படிச்ச முட்டாள், பயந்த புத்திசாலி

Monday, September 14, 2009

திருட்டு பயலே சுசி கனேசனுக்கு இந்த ஆப்பு பத்தாது

தொற எடுத்த படத்தை ஊர் உலகமே கிழிச்சு தொங்கவுட்ட போது பல்லை கடிச்சிட்டு இருந்தவரு, போன வாரம் ஞானி குமுதத்துல படம் ஊத்திக்கிச்சுன்னு எழுதின உடனே பொங்கி எழுந்து இந்த வார குமுதத்துல வாந்தி எடுத்து வச்சிருக்காரு. சக பத்திரிக்கையாளன் மேலே வருவதை பார்த்து வந்த பொறாமையில் எழுதியதாம். சமுக அக்கறையுடன், யாருக்கும் அஞ்சாமல் தன் மனதிற்க்கு நியாயமாக பட்டதை எழுதும் ஒரு மூத்த எழுத்தாளரை விமர்சிக்க குட்டை பாவாடைகளை காட்டி படம் பண்ணும் இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?

நான் கூட கந்தசாமி விமர்சணத்தை படிச்சுட்டு கொஞ்சம் ஓவராதான் போறாங்க நம்மாளுங்க நினைச்சேன், இப்ப இவங்க பண்ற கூத்தை பார்தால் இன்னும் பத்தாதோன்னு தோனுது. நடு நிலை பத்திரிக்கையாளர்கள் இந்த படத்தை பார்த்து அதில் ஒருவர் படம் தோல்வின்னு சொன்னா கூட இவர் படமெடுக்கிறதை நிறுத்திடுவாரம் (யாராச்சும் அதை சீக்கிரமா பண்ணி தொலைங்கப்பா).

அட நீங்க எடுத்த கருமத்தை பத்தி என்னமோ எழுதுங்க, என்னமோ கிறுக்குங்க அதுக்கு ஏன்யா மத்த நல்ல படங்களை குறை சொல்றீங்க. சுப்பிரமணியபுரம், பசங்க, நாடோடிகள் எல்லா நல்ல படமில்லையாம், ஞானி தான் இந்த படங்களை மிகை படுத்தி எழுதிட்டாராம். சுப்பிரமணியபுரம், ரவுடிகளை பற்றிய படமாம். பசங்க சிறுவர்களுக்குன்னு சொல்லி பெரியவங்களுக்கு அறிவுரை சொன்ன படமாம். அப்புறம் நாடோடிகள், ஓடி போறவங்களை சேர்த்து வைக்குற படமாம். காறி துப்புற மாதிரி ஒரு படத்தை எடுத்துட்டு, எதார்த்தமா குறைந்த செலவில் வந்த தரமான படங்களை பற்ற பேச வெட்கமாயில்லை?

கந்தசாமி ஓடும் தியேட்டரில் மக்களோடு மக்களாக உட்கார்ந்து படம் பாருங்க அப்ப தெரியும் மக்கள் கிட்ட உங்க மரியாதை என்னன்னு. அவனவன் கிழிக்குற கிழியுல படத்தில் சம்மந்த பட்ட எல்லாருடைய ஃபேமலியும் அங்கே டோட்டல் டேமேஜ் ஆயிட்டிருக்கு. மெக்சிக்கோவுல பிச்சுமணியை தெரியாதவங்க யாருமே கிடையாதாமாம்? தியேட்டர்ல எவனும் வாயில சிரிக்க மாட்டேங்குறான்.

குழந்தைகளுக்கான படமாம் கந்தசாமி. அடப்பாவிங்களா, குழந்தைகளுக்காக எடுக்க பட்ட காட்சின்னு இந்த படத்தில் ஏதாவது ஒன்றையாவது சொல்லுங்கள் பார்ப்போம். இந்த குப்பையை குழந்தைகளுடன் காண நாங்கள் தயாராயில்லை. வேண்டுமென்றால் படமெடுத்த நீங்களும் அதில் நடித்தவர்களும் உங்கள் குழந்தைகளுடன் பாருங்க, படம் பார்க்கும் போது உங்கள் குழந்தைகள் முமைத்கான் நாக்கில் மாட்டியிருப்பது இருப்பது என்ன? அதை ஏன் அடிக்கடி காமிக்கிறீங்கன்னு கேட்டா என்ன பதில் சொல்லனும்னு யோசிச்சுட்டு படத்தை போடுங்க.

ஜெண்டில்மேன், அந்நியன்,ரமணா படத்திற்கும் கந்தசாமிக்கும் எந்த சம்மந்தமும் இல்லையாம், சிவாஜி படம் கூட ஒரே நேரத்தில் ஷங்கரும் இவரும் யோசித்த கருத்தாம், சொல்றாரு திருட்டு பயலே சுசி.

கந்தசாமி தான் ரெண்டு வாரத்துல ஐம்பத்தைந்து கோடி சம்பாதிருச்சுல, பார்ப்போம் இனி எந்த தயாரிப்பாளர் இந்த மாதிரி பணத்தை அள்ளி கொடுத்து உங்களை படம் எடுக்க சொல்றாருன்னு. ஏன் தானுவையே போய் கேளுங்களேன், இன்னோரு ஐம்பது கோடி கொடுங்க இதே மாதிரி குழந்தைகளுக்காக இன்னோரு படம் எடுத்து தரேன்னு, சொல்ல முடியாது அவர் கொடுத்தாலும் கொடுப்பாரு.

Labels:

Friday, May 29, 2009

எதிர்வினைக்கு நீங்களே பதில் சொல்லீடுங்க சாரு

நீங்க எழுதின வன்முறையின் தோல்வி கட்டுரைக்கு வந்த எதிர்வினைகளுக்கு நீங்களே நேரா பதில் சொல்லீடுங்க சாரு. அத விட்டுட்டு என் சங்கத்து ஆள அடிச்சு பாருன்னு பச்ச புள்ளையை சபைக்கு அனுப்பாதீங்க. அது பாட்டுக்கு வந்து செம கடுப்புல இருக்கும் எங்களிடம் , "எங்க அண்ணன் பழம் வாங்கிட்டு வர சொன்னாருன்னு" அப்பாவியா கேட்டுட்டு வாங்கி கட்டீட்டு இருக்கு.

நீங்க நிஜமாவே போடி மஸ்தான் தான் இல்லைன்னா, பிராபகரன் எங்க மாமா, அவரு மாவீரரு,ஹீரோ,ராஜேந்திரச்சோழனை மிஞ்சியவருன்னு சொல்லி சின்ன வயசுல இருந்தே கையில தீபாவளி துப்பாக்கியை வச்சுகிட்டு பிராபகரண் - ஜெயவர்தனே விளையாட்டு விளையாடினவங்களை கூட உங்க வழிக்கு வர வச்சிட்டீங்களே. ரெண்டு வாரம் முன்பு கூட இங்க யாருக்கும் தெரியலை வன்முறையினால் தீர்வு கிடைக்காதுன்னு. இப்படி தீடீர்னு சமிபகால வரலாற்றை புரட்டி பார்க்கும் போது தான் தெரிஞ்சுதாம்.

அப்புறம் உங்க பேர போட்டு எழுதினா முன்னூறு ஹிட்ஸ் ஜாஸ்தி கிடைக்குமாம், அத வச்சுட்டு நாக்கு கூட வழிக்க முடியாது. இந்த கருமத்துக்காக தான் அந்த எழவ நான் என் தளத்திலே போடல. அஞ்சு லட்சம் ஹிட்ஸ், பத்து லட்சம் ஹிட்ஸ் வாங்குனவங்க எல்லாம் என்ன சுஜாதா ஆயிட்டாங்களா இல்ல போயஸ் கார்டன்ல நாலு வீடு வாங்கிட்டாங்களா.

மொக்க பதிவர்கள் வழக்கம் போல உங்க வேலைய பாருங்க, நான் இப்படி தான் தனியா கத்திட்டு இருப்பேன். இங்க ஒருத்தன் ஜெய்ச்சுட்டே இருக்கிற வரைக்கும் தான் கூட இருப்பாங்க தோத்தா போயிட்டே இருப்பாங்க.

Labels:

Thursday, May 21, 2009

ப்ளிச்சிங் பவுடரும் நாற்பது திருடர்களும்

கேள்வி: அனுமதி வாங்கிக் கொண்டு தான் ஸ்கேன் செய்து போட்டாராமே?

பதில்: அந்த பதிவின் நோக்கமே அப்படி செய்வது Unethicalன்னு புரிய வைக்க தான். அதை சொன்னா காப்பிரைட்ஸ் கரைச்சு குடிச்ச கபோதிகளுக்கு(Boomarang) புரிய மாட்டேங்குது. அச்சில் வந்த அன்றே எல்லா பதிவர்களும் தங்களுடைய படைப்பை இனையதளத்தில் இலவசமாக பார்க்குமாறு வெளியிட்டால், அக்கதையை பிரசுகரித்த பத்திரிக்கைகளுக்கு கோபம் வராதா? மயிரே போச்சு, யாரோ எதையோ எழுதட்டும், அதை எந்த கபோதி வேண்டுமானாலும் ஸ்கேன் செய்து போடட்டும். ஒருவர் முதுகை ஒருவர் நக்கி கொண்டிருக்கும் இவர்களுக்கு என்ன சொன்னாலும் மண்டையில் ஏறாது.

கேள்வி: தனிமனித தாக்குதல் சரியா?
பதில்:டயனோசர் எருமை சண்டை, மம்மி ரிட்டர்ன்ஸ், கண்ட கருமாந்திர கபோதிகள் சரின்னா இதுவும் சரி.

கேள்வி:தமிழ்மண பதிவர்களின் ஒற்றுமை எப்படி இருக்கிறது?
பதில்: பரிசல்,கார்க்கி போன்றவர்கள், "இன்றைக்கு வெள்ளிக்கிழமை"ன்னு பதிவு போட்டாலும், அதற்கும் "ரிப்பீட்டு","உபயோகமான தகவலுக்கு நன்றி","மீ த பர்ஸ்ட்", "மாஸ்டர் பீஸ்","அவ்வ்வ்வ்"னு மறக்காமல் பின்னுட்டமிடுபவர்கள் புது பதிவர்களை கண்டு கொள்வதே இல்லை.

கேள்வி:பிரபாகரண் பற்றிய செய்தி, கருணாநிதியை எட்டியவுடன் அவருடைய ரியாக்ஷன் என்னவாக இருந்திருக்கும்?
பதில்:அப்பாடா.... ஜஸ்ட் எஸ்கேப்

கேள்வி: வைகோ?
பதில்: ஐயகோ !!!

கேள்வி: தமிழ்நாட்டில் விலைவாசி எந்தளவில் உள்ளது?
பதில்: ரொம்ப சீப், ஒரு வோட்டு ஐந்நூறு ருபாய் தான்.

கேள்வி: காங்கிரஸ் திமுகாவிற்கு எந்த துறையை ஒதுக்க வேண்டும்.
பதில்: எந்த துறையை கொடுத்தாலும் அவர்கள் ஒதுக்குவார்கள்.

கேள்வி:சாருவும் நாற்பது கோமாளிகளும் தலைப்பு எப்படி?
பதில்:சாருவும் நாற்பது திருடர்களும் வைத்திருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்.

Labels:

Tuesday, May 19, 2009

பதிவர்களே போய் மகிந்தாவின் மூத்திரத்தை குடியுங்கள்

ஒரு இனமே அழிந்து விட்ட நிலையில், டெல்லியில் மகன்,மகள்,பேரனுக்கு முடி சூட்டும் வரை பிரபாகரன் உயிரோடு இருந்தால் போதும்னு இனையத்தில் நூறு ருபாய்க்கு பதிவு போடும் பதிவர்கள் போய் மகிந்தாவின் மூத்திரத்தை குடிகட்டும் !


மற்றவர்கள் சற்று அமைதியாக இருங்கள். உங்கள் எழுத்துப்புலமை, இரங்கல் கவிதை,புலனாய்வு திறமையை காட்டுவதற்கு இது நேரமும் அல்ல. அதை படிக்கும் நிலையில் எந்த ஈழத்தமிழனும் இல்லை.



நாய் சண்டை போடும் மனநிலையில் நான் இல்லாத காரணத்தினால், பின்னூட்டம் இடுவதை தற்காலிகமாக நீக்கியுள்ளேன்

Labels:

Thursday, May 14, 2009

பதிவர்களுக்கு பதிவர்களே ஆப்பு !!

நாடறிந்த நகைச்சுவை எழுத்தாளர் சமிபத்தில் நான் கடவுள் படத்தை பற்றி சிலாகித்து எழுதி அதை மலையாளம், லத்தின்,ஃபிரன்ச், ரஷ்ய மொழிகளில் மொழிபெயர்த்து அதை அந்தந்த நாடுகளில் கொண்டாடியது அறிந்ததே. இப்பொழுது அவருடைய நண்பர் ஒருவர் அந்த படத்தை பார்த்து ஒரு கருத்து சொல்ல, இப்பொழுது அந்த படத்தை போய் நான் எப்படி ரசித்தேன்னு ஃபீல் பண்ணீட்டு இருக்காராம்.

இதற்கு முன் இவர் எழுதிய கொரிய படத்தை பற்றி இவர் எழுதிய விமர்சணத்தில் இருந்த தவறுகளை சுட்டி காட்டிய போது அது எல்லாம் எழுத்துப் பிழை அதை திருத்துவது ப்ரூஃப் ரீடரின் வேலைன்னு சொன்னவர், இப்பொழுது நான் கடவுள் படத்தையே நான் சிலாகித்து எழுதி இருக்க கூடாதுனு சொல்லுகிறார். பேசாமல் இனி இவர் எழுதும் கதை,கட்டுரை, விமர்சணங்களுக்கு கீழே, All my reviews and opinions are subject to change. Conditions Applyன்னு போட்டுடலாம்.

வாங்குன காசுக்கு இன்னும் திமுகாவிற்காக கூவும் பதிவர்களே. உங்கள் தலைவருக்கு நீங்க தான் ஓய்வு கொடுக்க மாட்டேங்குறீங்க, போனா போகட்டும் இனி நாங்க கொடுக்குறோம். சனிக்கிழமைக்கு பிறகு கொஞ்சமும், மூனு நாலு மாசத்திற்கு பிறகு நிறையவும் ஓய்வு கிடைக்கும். அப்புறம் என்ன பாசக் கிளிகள் பார்ட்- 2 வரும் பார்த்து மகிழுங்கள்.

நம்முடைய பதிவர்கள் ஜனரஞ்சக பத்திரிக்கைகளில் எழுத ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சியே. கதைகள் பத்திரிக்கையில் வந்த ஓரிரு நாளில் சிலர் அக்கதையை டைப் செய்தும், ஸ்கேன் செய்தும் போடுவது கண்டிக்கதக்கது. பத்திரிக்கை தரப்பில் இருந்து அவர்கள் இதற்காக வழக்கு கூட தொடரலாம். இச்செயல் இனியும் நீடித்தால் பதிவர்கள் எழுவதை பத்திரிக்கைகள் வெளியிட நிறைவே யோசிப்பார்கள். ஏன் நீங்கள் எழுதிய புத்தகங்களையும் அப்படியே ஸ்கேன் செய்து போட வேண்டியது தானே, அதுக்கு மட்டும் ஆன்லைனில் வாங்க இங்கே அமுக்கவும் அங்கே அமுக்கவும்னு விளம்பரம் எதுக்கு?

Labels:

Wednesday, March 25, 2009

நாகரிக கோமாளி சாரு

சாரு தன்னுடைய வலைதளத்தில் Kim ki duk இயக்கிய The Isle படத்தை பற்றி சிலாகித்து எழுதி, கமலஹாசன் இது போன்ற படங்களை எடுக்க முன்வராமல் தசவதாரம் போன்ற குப்பை படங்களையே எடுத்து வருகிறார் என்று சாடியுள்ளார். கமல் குப்பை படங்களை எடுக்கிறாரா இல்லையா என்பதை பற்றி பின்னர் பார்ப்போம். இப்பொழுது அவர் நிஜமாகவே இந்த படத்தை பார்த்தாரா இல்லை IMDB யில் plot, summaryயை படித்து விட்டு இங்கே வந்து படம் பார்த்ததாக பீலா வுட்டாரா என்பதை பார்ப்போம்.

சாருவின் முதல் கண்டுபிடிப்பு, நாயகிக்கு பேச வராதாம். //ஹீ ஜின்னுக்குப் பேச வராது. சைகையாலும் அவ்வளவாகப் பேசுவதில்லை. (மொழி, ஜோதிகா எல்லாவற்றையும் சுத்தமாக மறந்து விடுங்கள்).//

இந்த கொடுமையை என்னவென்று சொல்ல, ஹ்யூன் ஷிக் அவளுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள முயற்சிக்கும் பொழுது, நாயகி அதை தவிர்த்து கரைக்கு வந்து விபச்சாரியை ஃபோனில் அழைத்து வர சொல்லுவாள். அவள் ஃபோனில் பேசுவதையும் தெளிவாக காட்டுவார்கள். இந்த காட்சியெல்லாம் உலக படங்களை அலசும் சாருவிற்கு கண்களுக்கு மட்டும் தெரியவில்லை போலிருக்கு. இவருடைய பிதாமகன் விமர்சணத்தையும் பார்க்கனும், யாருக்கு தெரியும், விக்ரமையும் ஊமைனு சொன்னாலும் சொல்லியிருப்பார். இந்த அழகுல நாங்க மொழி ஜோதிகாவை சுத்தமா மறந்துடனுமாம்.

அப்புறம் ஹ்யூன் ஹ்யூன் தற்கொலை முயற்சி, //படகு வீட்டில் இரண்டு முறை தற்கொலைக்கு முயற்சி செய்கிறான்.// இரண்டாவது முறை தற்கொலை முயற்சி, அவன் விருப்பப் பட்டு செய்வது அல்ல. போலிஸ் ஒவ்வொரு படகு இல்லத்திலும் சோதணை நடத்துவதை பார்த்து அடுத்து தன்னிடம் வருகிறார்கள் என்பதை தெரிந்தவுடன், இவர்களிடம் அகப்பட்டு அல்லல் படுவதை விட தற்கொலை செய்து விடலாம் என முடிவு செய்து, உடனடியாக தற்கொலை செய்ய வேறு எந்த உபகர்ணமும் நேரமும் இல்லாதால் வேறு வழியின்றி, மீன் தூண்டிலை விழுங்கி தற்கொலை செய்ய முயற்சிக்கிறான். கதை இவ்வாறு இருக்க பொத்தாம் பொதுவாக படகு வீட்டில் இரண்டு முறை தற்கொலைக்கு முயற்சிக்கிறான் என்று உலக மகா விமர்சகர் எழுதலாமா?

அடுத்த அபத்தம், ஹீ ஜின்னை எதோ சீரியல் கில்லர் போல் இவர் கூறியிருப்பது. //பொறாமை கொள்ளும் ஹீ ஜின், அந்த வேசியை ஏரியில் மூழ்கடித்துக் கொன்று விட்டு ஹ்யூன் ஷிக்குடன் நெருங்கிப் பழகுகிறாள்// ஜீ ஜின் அந்த வேசியை மிரட்டுவதற்காக ஒரு படகு வீட்டில் வாயை பொத்தி, கை கால்களை கட்டி போட்டிருப்பாள், அந்த வேசி, ஜீ ஜின் இல்லாத நேரத்தில் தப்பிக்க முயற்சித்து தண்ணீரில் விழுந்து இறந்து விடுவாள். அடுத்த நாள் காலை அவளை விடுவிப்பதற்காக அவள் அந்த படகு வீட்டிற்கு போகயில் தான் அவளுடைய உடல் தண்ணீரில் மிதந்து கொண்டிருப்பதை பார்ப்பாள். அதற்கு பின் அவளுடைய உடலை அவள் ஸ்கூட்டரோடு சேர்த்து கட்டி தண்ணீரில் முழ்கடித்து விடுவாள்.

கதை இப்படி இருக்க, அவர் பாட்டுக்கு அளந்து விட்டிருக்கிறார், எவன் இந்த படத்தையெல்லாம் பார்த்துட்டு கேள்வி கேட்க போறான்னு. இந்த லட்சனத்துல கமலுக்கு அட்வைஸ் வேற. கமல் இந்த மாதிரி படங்களின் ஒவ்வொரு Frameயையும் விரல் இடுக்கில் வைத்திருப்பார். சாருவின் இந்த பதிவையெல்லாம் அவர் படித்தால் வாயில சிரிக்க மாட்டார்.

இது போக இவர் படம் எடுத்தால் இது மாதிரி ஒரு படத்தை தான் எடுப்பாராம், ஏன் நீங்க எழுதின இந்த கதையையே எடுக்கலாமே. அதான் படத்தின் முக்கியமான plot எல்லாத்தையும் நீங்களே மாத்தீடீங்களே அப்புறம் என்ன.

அதே போல் ஹீ ஜின்னிற்கு ஏற்கனவே கணவனோ பாய் ஃபிரண்டோ இருந்ததையும் உணர்த்த இயக்குனர் சில காட்சிகள் வைத்திருப்பார். இதையெல்லாம் குறிப்பிட அவருக்கு தோனவில்லை. அவருக்கு படத்தில் வரும் செக்ஸ், வன்முறை,மிருக வதைகளை பற்றி மட்டும் எழுதி, என்னை வாசிப்பவனுக்கு எது பிடிக்குமோ அதை மட்டும் எழுதினால் போதும்னு நினைச்சுட்டார் போல.

இளையராஜாவை பற்றி இவரது விமர்சணத்தை படித்தாலே, இவருக்கு சினிமாவும், இசையும் எவ்வளவு தெரியும் என்பது விளங்கும்.

கொரியா படம் இரானிய திரைப்படத்தை பற்றி விமர்சித்தால் தன்னை எல்லாரும் மேதாவி என நினைப்பார்கள் என்று இன்னமும் நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். நீங்கள் எழுதுவது மாலை முரசிலோ இல்லை தினத்தந்தியிலோ இல்லை. Kim ki duk கை தமிழ் திரையுலகோடு ஒப்பிடும் உங்களை, நாங்கள் English/Latin/French/பாரதி போன்ற எழுத்தார்களை உங்களுடன் ஒப்பிட்டால்(அட ஒரு பேச்சுக்கு தாங்க) அது சரியாகுமா? உங்களுக்கு எது வருமோ அல்லது எது முடியுமோ அதை தான் நீங்கள் எழுத முடியும், அதே போல் தான் தமிழ் திரையுலகமும்.

சரி இப்போ இது போன்ற படங்களை கமல் போன்றவர்கள் தமிழ் நாட்டில் எடுக்க முன்வராதது ஏன் பார்ப்போம். சாருவே கூறியிருப்பது போல, இந்த ஜென்மத்தில் இது போன்ற படங்கள் தமிழில் வர வாய்ப்பே இல்லை. இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்த்தால் எத்தனை காட்சிகள் சென்சாரின் கத்திரியில் இருந்து தேறும். அப்படியே தப்பி தவறி படம் வெளிவந்தாலும் அவ்வளவு தான். ஏஸி காரில் பவனி வரும் மாதர் சங்கம் தான் முதலில் தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பார்கள். நாயகியை விபச்சாரம் செய்யவதாகவும், பெண்களை கூட்டி கொடுப்பதாகவும் காட்டி நம் நாட்டு பெண்களை இயக்குனர் இழிவு படுத்திவிட்டார் என்று காட்டு கூச்சல் போடுவார்கள். இந்தியாவில் தான் விபச்சாரம், கள்ள தொடர்பு எல்லாம் கிடையவே கிடையாதே.

அடுத்தது Blue Cross எனும் காமெடி பீஸுகள் வீட்டில் சிக்கன் 65, மட்டன் சுக்காவை வெட்டிட்டு வந்து போராட்டத்தை தொடங்குவார்கள். இம்சை அரசனில் வடிவேலு குதிரையில் ஏறி வலம் வந்ததையே எதிர்க்கும் இவர்கள் இதையா விட்டு வைப்பார்கள்.

பிறகு வன்முறை காட்சிகள். காடு வெட்டி குரு தலைமையில், தமிழ் படங்களில் வன்முறை தலை விரித்தாடுகிறது. வன்முறை செய்ய எங்களுக்கு மட்டுமே உரிமையுள்ளது, மற்றவர்கள் அதை படத்திலோ, நிஜத்திலோ செய்ய கூடாதுன்னு ரோட்டோரங்களில் இருக்கும் மரங்களை வெட்டி தமிழகத்தை ஸ்தம்பிக்க வைப்பார்கள்.

இது போக வேலையத்தவர்கள் எல்லாம் ஒன்னா சேர்ந்து இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு போடுவார்கள்.

இந்த லட்சனத்தில் இது போன்ற உலக படத்தை எப்படி எடுத்து வெளியிடுவது. படத்தை மக்கள் எப்படி ரசிக்கிறார்கள் என்பது வேறு பிரச்சனை, முதலில் அது தமிழ்நாட்டில் வெளிவரனும்ல.

தமிழ் திரையுலகம் இப்பொழுது Transition period இல் இருக்கிறது. The Isle படத்தின் பட்ஜெட் வில்லு படத்தின் பட்ஜெட்டில் கால்வாசி கூட இருக்காது. கமலஹாசனும் இது போன்ற பல படங்களை படங்களை பார்த்திருப்பார், ஆனால் இது போன்ற படங்களை எடுக்கும் சூழல் இங்கே கிடையாது. நினைத்தை எல்லாம் இங்கே படமாக்க முடியாது. தமிழ் திரையுலகை அடுத்த கட்டத்திற்கு எடுத்து போவதற்கு முன்னால் தமிழ் ரசிகர்களை அதற்கு தயார் படுத்த வேண்டியிருக்கிறது. அதை தான் கமலஹாசன், பாலா, பாலு மகேந்திரன் போன்றவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். மக்களின் ரசனை மாறாமல் இருக்கும் வரை இங்கே இது போன்ற படங்கள் மட்டுமே வெளிவரும். அதற்காக இங்கெ உள்ளவர்களுக்கு உலக தரத்தில் படம் எடுக்க தெரியாதவர்கள் என்று அர்த்தமல்ல.

சந்தியா ராகம் படத்தின் நெகட்டீவ் அழிந்து விட்டது என்று கூறி அழுத பாலு மகேந்திரனின் நிலை தான் இன்றைய யதார்த்தம்.

IMDB தரத்தில் முதலிடத்தில் உள்ள Shawashank Redemption கூட தோல்வி படம் தான். அங்கே தயராகும் அர்னால்ட், சில்வெஸ்டர் படங்களுக்கும் இங்க தயாரிக்க படும் ரஜினி படங்களுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. உலக தரத்தில் படங்கள் எடுக்கும் நாட்டில் தான் அர்னால்ட் கலிஃபோர்னியா மாகானத்தில் கவர்னராக தேர்ந்தெடுக்க பட்டிருக்கிறார்.

உலக படங்களை ஒன்றுவிடாமல் பார்க்கும் சாருவிற்கே கதை புரியவில்லை என்றால் சாமானிய மக்களுக்கு எப்படி புரியும். தமிழ் படமோ, கொரியா படமோ மொதல்ல படத்தை பார்த்துட்டு விமர்சணம் எழுதுங்கப்பா.

Please excuse for any grammer mistakes in this post.

Labels:

Tuesday, February 24, 2009

நான் கடவுள் - பதிவர்களின் விமர்சணத்திற்கு ஜெயமோகன் பதில்

கவனமில்லாமல் எடுத்த எந்தக் காட்சியும் படத்தில் இல்லை என்பதே நான் உணர்ந்தது. அவர் அளித்த கவனமும் உழைப்பும் பத்து சதவீதம் கூட பார்வையாளர்களால் ,அதிலும் தேர்ந்த பார்வையாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களால், கவனிக்கப்படவில்லை.

மேலும் படிக்க...

http://jeyamohan.in/?p=1869

http://jeyamohan.in/?p=1873

Labels: