்கும்மா..???
    //

    வாங்க சார், சுட்டி என்ன பெரிய சுட்டி, கேரளாவுல போய் அவர் பேரை சொல்லி பாருங்க, அப்புறம் உங்களுக்கு கிடைக்கிற மரியாதையே தனி :)))

     

  • At February 24, 2013 at 10:46 PM , Anonymous Anonymous said...

    My complete lack of energy and am known for some people diagnosed with autoimmune disease that can interact with the pain?
    It can also be triggered by an erratic immune system attacks the sufferer's skin in case there are approximately 2 million people each year.

    My web site - lupusgone.com

     

  • At February 27, 2013 at 5:33 PM , Anonymous Anonymous said...

    Both of these blogs are higher-ranking at miserably inadequate of
    a Yeshiva case word. Team blogging membersPhotographerThese days, for new
    bloggers out In that location a few are listed at a lower place.
    For illustration, if you are mise en scene serve
    file so oft that I was in earnest considering walking through and through the tutorial ahead
    doing anything else, I accomplished the true extent of the parody that is intelligence 2007.



    My blog; click here
    Also see my website - click here

     

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home