tag:blogger.com,1999:blog-36502551657732646992024-02-23T02:16:45.384+05:30படிச்ச முட்டாள், பயந்த புத்திசாலிBleachingpowderhttp://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-3650255165773264699.post-541332260552888852012-02-19T22:21:00.007+05:302013-11-27T10:28:42.931+05:30சாரு, நீங்க ஒரு காமெடி பீஸ்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
என்ன மாயமோ மந்திரமோ தெரியலை, தினமும் காலை சாருவின் பதிவை அல்லது facebook statusயை டாய்லட்டில் படித்தால் தான் எனக்கு ஆய் போகிறது. உலகில் இது போல் வேறு எந்த எழுத்தாளர்களுக்கு இந்த மாதிரி பவர் உள்ளது என்று தெரியவில்லை. சரி அத விடுங்க, இரண்டு வாரம் முன்பு, என் புருசனும் கச்சேரிக்கு போறான்னு சொல்ற மாதிரி இவரும் ஜெய்பூர் இலக்கிய விழாவிற்கு போனார். இலக்கிய விழாவிற்கு இவர் ஏன் போனார் நீங்கள் யோசிக்கிறது புரியுது, விடுங்க அன்னா ஹாசரேவை விஜய் பார்க்க போன மாதிரின்னு வச்சுக்கோங்க.<br />
<br />
இவர் போன நேரம் பார்த்து அங்க நிஜமான எழுத்தாளர்களோட கலந்துரையாடல் ஒன்று நடைபெற இருந்திருக்கிறது, இவர் போட்டிருக்கிற இரண்டாயிரம் ருபா ஜட்டியை பார்த்து கூப்பிடாங்களோ, இல்லை நாலாயிரம் ருபாய் ஃபேன்ஸி பனியனை பார்த்து கூப்பிடாங்களான்னு தெரியலை, ஒரு கை குறையுது வரிங்களான்னு கேட்ட ஓடனே, பலியாடு மாதிரி தலையாட்டிட்டு போயிட்டாரு. அங்க போய் உட்கார்ந்த உடனே பெரிய ஜபர்தஸ்த்தா சேர் கிட்டே இருந்த மினரல் வாட்டர் எடுத்து குடித்து தொண்டையை சரி செய்து ஒபாமா மாதிரி உக்காந்துகிட்டார்.<br />
<br />
கலந்துரையாடல் தொடங்கியது.மத்த அஞ்சு பேரும் ஆங்கிலத்தில் பொளந்து கட்ட வாட் ஷி இஸ் டெல்லிங் ன்னு பேந்த பேந்த முழிச்சிட்டு இருந்தாரு. கடைசில எது நடக்க கூடாதுன்னு நாம நினைச்சமோ அது நடந்திடுச்சு, ஆமா மைக்கை இவர் கையில கொடுத்துட்டாங்க, ப்ளாக்ல சிங்கம் மாதிரி உறுமுற தல, அங்க புலிகுட்டி தம்பி பூனைக்குட்டி மாதிரி என்ன பேசறாருன்னு கடைசி வரைக்கும் யாருக்கும் புரியலை. மனுசன் எவ்வளவு நேரம் தான் சும்மா உட்கார முடியும், அவங்களும் இப்படி ஒருத்தர் நம்ம கூட இருக்காருன்னே கண்டுக்காம, அவங்க பாட்டுக்கு பேசிட்டு இருதாங்க. நம்மாளு பார்த்தாரு கொஞ்ச நேரத்துல மெதுவா எந்திரிச்சு, அங்க நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிட்டு இருந்த பெண்ணிடம்(பேரழகி) மே ஐ கோ டு த டாய்லட்னு என்னவோ சொல்லிட்டு நழுவிட்டாரு. ஒரு கலந்துரையாடல் நடைபெற்று கொண்டிருக்கும் பொழுது இப்படி அசிங்கமா பாதியில எழுந்திருச்சு போறது எவ்வளவு கேவலம். கேட்டா நோபல் கமிட்டில் இருந்து ஒரு ஃபோன், உடனே அடுத்த ஃபைளைட் புடிச்சு ஸ்வீடன் வர சொல்லீட்டாங்கனு எதாச்சும் புருடா விடுவாரு. அட நமக்கு தமிழே தற்குறி, விக்கிலீக்ஸ் விமல் என்று சாருவால் அன்புடன் அழைக்கபட்டும் மாமல்லன் தினமும் காலை அவருடையை பதிவில் இருந்து ஒரு மேற்க்கோள் காட்டி அவருடைய தமிழை திருத்திக்கொண்டிருக்கிறார், இந்த லட்சணத்துல அங்க போய் மேடை ஏறி தமிழ்நாட்டோட ஒட்டு மொத்த மானத்தையும் வாங்கனுமா?<br />
<br />
அந்த கருமத்தை பார்க்கனும்னு நினைக்குறவங்க இங்க போய் பாருங்க<br />
<a href="http://vimeo.com/moogaloop.swf?clip_id=35430352&server=vimeo.com&show_title=0&show_byline=0&show_portrait=0&color&fullscreen=1">http://vimeo.com/moogaloop.swf?clip_id=35430352&server=vimeo.com&show_title=0&show_byline=0&show_portrait=0&color&fullscreen=1</a><br />
<br />
ஒரு எழுத்தாளன் எப்போதும் உண்மையை பேசனும் நினைக்குற அளவிற்கு நான் ஒன்னும் கூமுட்டை இல்லை அதுக்காக காலையில எந்திருச்சு காப்பி குடிக்குறதுல கூட பொய் பேசுவேன்னு சொன்னா எப்படி? மாசத்துல எப்படியும் ரெண்டு பதிவுலையாவது, காலையில நாலு மணிக்கு எந்திருச்சு எழுதுறேன், ஏழு மணிக்கு காப்பி குடிச்சே ஆகனும், ஆனா போட்டு கொடுக்க ஆளே இல்லை நடந்தே போய் சரவணபவன்ல காப்பி குடிக்குறேன். இது தான் ஒரு எழுத்தாளனுக்கு தமிழ்நாட்டில் உள்ள மரியாதைன்னு பொலம்பிட்டு இருப்பாரு, ரெண்டு வாரம் முன்னாடி கூட அதை பத்தி எழுதியிருந்தார்..பார்க்க.. <a href="http://charuonline.com/blog/?p=2883">http://charuonline.com/blog/?p=2883</a>//<span style="color: #006600;">மயிலாப்பூரின் அந்தப் பிரபலமான ஓட்டலுக்கு பார்க்கிலிருந்து நடந்தே சென்ற போது மணி எட்டேகால். நம்ப மாட்டீர்கள். ஒரே ஒரு காப்பிக்காக முக்கால் மணி நேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று. அப்படியும் காப்பி ஆறிப் போயிருந்தது.</span>//இன்னைக்கு என்னடானா திடீர்னு நான் காலையில காபி குடிக்கிறதை விட்டு மூனு வருசமாச்சு இப்ப டெய்லி மாட்டு மூத்திரம் மட்டும் தான் குடிக்குறேன்னு அடிச்சாரு பாருங்க பல்டி. <a href="http://charuonline.com/blog/?p=2974">http://charuonline.com/blog/?p=2974</a>//<span style="color: #009900;">காலையில் எழுந்ததும் ஃபில்டர் காப்பி குடித்தே ஆக வேண்டும். ஆனால் மூன்று ஆண்டுகளாக காலை காப்பியை விட்டு விட்டேன்</span>//ஒரு வேளை இவர் பாலோ பண்றது ஃபிரஞ்ச் அல்லது லத்தின் காலை நேரமோ? என்ன எழவோ, இதை படிச்சிட்டு அவரோடு குஞ்சுங்க எத்தனை பேர் காலங்காத்தால சொம்பை எடுத்துட்டு மாட்டுக்கு பின்னாடி போய் நிக்க போறாங்களோ, அவங்களை அந்த நித்தி தான் காப்பாத்தனும்.<br />
<br />
இதை எல்லாம் புதுசா படிக்குறவங்க, இவர் தான் பெரிய காமெடியன்னு நினைக்காதீங்க, இவருக்கு facebookல் ஒரு group இருக்கு அட..அட..அட அங்க போய் பாருங்க, ஒவ்வொரு போஸ்டும் நெனைச்சு நெனைச்சு சிரிக்குற மாதிரி இருக்கும். இன்றைய சாம்பிள்:<br />
<span style="color: #cc0000;"><b>பிச்சைகாரன்:</b> எல்லைகள் கடந்து சிறகடிக்கும் சாருவை கவுரவிக்க அவருக்கு பாலாபிஷேகம் செய்ய நிர்வாகிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டு கொள்கிறேன்இதுக்கும் நம்ம இதய தெய்வம் <b>சாருவின் பதில்</b>: பாலாபிஷேகம் செய்வது போன்ற காரியங்கள் நம் எதிரிகள் நம்மைப் பார்த்து ஏளனம் செய்ய ஏதுவாகி விடும். </span>அதாவது, பாலாபிஷேகம் செய்யறதுக்கும் இவருக்கு ok தானாம் ஆனா என்ன கழுத மத்த பயபுள்ளைங்க எதாச்சாசும் சொலீட்டா என்ன பண்றதுன்னு ஒரு பீலீங்க் அவ்வளவு தான். மேல மேல இன்னும் உங்க கிட்ட இருந்து நாங்க நிறைய எதிர்பார்க்கிறோம், பாலாபிஷேகதிற்கு பிறகு என்ன ? லிங்க தரிசனமா?? இது தான்யா பின்நவினதுவம் ச்சே முன்நவினதுவம்.<br />
<br />
எஸ்.ரா ரஜினியை அழைத்து கூட்டம் சேர்த்துட்டார்ன்னு இவரும், இவரோட போர்படை தளபதிகள் ஆறு பேரும் சேர்ந்து எக்ஸைல் விமர்சண கூட்டம்ன்னு ஒன்னை போட்டாங்க, சரியா எண்ணிப் பார்த்தா இருபத்தி மூனு பேர், சாருவையும் சேர்த்து வந்திருப்பார்கள், இதில பத்து பேர் வெளியில வெயில் ஜாஸ்தியா இருக்குன்னு உள்ள வந்தவங்க. எப்படியோ கையில கால்ல விழுந்து ஞானியையும் கூட்டிட்டு வந்துட்டாங்க, அவர் எதோ சாருவை ஓபாமா ரேஞ்சுக்கு புகழ்ந்து தள்ளப் போகிறார்ன்னு சப்பு கொட்டிட்டு வந்தவங்களுக்கு சாணியை கரைச்சு மூஞ்சியில ஊத்துன மாதிரி, அந்த புக்கையும் சாருவையும் கிழி கிழின்னு கிழிச்சுட்டாரு. இனிமேலாச்சும் விடல பசங்களுக்கு பிடிக்குற மாதிரி எழுதறத விட்டு உருப்படியா எதாச்சும் எழுத பாருன்னு சொல்லிட்டு போயிட்டாரு. சும்மா விடுவாரா, இன்னைக்கு வந்து அவரோட ப்ளாக்குல பக்கம் பக்கமா பேண்டு வச்சுட்டாரு.<br />
<br />
கொஞ்ச நாளா, என்னமோ பண்ணி தொலையட்டும் யாரும் கண்டுக்காம விட்ட இவரை இப்போ எல்லாரும் திரும்பவும் ரவுண்டு கட்ட ஆரம்பிச்சிடாங்க. மாமல்லன்( விக்கிலீக்ஸ் விமல்) தினமும் இவர் டவுசரை உருவிக்கொண்டு இருக்கிறார். அதுவும் சாருவோட லிங்கையை கொடுத்து அவர் எழுதியிருக்கும் கோமாளிதனத்தை பகிரங்க படுத்தி வருகிறார். எப்படி நித்தி மேட்டர் வெளியான உடனே ஒரு வைரஸ் வந்து கரெட்டா சாரு நித்தியை பத்தி எழுதின கட்டுரைகளை மட்டும் டெலிட் பண்ணிட்டு போச்சோ அதே போல ஒரு வைரஸ் கூடி சீக்கிரம் திரும்பி வரும்னு நினைக்குறேன்.<br />
<br />
இவ்வளவு நாளா அந்த பொண்ணு chat விவகாரத்திற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லைன்னு(தப்பில்லைனா போலிஸ் கிட்ட போக வேண்டியது தானே) மழுப்பிட்டு இருந்தவர் இன்று அவருடைய தளத்தில் என்ன கூறியிருக்கிறார் பாருங்கள். <a href="http://charuonline.com/blog/?p=2970">http://charuonline.com/blog/?p=2970</a> //துக்ளக்கில் ஒருவர் எழுதவேண்டுமென்றால் அவர் கறைபடியாதவராக இருக்க வேண்டும். என் எழுத்தை விரும்பாதவர்கள், திட்டமிட்டு, வேண்டுமென்றே என்னை ஒரு Scandal லில் மாட்ட வைத்தார்கள். அந்தக் கறை என்மீது பதிந்துவிட்டதால் என் எழுத்தும் நிறுத்தப்பட்டது.// இதுவரை எனக்கும் அந்த ற்கும் எந்த சம்மந்தமும் இல்லைன்னு சொன்னவர் இப்போ அவரை திட்டமிட்டு மாட்ட வைத்துவிட்டார்களாம். so அந்த உரையாடல் நடந்தது உண்மைன்னு அவரே ஒத்துக்கிட்டார்.கொஞ்ச நாள் ஆயிடுச்சே எல்லாரும் மறந்திருப்பாங்கன்னு நினைச்சு இப்ப அடுத்த பிட்டை போட ஆரம்பிச்சுட்டாரு என்னன்னா, இவரு மேட்டர் பண்ற விசியத்துல யாருமே இவரை அடிச்சிக்க முடியாதாம், இருபத்தி அஞ்சு வயது இளைஞன் கூட இவர் கூட போட்டி போட முடியாதாம், கேட்டுக்கோங்கப்பா இனி திரும்பவும் ஆரம்பிச்சிடுவாரு, பதினேலு வயது பேரழகி என்னை திருமணம் செய்ய வற்புறுத்திகிறார், பெங்களுரில் ஒரு மாததிற்கு மூன்று லட்சம் சம்பாதிக்கும் ஒரு இளம்பெண் என் மூலமாக ஒரு வாரிசு வேணும்னு உயிரெடுக்குறாள். நேற்று காபி ஷாப்பில் மூன்று பெண்கள் என்னை ஒரு வெறியோடு பார்த்தார்கள்ன்னு உலகத் தொலைகாட்சியில் முதல் முறையாகன்னு ஒரு வீடியோ எவிடன்ஸ் மாட்டாமலா போயிடும், அதுவும் அநேகமாக அவரோட படைத்தளபதிகள் கிட்ட இருந்தே தான் வெளிவரும்ன்னு பட்சி சொல்லுது. நம்பிக்கையுடன் காத்திருப்போம்.சாரு அடிக்கடி யானையை புணந்த கொசு கதை சொல்லுவாரு. ரஜினி மேட்டர் கூட அப்படி தான், இவர் பாட்டுக்கு ரஜினிடம் கேள்வி கேட்குறேன், சவால் விடுகிறேன்னு முழங்கிட்டு இருக்கிறாரு. பாவம் ரஜினி,யாரு இந்த மனுசன், நம்ம கூட எந்த படத்துலையாவது நடிச்சிருக்காரான்னு தனிமையில் உட்கார்ந்து யோசித்து கொண்டிருக்கிறாராம்.</div>
Bleachingpowderhttp://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.com103tag:blogger.com,1999:blog-3650255165773264699.post-25184946832616346942009-09-14T14:48:00.005+05:302009-09-14T17:20:59.396+05:30திருட்டு பயலே சுசி கனேசனுக்கு இந்த ஆப்பு பத்தாதுதொற எடுத்த படத்தை ஊர் உலகமே கிழிச்சு தொங்கவுட்ட போது பல்லை கடிச்சிட்டு இருந்தவரு, போன வாரம் ஞானி குமுதத்துல படம் ஊத்திக்கிச்சுன்னு எழுதின உடனே பொங்கி எழுந்து இந்த வார குமுதத்துல வாந்தி எடுத்து வச்சிருக்காரு. சக பத்திரிக்கையாளன் மேலே வருவதை பார்த்து வந்த பொறாமையில் எழுதியதாம். சமுக அக்கறையுடன், யாருக்கும் அஞ்சாமல் தன் மனதிற்க்கு நியாயமாக பட்டதை எழுதும் ஒரு மூத்த எழுத்தாளரை விமர்சிக்க குட்டை பாவாடைகளை காட்டி படம் பண்ணும் இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?<br /><br />நான் கூட கந்தசாமி விமர்சணத்தை படிச்சுட்டு கொஞ்சம் ஓவராதான் போறாங்க நம்மாளுங்க நினைச்சேன், இப்ப இவங்க பண்ற கூத்தை பார்தால் இன்னும் பத்தாதோன்னு தோனுது. நடு நிலை பத்திரிக்கையாளர்கள் இந்த படத்தை பார்த்து அதில் ஒருவர் படம் தோல்வின்னு சொன்னா கூட இவர் படமெடுக்கிறதை நிறுத்திடுவாரம் (யாராச்சும் அதை சீக்கிரமா பண்ணி தொலைங்கப்பா).<br /><br />அட நீங்க எடுத்த கருமத்தை பத்தி என்னமோ எழுதுங்க, என்னமோ கிறுக்குங்க அதுக்கு ஏன்யா மத்த நல்ல படங்களை குறை சொல்றீங்க. சுப்பிரமணியபுரம், பசங்க, நாடோடிகள் எல்லா நல்ல படமில்லையாம், ஞானி தான் இந்த படங்களை மிகை படுத்தி எழுதிட்டாராம். சுப்பிரமணியபுரம், ரவுடிகளை பற்றிய படமாம். பசங்க சிறுவர்களுக்குன்னு சொல்லி பெரியவங்களுக்கு அறிவுரை சொன்ன படமாம். அப்புறம் நாடோடிகள், ஓடி போறவங்களை சேர்த்து வைக்குற படமாம். காறி துப்புற மாதிரி ஒரு படத்தை எடுத்துட்டு, எதார்த்தமா குறைந்த செலவில் வந்த தரமான படங்களை பற்ற பேச வெட்கமாயில்லை?<br /><br />கந்தசாமி ஓடும் தியேட்டரில் மக்களோடு மக்களாக உட்கார்ந்து படம் பாருங்க அப்ப தெரியும் மக்கள் கிட்ட உங்க மரியாதை என்னன்னு. அவனவன் கிழிக்குற கிழியுல படத்தில் சம்மந்த பட்ட எல்லாருடைய ஃபேமலியும் அங்கே டோட்டல் டேமேஜ் ஆயிட்டிருக்கு. மெக்சிக்கோவுல பிச்சுமணியை தெரியாதவங்க யாருமே கிடையாதாமாம்? தியேட்டர்ல எவனும் வாயில சிரிக்க மாட்டேங்குறான்.<br /><br />குழந்தைகளுக்கான படமாம் கந்தசாமி. அடப்பாவிங்களா, குழந்தைகளுக்காக எடுக்க பட்ட காட்சின்னு இந்த படத்தில் ஏதாவது ஒன்றையாவது சொல்லுங்கள் பார்ப்போம். இந்த குப்பையை குழந்தைகளுடன் காண நாங்கள் தயாராயில்லை. வேண்டுமென்றால் படமெடுத்த நீங்களும் அதில் நடித்தவர்களும் உங்கள் குழந்தைகளுடன் பாருங்க, படம் பார்க்கும் போது உங்கள் குழந்தைகள் முமைத்கான் நாக்கில் மாட்டியிருப்பது இருப்பது என்ன? அதை ஏன் அடிக்கடி காமிக்கிறீங்கன்னு கேட்டா என்ன பதில் சொல்லனும்னு யோசிச்சுட்டு படத்தை போடுங்க.<br /><br />ஜெண்டில்மேன், அந்நியன்,ரமணா படத்திற்கும் கந்தசாமிக்கும் எந்த சம்மந்தமும் இல்லையாம், சிவாஜி படம் கூட ஒரே நேரத்தில் ஷங்கரும் இவரும் யோசித்த கருத்தாம், சொல்றாரு திருட்டு பயலே சுசி.<br /><br />கந்தசாமி தான் ரெண்டு வாரத்துல ஐம்பத்தைந்து கோடி சம்பாதிருச்சுல, பார்ப்போம் இனி எந்த தயாரிப்பாளர் இந்த மாதிரி பணத்தை அள்ளி கொடுத்து உங்களை படம் எடுக்க சொல்றாருன்னு. ஏன் தானுவையே போய் கேளுங்களேன், இன்னோரு ஐம்பது கோடி கொடுங்க இதே மாதிரி குழந்தைகளுக்காக இன்னோரு படம் எடுத்து தரேன்னு, சொல்ல முடியாது அவர் கொடுத்தாலும் கொடுப்பாரு.Bleachingpowderhttp://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.com23tag:blogger.com,1999:blog-3650255165773264699.post-80467220240597952392009-05-29T10:40:00.003+05:302009-05-29T11:23:27.185+05:30எதிர்வினைக்கு நீங்களே பதில் சொல்லீடுங்க சாருநீங்க எழுதின வன்முறையின் தோல்வி கட்டுரைக்கு வந்த எதிர்வினைகளுக்கு நீங்களே நேரா பதில் சொல்லீடுங்க சாரு. அத விட்டுட்டு என் சங்கத்து ஆள அடிச்சு பாருன்னு பச்ச புள்ளையை சபைக்கு அனுப்பாதீங்க. அது பாட்டுக்கு வந்து செம கடுப்புல இருக்கும் எங்களிடம் , "எங்க அண்ணன் பழம் வாங்கிட்டு வர சொன்னாருன்னு" அப்பாவியா கேட்டுட்டு வாங்கி கட்டீட்டு இருக்கு.<br /><br />நீங்க நிஜமாவே போடி மஸ்தான் தான் இல்லைன்னா, பிராபகரன் எங்க மாமா, அவரு மாவீரரு,ஹீரோ,ராஜேந்திரச்சோழனை மிஞ்சியவருன்னு சொல்லி சின்ன வயசுல இருந்தே கையில தீபாவளி துப்பாக்கியை வச்சுகிட்டு பிராபகரண் - ஜெயவர்தனே விளையாட்டு விளையாடினவங்களை கூட உங்க வழிக்கு வர வச்சிட்டீங்களே. ரெண்டு வாரம் முன்பு கூட இங்க யாருக்கும் தெரியலை வன்முறையினால் தீர்வு கிடைக்காதுன்னு. இப்படி தீடீர்னு சமிபகால வரலாற்றை புரட்டி பார்க்கும் போது தான் தெரிஞ்சுதாம்.<br /><br />அப்புறம் உங்க பேர போட்டு எழுதினா முன்னூறு ஹிட்ஸ் ஜாஸ்தி கிடைக்குமாம், அத வச்சுட்டு நாக்கு கூட வழிக்க முடியாது. இந்த கருமத்துக்காக தான் அந்த எழவ நான் என் தளத்திலே போடல. அஞ்சு லட்சம் ஹிட்ஸ், பத்து லட்சம் ஹிட்ஸ் வாங்குனவங்க எல்லாம் என்ன சுஜாதா ஆயிட்டாங்களா இல்ல போயஸ் கார்டன்ல நாலு வீடு வாங்கிட்டாங்களா.<br /><br />மொக்க பதிவர்கள் வழக்கம் போல உங்க வேலைய பாருங்க, நான் இப்படி தான் தனியா கத்திட்டு இருப்பேன். இங்க ஒருத்தன் ஜெய்ச்சுட்டே இருக்கிற வரைக்கும் தான் கூட இருப்பாங்க தோத்தா போயிட்டே இருப்பாங்க.Bleachingpowderhttp://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.com38tag:blogger.com,1999:blog-3650255165773264699.post-24101478466597912082009-05-14T09:59:00.004+05:302009-05-14T14:23:32.292+05:30பதிவர்களுக்கு பதிவர்களே ஆப்பு !!நாடறிந்த நகைச்சுவை எழுத்தாளர் சமிபத்தில் நான் கடவுள் படத்தை பற்றி சிலாகித்து எழுதி அதை மலையாளம், லத்தின்,ஃபிரன்ச், ரஷ்ய மொழிகளில் மொழிபெயர்த்து அதை அந்தந்த நாடுகளில் கொண்டாடியது அறிந்ததே. இப்பொழுது அவருடைய நண்பர் ஒருவர் அந்த படத்தை பார்த்து ஒரு கருத்து சொல்ல, இப்பொழுது அந்த படத்தை போய் நான் எப்படி ரசித்தேன்னு ஃபீல் பண்ணீட்டு இருக்காராம்.<br /><br />இதற்கு முன் இவர் எழுதிய கொரிய படத்தை பற்றி இவர் எழுதிய விமர்சணத்தில் இருந்த தவறுகளை சுட்டி காட்டிய போது அது எல்லாம் எழுத்துப் பிழை அதை திருத்துவது ப்ரூஃப் ரீடரின் வேலைன்னு சொன்னவர், இப்பொழுது நான் கடவுள் படத்தையே நான் சிலாகித்து எழுதி இருக்க கூடாதுனு சொல்லுகிறார். பேசாமல் இனி இவர் எழுதும் கதை,கட்டுரை, விமர்சணங்களுக்கு கீழே, All my reviews and opinions are subject to change. Conditions Applyன்னு போட்டுடலாம்.<br /><br />வாங்குன காசுக்கு இன்னும் திமுகாவிற்காக கூவும் பதிவர்களே. உங்கள் தலைவருக்கு நீங்க தான் ஓய்வு கொடுக்க மாட்டேங்குறீங்க, போனா போகட்டும் இனி நாங்க கொடுக்குறோம். சனிக்கிழமைக்கு பிறகு கொஞ்சமும், மூனு நாலு மாசத்திற்கு பிறகு நிறையவும் ஓய்வு கிடைக்கும். அப்புறம் என்ன பாசக் கிளிகள் பார்ட்- 2 வரும் பார்த்து மகிழுங்கள்.<br /><br />நம்முடைய பதிவர்கள் ஜனரஞ்சக பத்திரிக்கைகளில் எழுத ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சியே. கதைகள் பத்திரிக்கையில் வந்த ஓரிரு நாளில் சிலர் அக்கதையை டைப் செய்தும், ஸ்கேன் செய்தும் போடுவது கண்டிக்கதக்கது. பத்திரிக்கை தரப்பில் இருந்து அவர்கள் இதற்காக வழக்கு கூட தொடரலாம். இச்செயல் இனியும் நீடித்தால் பதிவர்கள் எழுவதை பத்திரிக்கைகள் வெளியிட நிறைவே யோசிப்பார்கள். ஏன் நீங்கள் எழுதிய புத்தகங்களையும் அப்படியே ஸ்கேன் செய்து போட வேண்டியது தானே, அதுக்கு மட்டும் ஆன்லைனில் வாங்க இங்கே அமுக்கவும் அங்கே அமுக்கவும்னு விளம்பரம் எதுக்கு?Bleachingpowderhttp://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.com47tag:blogger.com,1999:blog-3650255165773264699.post-15235940715812653672009-03-25T11:17:00.005+05:302009-03-25T11:59:11.136+05:30நாகரிக கோமாளி சாரு<p>சாரு தன்னுடைய வலைதளத்தில் Kim ki duk இயக்கிய The Isle படத்தை பற்றி சிலாகித்து எழுதி, கமலஹாசன் இது போன்ற படங்களை எடுக்க முன்வராமல் தசவதாரம் போன்ற குப்பை படங்களையே எடுத்து வருகிறார் என்று சாடியுள்ளார். கமல் குப்பை படங்களை எடுக்கிறாரா இல்லையா என்பதை பற்றி பின்னர் பார்ப்போம். இப்பொழுது அவர் நிஜமாகவே இந்த படத்தை பார்த்தாரா இல்லை IMDB யில் plot, summaryயை படித்து விட்டு இங்கே வந்து படம் பார்த்ததாக பீலா வுட்டாரா என்பதை பார்ப்போம்.<br /><br />சாருவின் முதல் கண்டுபிடிப்பு, நாயகிக்கு பேச வராதாம். //<em><span style="color:#990000;">ஹீ ஜின்னுக்குப் பேச வராது. சைகையாலும் அவ்வளவாகப் பேசுவதில்லை. (மொழி, ஜோதிகா எல்லாவற்றையும் சுத்தமாக மறந்து விடுங்கள்).</span></em>//<br /><br />இந்த கொடுமையை என்னவென்று சொல்ல, ஹ்யூன் ஷிக் அவளுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள முயற்சிக்கும் பொழுது, நாயகி அதை தவிர்த்து கரைக்கு வந்து விபச்சாரியை ஃபோனில் அழைத்து வர சொல்லுவாள். அவள் ஃபோனில் பேசுவதையும் தெளிவாக காட்டுவார்கள். இந்த காட்சியெல்லாம் உலக படங்களை அலசும் சாருவிற்கு கண்களுக்கு மட்டும் தெரியவில்லை போலிருக்கு. இவருடைய பிதாமகன் விமர்சணத்தையும் பார்க்கனும், யாருக்கு தெரியும், விக்ரமையும் ஊமைனு சொன்னாலும் சொல்லியிருப்பார். இந்த அழகுல நாங்க மொழி ஜோதிகாவை சுத்தமா மறந்துடனுமாம்.<br /><br />அப்புறம் ஹ்யூன் ஹ்யூன் தற்கொலை முயற்சி, <em><span style="color:#990000;">//படகு வீட்டில் இரண்டு முறை தற்கொலைக்கு முயற்சி செய்கிறான்.//</span></em> இரண்டாவது முறை தற்கொலை முயற்சி, அவன் விருப்பப் பட்டு செய்வது அல்ல. போலிஸ் ஒவ்வொரு படகு இல்லத்திலும் சோதணை நடத்துவதை பார்த்து அடுத்து தன்னிடம் வருகிறார்கள் என்பதை தெரிந்தவுடன், இவர்களிடம் அகப்பட்டு அல்லல் படுவதை விட தற்கொலை செய்து விடலாம் என முடிவு செய்து, உடனடியாக தற்கொலை செய்ய வேறு எந்த உபகர்ணமும் நேரமும் இல்லாதால் வேறு வழியின்றி, மீன் தூண்டிலை விழுங்கி தற்கொலை செய்ய முயற்சிக்கிறான். கதை இவ்வாறு இருக்க பொத்தாம் பொதுவாக படகு வீட்டில் இரண்டு முறை தற்கொலைக்கு முயற்சிக்கிறான் என்று உலக மகா விமர்சகர் எழுதலாமா?<br /><br />அடுத்த அபத்தம், ஹீ ஜின்னை எதோ சீரியல் கில்லர் போல் இவர் கூறியிருப்பது. <em><span style="color:#990000;">//பொறாமை கொள்ளும் ஹீ ஜின், அந்த வேசியை ஏரியில் மூழ்கடித்துக் கொன்று விட்டு ஹ்யூன் ஷிக்குடன் நெருங்கிப் பழகுகிறாள்//</span></em> ஜீ ஜின் அந்த வேசியை மிரட்டுவதற்காக ஒரு படகு வீட்டில் வாயை பொத்தி, கை கால்களை கட்டி போட்டிருப்பாள், அந்த வேசி, ஜீ ஜின் இல்லாத நேரத்தில் தப்பிக்க முயற்சித்து தண்ணீரில் விழுந்து இறந்து விடுவாள். அடுத்த நாள் காலை அவளை விடுவிப்பதற்காக அவள் அந்த படகு வீட்டிற்கு போகயில் தான் அவளுடைய உடல் தண்ணீரில் மிதந்து கொண்டிருப்பதை பார்ப்பாள். அதற்கு பின் அவளுடைய உடலை அவள் ஸ்கூட்டரோடு சேர்த்து கட்டி தண்ணீரில் முழ்கடித்து விடுவாள்.<br /><br />கதை இப்படி இருக்க, அவர் பாட்டுக்கு அளந்து விட்டிருக்கிறார், எவன் இந்த படத்தையெல்லாம் பார்த்துட்டு கேள்வி கேட்க போறான்னு. இந்த லட்சனத்துல கமலுக்கு அட்வைஸ் வேற. கமல் இந்த மாதிரி படங்களின் ஒவ்வொரு Frameயையும் விரல் இடுக்கில் வைத்திருப்பார். சாருவின் இந்த பதிவையெல்லாம் அவர் படித்தால் வாயில சிரிக்க மாட்டார்.<br /><br />இது போக இவர் படம் எடுத்தால் இது மாதிரி ஒரு படத்தை தான் எடுப்பாராம், ஏன் நீங்க எழுதின இந்த கதையையே எடுக்கலாமே. அதான் படத்தின் முக்கியமான plot எல்லாத்தையும் நீங்களே மாத்தீடீங்களே அப்புறம் என்ன.</p><p>அதே போல் ஹீ ஜின்னிற்கு ஏற்கனவே கணவனோ பாய் ஃபிரண்டோ இருந்ததையும் உணர்த்த இயக்குனர் சில காட்சிகள் வைத்திருப்பார். இதையெல்லாம் குறிப்பிட அவருக்கு தோனவில்லை. அவருக்கு படத்தில் வரும் செக்ஸ், வன்முறை,மிருக வதைகளை பற்றி மட்டும் எழுதி, என்னை வாசிப்பவனுக்கு எது பிடிக்குமோ அதை மட்டும் எழுதினால் போதும்னு நினைச்சுட்டார் போல.</p><p>இளையராஜாவை பற்றி இவரது விமர்சணத்தை படித்தாலே, இவருக்கு சினிமாவும், இசையும் எவ்வளவு தெரியும் என்பது விளங்கும்.</p><p>கொரியா படம் இரானிய திரைப்படத்தை பற்றி விமர்சித்தால் தன்னை எல்லாரும் மேதாவி என நினைப்பார்கள் என்று இன்னமும் நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். நீங்கள் எழுதுவது மாலை முரசிலோ இல்லை தினத்தந்தியிலோ இல்லை. Kim ki duk கை தமிழ் திரையுலகோடு ஒப்பிடும் உங்களை, நாங்கள் English/Latin/French/பாரதி போன்ற எழுத்தார்களை உங்களுடன் ஒப்பிட்டால்(அட ஒரு பேச்சுக்கு தாங்க) அது சரியாகுமா? உங்களுக்கு எது வருமோ அல்லது எது முடியுமோ அதை தான் நீங்கள் எழுத முடியும், அதே போல் தான் தமிழ் திரையுலகமும்.<br /><br />சரி இப்போ இது போன்ற படங்களை கமல் போன்றவர்கள் தமிழ் நாட்டில் எடுக்க முன்வராதது ஏன் பார்ப்போம். சாருவே கூறியிருப்பது போல, இந்த ஜென்மத்தில் இது போன்ற படங்கள் தமிழில் வர வாய்ப்பே இல்லை. இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்த்தால் எத்தனை காட்சிகள் சென்சாரின் கத்திரியில் இருந்து தேறும். அப்படியே தப்பி தவறி படம் வெளிவந்தாலும் அவ்வளவு தான். ஏஸி காரில் பவனி வரும் மாதர் சங்கம் தான் முதலில் தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பார்கள். நாயகியை விபச்சாரம் செய்யவதாகவும், பெண்களை கூட்டி கொடுப்பதாகவும் காட்டி நம் நாட்டு பெண்களை இயக்குனர் இழிவு படுத்திவிட்டார் என்று காட்டு கூச்சல் போடுவார்கள். இந்தியாவில் தான் விபச்சாரம், கள்ள தொடர்பு எல்லாம் கிடையவே கிடையாதே.<br /><br />அடுத்தது Blue Cross எனும் காமெடி பீஸுகள் வீட்டில் சிக்கன் 65, மட்டன் சுக்காவை வெட்டிட்டு வந்து போராட்டத்தை தொடங்குவார்கள். இம்சை அரசனில் வடிவேலு குதிரையில் ஏறி வலம் வந்ததையே எதிர்க்கும் இவர்கள் இதையா விட்டு வைப்பார்கள்.<br /><br />பிறகு வன்முறை காட்சிகள். காடு வெட்டி குரு தலைமையில், தமிழ் படங்களில் வன்முறை தலை விரித்தாடுகிறது. வன்முறை செய்ய எங்களுக்கு மட்டுமே உரிமையுள்ளது, மற்றவர்கள் அதை படத்திலோ, நிஜத்திலோ செய்ய கூடாதுன்னு ரோட்டோரங்களில் இருக்கும் மரங்களை வெட்டி தமிழகத்தை ஸ்தம்பிக்க வைப்பார்கள்.<br /><br />இது போக வேலையத்தவர்கள் எல்லாம் ஒன்னா சேர்ந்து இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு போடுவார்கள்.<br /><br />இந்த லட்சனத்தில் இது போன்ற உலக படத்தை எப்படி எடுத்து வெளியிடுவது. படத்தை மக்கள் எப்படி ரசிக்கிறார்கள் என்பது வேறு பிரச்சனை, முதலில் அது தமிழ்நாட்டில் வெளிவரனும்ல.<br /><br />தமிழ் திரையுலகம் இப்பொழுது Transition period இல் இருக்கிறது. The Isle படத்தின் பட்ஜெட் வில்லு படத்தின் பட்ஜெட்டில் கால்வாசி கூட இருக்காது. கமலஹாசனும் இது போன்ற பல படங்களை படங்களை பார்த்திருப்பார், ஆனால் இது போன்ற படங்களை எடுக்கும் சூழல் இங்கே கிடையாது. நினைத்தை எல்லாம் இங்கே படமாக்க முடியாது. தமிழ் திரையுலகை அடுத்த கட்டத்திற்கு எடுத்து போவதற்கு முன்னால் தமிழ் ரசிகர்களை அதற்கு தயார் படுத்த வேண்டியிருக்கிறது. அதை தான் கமலஹாசன், பாலா, பாலு மகேந்திரன் போன்றவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். மக்களின் ரசனை மாறாமல் இருக்கும் வரை இங்கே இது போன்ற படங்கள் மட்டுமே வெளிவரும். அதற்காக இங்கெ உள்ளவர்களுக்கு உலக தரத்தில் படம் எடுக்க தெரியாதவர்கள் என்று அர்த்தமல்ல.<br /><br />சந்தியா ராகம் படத்தின் நெகட்டீவ் அழிந்து விட்டது என்று கூறி அழுத பாலு மகேந்திரனின் நிலை தான் இன்றைய யதார்த்தம்.<br /><br />IMDB தரத்தில் முதலிடத்தில் உள்ள Shawashank Redemption கூட தோல்வி படம் தான். அங்கே தயராகும் அர்னால்ட், சில்வெஸ்டர் படங்களுக்கும் இங்க தயாரிக்க படும் ரஜினி படங்களுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. உலக தரத்தில் படங்கள் எடுக்கும் நாட்டில் தான் அர்னால்ட் கலிஃபோர்னியா மாகானத்தில் கவர்னராக தேர்ந்தெடுக்க பட்டிருக்கிறார்.<br /><br />உலக படங்களை ஒன்றுவிடாமல் பார்க்கும் சாருவிற்கே கதை புரியவில்லை என்றால் சாமானிய மக்களுக்கு எப்படி புரியும். தமிழ் படமோ, கொரியா படமோ மொதல்ல படத்தை பார்த்துட்டு விமர்சணம் எழுதுங்கப்பா.</p><p>Please excuse for any grammer mistakes in this post.</p><p></p>Bleachingpowderhttp://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.com64tag:blogger.com,1999:blog-3650255165773264699.post-67419324004629540772009-02-24T14:25:00.005+05:302009-02-24T15:31:18.680+05:30நான் கடவுள் - பதிவர்களின் விமர்சணத்திற்கு ஜெயமோகன் பதில்<p>கவனமில்லாமல் எடுத்த எந்தக் காட்சியும் படத்தில் இல்லை என்பதே நான் உணர்ந்தது. அவர் அளித்த கவனமும் உழைப்பும் பத்து சதவீதம் கூட பார்வையாளர்களால் ,அதிலும் தேர்ந்த பார்வையாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களால், கவனிக்கப்படவில்லை.</p><p>மேலும் படிக்க...</p><p><a href="http://jeyamohan.in/?p=1869">http://jeyamohan.in/?p=1869</a></p><p><a href="http://jeyamohan.in/?p=1873">http://jeyamohan.in/?p=1873</a></p><p></p><p></p><p></p>Bleachingpowderhttp://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.com15tag:blogger.com,1999:blog-3650255165773264699.post-22193352891458575392009-02-19T14:40:00.008+05:302009-02-19T16:41:16.086+05:30மீண்டும் தரணியுடன் இனைகிறார் டாக்டர்.விஜய்எது நடக்க கூடாதுன்னு நம்ம நினைச்சு பயந்திட்டு இருந்தமோ அது நடக்க போகுது! விஜயின் ஐம்பதாவது படத்தை தரணி இயக்கவிருக்கிறார்.<br /><br />கதை விவாதம் பாண்டிச்சேரிக்கு அருகில் இருக்கும் ஒரு பீச் ரிசார்டில் நடந்து வருகிறது. அதில் பங்கு பெற்ற ஒரு உதவி இயக்குனரும் பதிவருமான (அதான் இப்ப எந்த பதிவர கேட்டாலும், நான் சினிமால இருக்கேன்னு சொல்றது ஃபேஷனாயிடுச்சே) எனது நண்பர் படத்தின் கடைசி இருபது நிமிட திரைக்கதையை அனுப்பியுள்ளார்.<br /><br />பிரகாஷ்ராஜ், விஜயின் அம்மாவை கொலை செய்து, தங்கச்சியை கற்பழித்து. வீட்டையும் கொளுத்தி விட்டு நயண்தாராவை அமெரிக்காவிற்கு கடத்தி போய் விடுகிறார். விஜய் உடனே காதலியை காப்பாற்ற அமெரிக்கா போக வேண்டிய கட்டாயம், ஆனால் தளபதியிடம் விசா,பாஸ்போர்ட், கையில காசு, எதுவுமே இல்லை. இப்ப இளைய தளபதி என்ன பண்ண போறாரோனு ரசிகர்கள் எல்லா டென்ஷனா இருக்க. மீனாம்பாக்கத்திற்கு மீன் பாடி வண்டியில வேகமா போயிட்டிருந்தவர் அப்படியே வண்டிய ஒரு யூ டர்ன் அடிச்சி, மவுண்ட் ரோடில் இருக்கும் எல்.ஐ.சி பில்டிங்கிற்கு வந்து ரெண்டே ஜம்பில் மொட்டை மாடிக்கு போயிடறாரு...அப்போ பார்த்து கரெட்டா சென்னை to அமெரிக்கா<br />போர்டை தொங்க விட்டு ஒரு ஏர் டெக்கான் ஃபளைட் அந்த பக்கமா போறத விஜய் பார்த்துட்டாரு. ரசிகர்களும் சரி தளபதி ஒரே டைவில் விமானத்தோட இறக்கையை புடிச்சுட்டே அமெரிக்கா போயிடுவாருன்னு நினைச்சு விசிலடிக்க தயாராக அங்க தான் ஒரு ட்விஸ்ட்......<br /><br />மொட்டை மாடியில் இருந்து டைவ் அடித்தது என்னவோ உண்மை, ஆனா அவர் அப்படியே நேர போய் விமானத்தை பிடிக்கவில்லை அதற்கு பதிலா தனது ரெண்டு கையையும் இறக்கை மாதிரி வைத்துக் கொண்டு ஏர்லையே பனிரெண்டு மணிநேரமா மிதக்குறார். அவர் மிதந்தா என்ன பூமி தான் சுத்துதே, பனிரெண்டு மணி நேரம் கழிச்சு அவர் கீழே குதிச்சா அது அமெரிக்கா!!!<br /><br />அப்புறம் என்ன, முகத்துல சந்தனத்தை பூசிட்டு எல்லா வில்லன்களையும் கொன்று விட்டு நயந்தாராவை அழைச்சுட்டு அதே ஸ்டைலில் இருவரும் இந்தியாவில் லேண்டாகிறார்கள்.<br /><br />டிஸ்கி 1: sms ல வந்ததை கொஞ்சம் உப்பு, புளி,காரம் போட்டு கலந்திருக்கிறேன்..<br /><br />டிஸ்கி 2: sms ல வந்தது ஒன் லைன் ஸ்டோரி தான். ஆனா திரைக்கதை எழுதியது நானு(ஹைய்... இப்ப நானும் சினிமால இருக்கேன்) அதனால என்னை கேட்காம விஜயோ அல்லது வேறு எந்த நடிகராவது இதை பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்..Bleachingpowderhttp://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.com45tag:blogger.com,1999:blog-3650255165773264699.post-42709005977127874422008-10-24T20:15:00.001+05:302008-10-24T20:19:27.512+05:30பொழச்சு போங்க !!!!யட்சன்,நல்லதந்தி,நான் ஆதவன், யோசிப்பவர் போன்ற நண்பர்களின் வேண்டுகோளை ஏற்று என்னுடய முந்தய பதிவான தமிழ்மண சிங்கம் கர்ஜிக்கிறது பதிவை எடுத்து விட்டேன்.என்னோட நண்பர்கள் சொன்னா அது சரியாக தான் இருக்கும்<br /><br />என்ன அவர கேட்க ஆளில்லாம போயிடும்னு பார்த்தேன். சரி வுடுங்க. ஆணவத்தின் உச்சம் தான் அந்த பதிவு.Bleachingpowderhttp://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.com28tag:blogger.com,1999:blog-3650255165773264699.post-67154520619243079752008-10-14T20:49:00.007+05:302008-10-15T09:52:28.629+05:30பிரபல பதிவர்கள் மட்டும் படிக்க வேண்டிய பதிவுதமிழ்மணத்தில் பதிவெழுதி நாமளும் கொஞ்சம் பிரபலம் ஆகிவிட்டால் அடுத்து செய்ய வேண்டியது என்ன என்பதை சில மூத்த பதிவர்களை பதிவை பார்த்து நான் கற்றுக்கொண்டதை உங்களுடம் பகிர்ந்து கொள்ள வேண்டியே இப்பதிவு. சரி இப்போ ஆக வேண்டிய காரியத்தை பார்ப்போம்.<br /><br />1. பின்னூட்டமிட்ட அனைவருக்கும் விளக்கமாக நன்றி, பதில் எழுதுவதை உடனே நிறுத்த வேண்டும்.<br /><br />2. எக்காரணத்தை கொண்டும் புதிய பதிவர்கள் எழுதிய பதிவிற்கு, மூத்த பதிவர்கள் பின்னூட்டமிட கூடவே கூடாது. அது போன்ற அகௌரவமான செயல் வேறெதுவுமில்லை.<br /><br />3. நம் பேரை தலைப்பாக போட்டு யாராவது பதிவு எழுத மாட்டாங்களானு ஏங்கிட்டு இருக்கும் போது, அப்படி யாராவது பதிவெழுதினால் அந்த சந்தோஷத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல். வாட் நான்சென்ஸ் இஸ் திஸ்... ஐ டோண்ட் லைக் ஆல் திஸ் திங்க்ஸ்... எனக்கு ரொம்ப uneasyயா இருக்குனு சொல்லனும்.<br /><br />4. அப்பப்போ யாருக்காவது பகிரங்க கடிதம் எழுதிட்டே இருக்கனும்.<br /><br />5. யாராவது பதில் சொல்ல முடியாத படி ஏடாகூடமான கேள்வியை பின்னூட்டத்தில் கேட்டால், தப்பி தவறி கூட அதை வெளியிட கூடாது.<br /><br />6. அப்படியும் எதாவது ஒரு நல்லவன் அத பதிவா போட்டுட்டான்னா, அவன் என் பேர யுஸ் பண்ணி அமெரிக்க ஜனாதிபதி ஆக முயற்சி பண்றானு ஒரு அறிக்கை விடனும்.<br /><br />7. வாரம் ஐந்து படங்களுக்கு திரை விமர்சணம் எழுதியே ஆகனும்.<br /><br />8. நமக்கு பிடித்த ஜால்ரா போடுற பதிவரை பத்தி யாராவது தவறுதலா உன்மையை எழுதினாலும், அந்த பதிவிற்கு எக்காரணம் கொண்டும் பின்னூட்டமிட்டு நம் நண்பர்களை பகைத்துக் கொள்ள கூடாது.<br /><br />9. நான் ஒரு பகுத்தறிவாதி. நாட்டில் நடக்கும் அனைத்து திவிரவாத தாக்குதலுக்கும் காரணம் இந்து வெறியர்களே, இஸ்லாமிய சகோதரர்களுக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. பண உதவி, பொருளுதவி செய்து கட்டாய மத மாற்றம் செய்வது இந்துக்களே, கிறித்துவ சகோதரர்களுக்கு சேவை செய்வதை தவிர வேறெதுவும் தெரியாது என்று நடுநிலையாக எழுத வேண்டும்.<br /><br />10.அடுத்து ரொம்ப முக்கியமானது பார்பாணிய எதிர்ப்பு பதிவு. வாரம் ஒரு முறையாவது, இந்த சமுகத்தை அசிங்கப் படுத்தி எழுதியே ஆக வேண்டும். ஏன்னா இவங்களை எவ்வளவு அசிங்கப்படுத்தினாலும், அதை ஒதுக்கி விட்டு நல்லா படிச்சு அமெரிக்கா போய் செட்டில் ஆகிடுவாங்க. பதிவு எழுதினவங்க தான் முக்கி முக்கி படிச்சு ஏதாவது இடஒதுக்கீட்டுல வேலை கிடைக்காதானு அரசாங்கத்திற்கு மனு எழுதிட்டு இருப்பாங்க.<br /><br />11. பின்நவினதுவ இலக்கியம் பற்றி தெரியுதோ இல்லையோ, சும்மா எதையாச்சும் கிறுக்கி வையுங்க. யாருக்கும் புரியாது, நமக்கு புரியலைனு தெரிஞ்சா மத்தவன் தப்பா நினைப்பான்னு எல்லாரும் ஆஹா...ஒஹோ..சூப்பர்...கலக்கிடீங்கனு அள்ளி விடுவாங்க. விசியம் தெரிஞ்சவன் எவனும் நம்ம பதிவ படிக்க மாட்டான், அதனால கவலையே படாதீங்க.<br /><br /><br />12. சாரு, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்னன் போன்ற எழுத்தாளர்கள் யாராவது அவர்கள் நடத்தும் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தால்(வீடாவிட்டாலும்) மொத ஆள போய் அங்க எடுபிடி வேலையாவது செஞ்சு, உங்க பேர அவர்கிட்ட சொல்லிடுங்க. அப்ப தான் பதிவர் கூட்டத்தில், " ஆமா சாரு கூட கேட்டான், என்னுடைய கட்டுரையை கொஞ்சம் திருத்திக் கொடுக்க முடியுமானு, நான் முடியாதுன்னு சொல்லீட்டேனு" பீலா உட முடியும்.<br /><br /><br />13. அப்புறம் முக்கியமானது தலைப்பு. க்வட்டரும் கோழிப் பிரியாணியும், பாலக்காட்டு பால்காரி, சுவைக்கும் சுமதி, மிலிட்டரிகாரன் பொண்டாட்டி, மல்கோவா ஆண்டி போன்ற நாகரிகமான தலைப்பையே வைக்க வேண்டும்.<br /><br /><br />இப்போதைக்கு எனக்கு தோனுனது இவ்வளவு தான் மக்களே. ஏதாச்சும் விட்டு போயிருந்தா பின்னூட்டத்துல சொல்லுங்க.Bleachingpowderhttp://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.com117tag:blogger.com,1999:blog-3650255165773264699.post-81932181858899566102008-10-07T11:16:00.005+05:302008-10-07T16:13:59.500+05:30எழுத்துலக சூப்பர் ஸடார் வச்ச ஆப்பு !!அதிர்ஷ்டதை ஆங்கிலத்தில் குறிக்கும் சொல்லை முதலாவதாக வைத்து பதிவு எழுதிவரும் பதிவர் சமீபத்தில், தன்னுடைய பேரை வைத்து பதிவெழுதி பேரையும், புகழையும் அதனால் வரும் பணத்தை வைத்து போயஸ் கார்டனில் நாலு பங்களாவும், குன்னூரில் நானூறு ஏக்கர் டீ எஸ்டேட்டும், வாங்கி குவிப்பதாக ஒரு பதிவில் கழிந்திருந்தார் சாரி பதிந்திருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.<br /><br />அதே போல் பாருவை திட்டியோ இல்லை பாராட்டியோ அவருக்கு கடிதம் எழுதினால் அவற்றில் ஒரிரெண்டை பொறுக்கி, அவ்வபோது அவர் தளத்தில் வெளியிட்டு வந்தார். இதுவும் அனைவரும் அறிந்ததே. இதை பார்த்த சில பதிவர்கள், தங்களுடைய தளத்தை பற்றி எதாவது எழுத மாட்டாரா அதனால் நாமும் பிரபலாமான எழுத்தாளர் என்று வெளியே போய் பீத்திக்கலாம்னு நினைச்சு, அவரை ஆகா ஒகோனு சிலர் புகழ ஆரம்பிச்சாங்க.<br /><br />இவங்களுக்கு பாருவை பத்தி இன்னமும் சரியா தெரியல. வசதியில் குறைவென்றாலும் ரோசத்தில் மனுசன் கோடீஸ்வரன். இவருடைய அதிர்ஷ்டம்(??) அவர் ஆன்லைனில் இருக்க, அவரை நீ சும்மா தானா இருக்கே வா பீச்சுக்கு, நாம சுண்டகஞ்சி குடிச்சிட்டே பேசுவோம்ற ரீதியிலா கூப்பிட்டிருக்காரு. இது போதாத பாருவிற்கு அவருடைய தளத்தில் இவரை ,"என்னுடைய இந்த மனிதாபிமானப் பண்பைத் தங்களுக்குச் சாதகமாக நினைத்துக் கொண்டு பலரும் நம்முடைய தலைக்கு மேல் ஏறிக் கொண்டு நம்மைக் கழுதை மேய்க்கப் பார்க்கிறார்கள்னு." கீழி கீழின்னு கீழிச்சு தோரணம் கட்டிட்டாரு.<br /><br />இதுல பெரிய சோகம் என்னனா அவர் நாகரிகம் கருதியோ என்னமோ கடைசி வரைக்கும் தன்னை கூப்பிட்ட பதிவர் யாருன்னே சொல்லலை. அத அப்படியே விட்டிருக்கலாம்.<br /><br />ஆனா நம்மாளு திட்டறத தான் திட்டுறாரு நம்ம பேரை போட்டு திட்டுனா, வடிவேலு மாதிரி, எல்லாரும் பாத்துக்கோங்க நானும் ரவுடிதான்னு சொல்லிக்கிலாம்னு பாத்த அவரும் வெறுத்து போய், நான் தான் அவரை அப்படி கூப்பிட்டேன்னு, இப்ப பகிரங்க கடிதம் எழுதியிருக்காரு. பாவம் எப்படி இருந்த டமாரு கொமாரு இப்படி ஆயிட்டாரு.<br /><br />இப்பதிவின் நீதி : மெலியோரை வலியோர் ஏளனம் செய்தால், அந்த வலியோருக்கு ஆப்படிக்க ஒரு மாதத்திற்குள் அடுத்த ஆள் வருவான்.<br /><br />டிஸ்கி 1 : இப்பதிவு யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால், அதற்கு நான் ஒன்னும் பண்ண முடியாது.<br /><br />டிஸ்கி 2 : தமிழ் நாட்டில் நிலவும் மின் வெட்டிற்கும் இந்த பதிவிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.<br /><br />டிஸ்கி 3 : நான் அவனில்லை.Bleachingpowderhttp://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.com51tag:blogger.com,1999:blog-3650255165773264699.post-60277803377301488942008-09-16T15:34:00.007+05:302008-09-16T16:30:14.674+05:30நடுநிலை தவறாத லக்கியே நீ வாழ்க! பரிசல், FYI...வழக்கம் போல இந்த முறையும் லக்கி பதிவில் நான் இட்ட பின்னூட்டம் வெளியாக வில்லை. எதிர்பார்த்ததுதான் என்றாலும், ஒரு மூத்த பதிவர் தன் கருத்திற்க்கு எதிராக வரும் சிறிய எதிர்பை கூட பதிய மறுக்கும் போது வருத்தம் வரவில்லை, சுர்ருனு கோவம் தான் வருது.<br /><br />இந்த இரண்டு மாதங்களில் நான் பார்த்த தமிழ்மணம் சூழல் இதுதான். பதிவர்கள், குறிப்பாக மூத்த பதிவர்கள், வெறும் குழூக்களாக செயல் படுகிறார்கள். இவர்கள் பதிவை பார்த்தால், we will be seeing same set of comments from same set of people. ஒருவருக்கொருவர் முதுகை சொறிந்து கொண்டு, எதை எழுதினாலும் அதை ஆகா ஓகோனு புகழ்ந்து, பதிவுலக சூறாவளி, சிங்கம், டைனோசர், குரங்குனு பட்டம் வேற கொடுத்துக்குறாங்க.<br /><br />சரி மேட்டருக்கு வருவோம். இன்று லக்கி தன்னோட வலைதளத்தில், சன் குழுமத்தை பந்தாடிய பருத்திவீரன் கலைஞர்னு ஒரு பதிவு போட்டிருந்தார். அதில் <span style="color:#990000;">"நேற்று பருத்திவீரனுக்கு முன்பாக படையப்பா போணி ஆகவில்லை (ரோபோ வரும் வரை ரஜினியால் ஏது போணி?) "</span> என்று ஒரு வரி எழுதியிருந்தார். இதற்கு பதிலாக, கிழே தரப்பட்டுள்ள பின்னூட்டத்தை அவரது பதிவில் இட்டிருந்தேன்.<br /><br /><span style="color:#cc0000;">//நேற்று பருத்திவீரனுக்கு முன்பாக படையப்பா போணி ஆகவில்லை // </span><br /><span style="color:#cc0000;">தவறான தகவல். நேற்று பெரும்பாலான வீடுகளில் படையப்பா படம் தான் ஓடிக்கொண்டிருந்தது. என்ன தான் பருத்திவீரன் சிறந்த படமென்றாலும், பெண்கள் குழந்தைகளுடைய சாய்ஸ் படையப்பா தான்.</span><br /><span style="color:#cc0000;"></span><br /><span style="color:#cc0000;">//(ரோபோ வரும் வரை ரஜினியால் ஏது போணி?)// </span><br /><span style="color:#cc0000;"></span><br /><span style="color:#cc0000;">ஒரு தோல்வி படம் கொடுத்தால், அடுத்து வெற்றி படம் கொடுக்கும் வரை அவர் படத்தை யாரும் பார்க்கமாட்டார்கள் என பொருள் பட பேசும் உங்கள் அறிவு திறனை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.</span><br /><span style="color:#cc0000;"></span><br /><span style="color:#cc0000;">இன்னைக்கும் கரகாட்டகாரன் படம் எந்த டிவியில் போட்டாலும் மக்கள் அதை பார்பார்கள். இப்போ ராமராஜனுக்கு மார்க்கெட் இல்லை அதனால் இதை யார் பார்பார்கள் என்று நினைத்தால் அதை விட முட்டாள்தனம் எதுவும் இல்லை. </span><br /><span style="color:#cc0000;"></span><br /><span style="color:#cc0000;">அப்புறம் அடுத்த வாரம் கலைஞர் டிவில் சிவாஜி போட்டாலும் யாரும் பார்க்க மாட்டார்கள் என்கிறீர்களா?</span><br /><span style="color:#cc0000;"></span><br /><span style="color:#cc0000;">டி.ஆர்.பி ரேட்டிங்கில் ரஜினி படம் தான் எப்போதுமே நெ.1 என்பதை என்னை விட அத்துறையில் இருக்கும் உங்களுக்கு நன்றாகவே தெரியும் என்று நினைக்கிறேன்.</span><br /><br />மேற்கண்ட பின்னூட்டத்தில் ஏதாவது தவறு இருந்தால், அதை தயவு செய்து பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். திருத்திக் கொள்கிறேன்.<br /><br />தினமும் ஒரு அரை நிர்வாண பெண்ணின் புகைபடத்தை வெளியிடும் அவரை இதுவரை எந்த ஒரு மூத்த பதிவரும் கண்டித்த மாதிரி தெரியவில்லை. இதை விட கொடுமை இன்று அதை பரிசல்காரர் சூப்பர் என்று வர்ணித்தது தான். பரிசல்காரரே மனதை தொட்டு சொல்லுங்கள், லக்கியின் இந்த செயலை நீங்கள் ஆதரிக்கிறீர்கள் என்று. பெரும்பாலான பதிவர்களுக்கு இது தவறு என்று தெரிந்தாலும் எங்கே நட்பு கெட்டு விடுமோவோ என்ற சங்கடமோ இல்லை இந்த பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற பயமா என்று தெரியவில்லை.<br /><br />பாத்து எதாவது செய்யுங்க பாஸ்.<br /><br />பின் குறிப்பு : கடைசியாக முயற்சியாக "கலைஞர் வாழ்க" னு ஒரு பின்னூட்டத்தை இடுகிறேன், இதுவாவது கண்டிப்பாக வரும் என்ற நம்பிக்கையோடு.<br /><br />please excuse for any grammer errors in this posting.Bleachingpowderhttp://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.com60tag:blogger.com,1999:blog-3650255165773264699.post-88668275492631406502008-08-28T10:34:00.006+05:302008-08-28T12:46:07.263+05:30இயக்குனர் சீமானை கண்டு உலகமே நடுங்குகிறதுதம்பி படத்தில் மாதவன், பூஜாவின் காதலை ஏற்று கொண்டவுடன் தடாலென்று மாதவன் காலில் விழுந்து நன்றி தெரிவிப்பார் பூஜா(மணியம்மையார் பெரியார் காலில் விழுந்ததாக நான் படித்ததில்லை). இதுபோன்ற புரட்சிகரமான காட்சிகளையும். பாஞ்சாலகுறிச்சி படத்தில் வரும் ஒரு பாடலில் "என் சேலை கசங்கிடும் யோகம் இன்னைக்கு போன்ற கருத்துள்ள பாடல்களையும் இயக்கிய சீமானை பார்த்து இந்த உலகமே நடுங்குகிறது.<br /><br />கோவையில் இவர்கள் நடத்திய விழாவை தடுக்க நினைத்த 15 பேர் கொண்ட ஆர்.ஸ்.ஸ் மதவெறி கும்பலை பெரியார் தொண்டர்கள் நன்கு கவனித்து அனுப்பினார்களாம். அப்புறம் இவர்கள் விழா நடைபெற்ற கோவை, கவுண்டம்பாளையம் ஆர்.ஸ்.ஸ் காரர்களின் கோட்டையாம். அட ராமா... எண்ணிபார்த்தால் ஐம்பது பேர் கூட இருக்க மாட்டார்கள் அந்த இயக்கத்தில். இவர்களை விரட்டி அடித்ததை பெருமையாக கூறி நம்ம நண்பர் மதிமாறன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.<br /><br />தகறாறு செய்ய வந்த ரவுடிகளை நோக்கி, “வாடா, தில்லு இருந்தா மோதி பாருடா, நீயா நானா பாத்துருலாம்” என்று நெஞ்சு நிமிர்த்தி நின்ற சீமானின் துணிச்சல் மரியாதைக்குரியதாம். 600 பேர் உடன் இருக்கும் போது 15 பேரை விரட்டி அடிப்பதில் என்ன வீரம் இருக்கிறது.<br /><br />சேகுவாரா படத்தையும், உறுமும் புலியின் படத்தை போட்ட பனியனை அணிந்தால் வீரம் தானா வந்துவிடுமா. ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் தனியாளாய் நின்று எதிர்த்து கருத்து சொல்லும் தைரியம் இங்கெ எத்தனை பேருக்கு இருக்கு (ரஜினி?). அதை தவிர்த்து மேடையும் மைக்கும் இருந்த்தால் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி கைத்தட்டல் வாங்குவது என்ன பெரிய சாதனையா?<br /><br />பெரியார் மீண்டும் வந்தால் முதல் வேலையா இவர்கள் எல்லோரையும் ஓட ஓட விரட்டிட்டு தான மறு வேலை பார்பார். சமுக சீர்திருத்தம், பெண் விடுதலை, தீண்டாமை, கடவுள் மறுப்பு, ஜாதி ஒழிப்பு, முட நம்பிக்கையை ஒழிப்பு என பல முகங்களை கொண்ட திரவிட கழகம் இப்பொழுது வெறும் இந்து மத எதிர்ப்பை மட்டுமே தனது கொள்கையாக வைத்துள்ளது.<br /><br />ஏழைகள் பசியோடு இருக்க சாமி சிலைக்கு பாலை ஊற்றினால் அவன் முகத்தில் காறி துப்பிவிட்டு அடுத்த வேலையை பார். அதை தவிர்த்து போய் பத்து பேரை கூப்பிட்டு, இதையே பொழப்பாக வைத்துக் கொண்டு தெருவுக்கு தெரு மேடை போட்டு, ஊரை கூட்டி அவன் பொழப்பையும் கெடுக்காதீங்க.<br /><br />அப்புறம் நாலு பேர் மேடையில் கூட இருக்கும் போது யார் யாரை வேண்டுமானாலும் எதிர்க்கலாம் (தி.க.வும், பி.ஜே.பி இருவரும்தான்), ஒத்தைக்கு ஒத்தை வாடான்னு சொல்லலாம். ஆனால் இவர்களில் பெரும்பாலானவர்கள் இரவில் ஒன்னுக்கு போக மனைவியின் துணையை நாடுபவர்களே.<br /><br />பெரியார் தொண்டர்களும் ஆர்.ஸ்.ஸ் காரர்களும் போடுவது தெருநாய் சண்டை. இரு பிரிவையும் சாரா மக்கள் இவர்களை கண்டால் ஒதுங்கி போவார்களே அன்றி யாருக்கும் ஆதரவு தரமாட்டார்கள்.Bleachingpowderhttp://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-3650255165773264699.post-32852299862541538972008-08-13T18:28:00.005+05:302008-08-14T00:15:50.633+05:30தமிழ்மணத்தில் உங்கள் பதிவு சூடான இடுகையில் வர வேண்டுமாதமிழ்மணத்தில் உங்கள் பதிவு சூடான இடுகையில் வர வேண்டுமா. இங்கே கொடுக்கபட்டிருக்கும் தலைப்பில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து, பதிவு போடுங்கள். எங்கள் பதிவு சூடான இடுகையில் வருவது எங்கள் நோக்கமல்ல, தரமான பதிவைதான் நாங்கள் பதிவோம் என்று கூறுபவர்கள், இப்பதிவின் கடைசி பகுதில் உள்ள தலைப்புகளை உபயோகபடுத்தி கொள்ளலாம்.<br /><br />முதலில் சூடான தலைப்புகள்.<br /><br />அப்துல் காலம் கண்ட கணவுகள்<br />அண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு<br />இளைஞர்கள் முன்னேற கடைப்பிடிக்க வேண்டியவை.<br />விவேகாநந்தரின் பொன் மொழிகள்.<br />தினம் ஒரு திருக்குறள்<br />மரம் வளர்ப்பதின் பயன்கள்<br />ப்ளாஸ்டிக் உபயோகபடுதுவதன் முலம் வரும் கேடுகள்.<br />இயற்கை முறையில் விவசாயம்.<br />மரம் வளர்ப்போம் பயன் பெறுவோம்.<br />இந்தியா முன்னேற நாம் செய்ய வேண்டியது என்ன??<br />மூலிகை மருத்துவம்.<br />சுதந்திர போராட்ட தியாகிகள் - சிறு குறிப்பு<br /><br />தரமான தலைப்புகள்.<br /><br />ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவியை கற்பழித்த காம வெறியன்<br />மூன்றெழுத்து நடிகை அடிக்கடி வெளிநாடு போகும் மர்மம்.<br />குருவி பார்ட் 2 - நடிகர் விஜய் அறிவிப்பு<br />தமிழின துரோகி ரஜினி - சத்தியராஜ்.<br />ஆசை அண்ணி - சிறுகதை<br />சிங்கள ராணுவம் மீண்டும் அட்டுழியம்.<br />இந்தியாவில் குண்டு வெடிப்பதற்கு காரணம் இந்து வெறியர்களே.<br />மல்கோவா மாமி, சுவைக்கும் சுமதி - லக்கி லுக் திரைவிமர்சணம்<br />தமிழ்மண நிர்வாகிகளுக்கு ஒரு பகிரங்க கடிதம்<br />நீச்சல் உடையில் நயன்தாரா.<br />சென்னையில் விபச்சாரம் - நேரடி ரிப்போர்ட்Bleachingpowderhttp://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-3650255165773264699.post-91477816951652039762008-08-12T11:21:00.006+05:302008-08-12T12:15:18.379+05:30'ப்ரியா' விகடன் திரை விமர்சனம் (1978) 52/100ஜாய்ஃபுல் சிங்கப்பூரையும், கலர்ஃபுல் மலேசியாவையும் ப்ரியாவுக்காக சுருட்டிக் கொண்டு வந்திருக்கிறார்கள் எஸ்.பி.டி. பிலிம் சார். கவர்சிகரமான டைட்டில்களுக்காக பிரசாத் புரொடக்ஷனுக்கு முதுகில் ஒரு தட்டு தட்டலாம் !<br /><br />ஜூலியஸ் சீசர் நாடகத்தில் ரஜினியின் நடை, உடை, பாவனை உறுமல் ஆனாலும் சிவாஜியை நினைவுபடுத்தும் படியாக செய்திருக்க வேண்டாம் !<br /><br />அடிக்கடி 'ரைட்' என்ற மேனரிசம். அதை ரஜினி வெளூத்துக் கட்டுகிறார். ஆனால் தியேட்டரில் 'ஹோல் டான்' என்று கத்துமளவுக்கு ஓவர் டோஸ் !<br /><br />கண்ணுக்கு குளிர்சியான சிங்கப்பூர் காட்சிகள். கிளிகள் சர்க்கஸ் செய்யும் அழகு, துள்ளி விளையாடும் நீர் நாய்கள் வந்து விளையாடுவது, இவை எல்லாமே குழந்தைகளோடு பெரியவர்களூம் கண்களை அகல விரித்துப் பார்க்கும் படியான காட்சிகள். இதற்கே நாம் கொடுக்கும் காசு செரித்துப் போகிறது.<br /><br />ரீ ரீகாட்டிங்கில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டிருக்கிறார் இளையராஜா. ஆனால் பாடல்களில் அவருடைய வழக்கமான 'பெப்' இல்லையே..! டார்லிங்...டார்லிங் தவிர.<br /><br />ஆங்கிலப் படங்களுக்கு இணையாக ஒரு கார் சேஸை இணைக்க வேண்டிய (ஒட்டு வேலை பிரமாதம்!) இடத்தில் இணைத்திருக்கிறார்கள். ஹாட் லி சேஸ் காவல் மாதிரி விறு விறுப்பு!<br /><br />தே.சீனிவாசனின் தயாரிப்பாளர் - டைரக்டர் காமெடி நயமான ஸடயைர். பக்கோட காதர் கூட ரொம்ப பிஸி என்னும் போது தியேட்டரில் தான் எத்தனை கைதட்டல்! ( கன்னடத்து தங்கவேலு) சிவராமுடன் சேர்ந்து நல்ல கலகலப்பு. அந்த உடம்பு பிடிப்பு காட்சி உச்சம்!<br /><br />ரஜினியைக் கொலை செய்ய வில்லன் கூட்டம் கொக்கின் தலையில் வெண்ணையைத் தடவுகிறது. 'சீஸர்' நாடகத்தில் நிஜக்கத்தியை வைத்து விடுவதன் முலம். ( அந்த காலத்து இல்லற ஜோதியில் 'சாக்ரடீஸ்' நாடகத்தில் சிவாஜியைக் கொல்ல உண்மையான விஷத்தை வைத்து விடுவார்கள்.) இதில் ரஜினி தப்பிய மர்மம்? அவர் என்ன வக்கீலா அல்லது மந்திரவாதியா?<br /><br />இறந்ததாகச் சொல்லி காட்டப் பட்ட ப்ரியா, மெழுகு பொம்மை என்கிறார் இன்ஸ்பெக்டர் கடைசியில் இந்த 'ப்ரியா' கொலை மர்மம், மூலக் கதையில் அழகாகப் பின்னப் பட்டிருந்தது. அதைப் படத்தில் கொலை செய்த்து விட்டார்கள்.<br /><br />சிங்கப்பூர் 97% கதை 3% - கலவை விகிதம் சரியாக இல்லையே!<br /><br />ஒரு ரகசியம்: குமுதத்தில் சுஜாதா 'ப்ரியா' என்ற தலைப்பில் தொடர் கதை ஒன்று எழுதியிருந்தார். அதிலிருந்து 'நைஸாக' இரண்டொரு காட்சிகளை இந்தப் படத்தில் 'காப்பி' அடித்து விட்டார்களோ என்ற சந்தேகம் லேசாக உண்டாகிறது - நம்கேன் வம்பு!<br /><br />Tailpiece: இந்த படத்தை அண்ணா தியேட்டரில் பார்த்தோம். படம் முடிந்து வெளியே வர தியேட்டரில் ஒரே வழிதான். அதுவும் எங்கோ பாதாளத்துக்குப் போய், மாடிப் படி ஏறி, எட்டுப் படி இறங்கி.... மவுண்ட் ரோடிலிருந்து மந்தை வெளிப்பாக்கத்துக்குப் போகிறோமோ என்ற பிரமை! ஆபத்து என்றால் தப்பி ஓடக் கூட வழியில்லையே!!<br /><br />முன்பாதி 28/50 + பின்பாதி 24/50 = மொத்தம் 52/100<br />-விகடன் விமர்சனக்குழுBleachingpowderhttp://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3650255165773264699.post-40874683694179652682008-08-06T10:51:00.003+05:302008-08-06T11:35:32.030+05:30குசேலன் - லக்கிலுக் பதிவில் வெளிவராத பின்னூட்டங்கள்நம்ம லக்கிலுக் குசெலன் படம் பாத்த பாவத்தை கழுவ பத்து பத்து படம் பார்த்தாராம். படமும் எப்படினா "நல்ல' சாப்ட் ஃபோர்னோ கம் த்ரில்லராம்" கேட்டுக்கோங்க ஜனங்களே. இது பத்தாதுனு சோனா படத்த வேற பதிவுல போட்டு தூள் கிளப்பிருக்காரு. அதை இன்னும் பாக்காதவங்க உடனே <a href="http://madippakkam.blogspot.com/2008/08/blog-post_04.html">http://madippakkam.blogspot.com/2008/08/blog-post_04.html</a> போய் பார்த்து உங்க பிறவி பயனை அடைஞ்சுருங்க.<br /><br />அவரோட பதிவ படிச்சுட்டு நானும் ஒரு பின்னூட்டம் போட்டு வச்சேன். எப்படீனா,உங்க தலைவர் கலை விழா என்ற பேரில் மேடையில் லைவ்வா பாக்குறதை நீங்க தியேட்டர்ல பார்க்கூறீங்க..தலைவன் எவ்வழியோ தொண்டன் அவ்வழி...கலக்குங்க...வாழ்க தமிழ்நாடு.<br /><br />ஆனா பாருங்க, இந்த மாதிரியெல்லாம் பின்னூட்டம் போட்டா, ஜெயலலிதா, சுப்பரமணியசாமியோட திட்டமிட்ட சதியோ என்னமோ தெரியில, நம்ம பின்னூட்டம் அவர் பதிவுல வரவே மாட்டேங்கறது. ஆனா நம்ம லக்கி ரொம்ப நடுநிலையான விமர்சகர் ஆச்சே, இந்த விசயம் தெரிஞ்சா ரொம்ப feel பண்ணுவாரே, அதான் என்னோட பதிவில போட்டுட்டேன்.<br /><br />அப்புறம் பத்து பத்து' - குசேலனை விட பத்து மடங்கு தரமாம். கொஞ்ச நாளைக்கு முன்பு சுட்ட பழம்னு ஒரு பின் நவினதுவ இலக்கிய படம் ஒன்றையும் பாராட்டி எழுதியிருந்தார் என்பதும் இங்கே குறிப்பிடதக்கது.<br /><br />அஞ்சரைக்குள்ள வண்டி, சுவைக்கும் சுமதி, மல்கோவா மாமி போன்ற பின்நவினதுவ கலைப்படங்களையும் பார்த்து படங்களுடன் விமர்சணம் போடுங்கள். ம்ம்ம்.. தமிழை வளர்க்க என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கறது.<br /><br />அப்புறம் சோனாவிற்கு இந்தாண்டு கலைமாமணி பட்டம் உங்க தலைவர் கையால கிடைச்சுரும்ல ??Bleachingpowderhttp://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.com18tag:blogger.com,1999:blog-3650255165773264699.post-52911866803237578092008-07-21T14:48:00.000+05:302008-07-21T15:05:08.268+05:30ரொம்ம்ம்ப நல்லவங்கஒரு எம்பிக்கு முப்பது கோடி, சிபு சோரனுக்கு Cabinet Minister, ஒரே இரவில் லக்னோ விமான நிலையத்திற்கு பெயர் மாற்றம், எல்லாம் எதுக்கு?? நமக்காகவும் நமது நாட்டின் முன்னேற்றத்திற்காக மட்டும் தான். பாவம் கைகாசு போட்டு நமக்காக இவ்வளவு பாடு படறத பார்த்தா வடிவேலு சொல்லறதுதான் நியாபகம் வருது. ஆமா, இவங்க ரொம்ம்ம்ப நல்லவங்க.<br /><br />இருக்க போறது இன்னும் ஆறு மாசம், இதுக்கே இவ்வளவு செலவு பண்ண தயாராக இருக்கிறார்கள் என்றால் இதுவரை எவ்வளவு சம்பாதிச்சிருப்பாங்க? அடுத்த ஆறு மாசதில எவ்வளவோ சம்பாதிப்பாங்க. இன்னொரு விசியம் தெரியுமா குதிரை பேரம் பண்ணகூடாதுனு சட்டம் ஏதும் இல்லையாம்.<br /><br />ஹ்ம்ம் இருந்தா மட்டும்...Bleachingpowderhttp://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3650255165773264699.post-76369974617163850512008-07-18T14:32:00.000+05:302008-07-21T15:06:15.867+05:30ஓர் இரவில்முன்று வருடங்களுக்கு முன்பு ஆணி புடுங்கறதுக்காக ஹைதரபாத் போய் இருந்தேன் அதுவரை தமிழ் நாட்டை தாண்டி வேலைக்காக வேறு எந்த மாநிலத்திற்கும் போனதில்லை. ஆங்கே போனதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சுது ஹிந்தி,தெலுங்கு தெரியலைனா சோறு கிடைகாதுனு. என்னதான் ஹிந்தி மேல அப்படி ஒரு காண்டு இருந்தாலும், இந்த புலிக்கு பசி வந்திருச்சுனா புல்லென்ன, நமிதா போஸ்டர கூட திங்கும்.<br /><br />சரி என்னடா பண்றதுனு மல்லாக்க படுத்துட்டு யோசிச்ச போது கிடச்சதுதான் இந்த ஐடியா, Learn hindi in 30 days புத்தகம். உடனே ஒடிப்போய் அந்த புத்தகத்த வாங்கி ஆர்வ கோளார்ல இரவு இரண்டு மணிவரை படிச்சிட்டு ச்சே இவ்வளவு தான் ஹிந்தியா, விடிஞ்சதும் முதல் வேளையா வெளியே போய் ஹிந்தி பேசி தூள் கிளப்பனும்னு நினனச்சுக்கிட்டு தூங்கிட்டேன்.<br /><br />காலைல எழுந்திருச்சு Railway Station போய் டிக்கட் புக் பண்ணிட்டு திரும்பும் போதுதான் அந்த விபரித ஆசை தோனுச்சு. ஏன் நாம ஆட்டோகாரன் கிட்டா ஹிந்தி பேச கூடாதுனு சரினு ஒரு ஆட்டோவ கூப்பிட்டு, டெல்லில பொறந்து வளந்தவன் மாதிரி முஞ்சிய வச்சுகிட்டு "Begumpet ச்லோ ன்னேன்" அவனும் "ஆய்யே சாப் பைட்டோ னான்" ஒகே ஹிந்தி வொர்கவுட் ஆகுது சந்தோசபட்டு அடுத்த பிட்ட போட்டேன், "கித்னா ??" அவனும்"பச்சீஸ் ருப்பீ சாப்னான்"<br /><br />பச்சீஸ்னா இருபத்தி அஞ்சு ருபாய். பச்சாஸ்னா ஐம்பது ருபாய்.<br /><br />நான் கொஞ்சம் Confuse ஆய், ரொம்ப ஜபர்தஸ்தா ரஜினி ஸ்டைல "பச்சீஸ் நய்.... பச்ச்சாஸ்ஸ்ஸ்" சொல்ல அவன் ரொம்ப குஷியாக ராஜ மரியாதையோட கொண்டு போய் சேர்த்து, ஐம்பது ருபாயை புடிங்கிட்டு உட்டுட்டான் படுபாவி.<br /><br />அடுத்த நாள் ஆபிஸ் போனா அசிங்க அசிங்கமா திட்றாங்க, ஏண்டா அவனே இருபத்தஞ்சு ருபா தான கேட்டான், நீயேண்டா ஐம்பது ரூபாய்க்கு பேரம் பேசுனேனு.<br /><br />காசு போனது கூட மேட்டர் இல்லீங்க, ஆனா அந்த ஆட்டோ ட்ரைவர் என்ன பத்தி என்ன நினனச்சுருப்பானு யோசிக்கும் போதுதான் அழுகை அழுகையா வருது.<br /><br />அப்ப மூடி வச்சதுதான் அந்த ஹிந்தி புக்கை இன்னைக்கு வரைக்கும் தொறக்கல.Bleachingpowderhttp://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-3650255165773264699.post-28878333579949919872008-06-16T18:58:00.000+05:302008-06-16T19:07:46.292+05:30One Extra BedroomA Bitter Reality.<br /><br />As the dream of most parents I had acquired a degree in Software Engineering and joined a company based in USA, the land of braves and opportunity. When I arrived in the USA, it was as if a dream had come true.<br /><br />Here at last I was in the place where I want to be. I decided I would be staying in this country for about Five years in which time I would have earned enough money to settle down in India.<br /><br />My father was a government employee and after his retirement, the only asset he could acquire was a decent one bedroom flat.<br /><br />I wanted to do some thing more than him. I started feeling homesick and lonely as the time passed. I used to call home and speak to my parents every week using cheap international phone cards. Two years passed, two years of Burgers at McDonald's and pizzas and discos and 2 years watching the foreign exchange rate getting happy whenever the Rupee value went down.<br /><br />Finally I decided to get married. Told my parents that I have only 10 days of holidays and everything must be done within these 10 days. I got my ticket booked in the cheapest flight. Was jubilant and was actually enjoying hopping for gifts for all my friends back home. If I miss anyone then there will be talks. After reaching home I spent home one week going through all the photographs of girls and as the time was getting shorter I was forced to select one candidate.<br /><br />In-laws told me, to my surprise, that I would have to get married in 2-3 days, as I will not get anymore holidays. After the marriage, it was time to return to USA, after giving some money to my parents and telling the neighbors to look after them, we returned to USA.<br /><br />My wife enjoyed this country for about two months and then she started feeling lonely. The frequency of calling Indiaincreased to twice in a week sometimes 3 times a week. Our savings started diminishing.<br /><br />After two more years we started to have kids. Two lovely kids, a boy and a girl, were gifted to us by the almighty. Every time I spoke to my parents, they asked me to come to Indiaso that they can see their grand-children.<br /><br />Every year I decide to go to India… But part work part monetary conditions prevented it. Years went by and visiting Indiawas a distant dream. Then suddenly one day I got a message that my parents were seriously sick. I tried but I couldn't get any holidays and thus could not go to India ... The next message I got was my parents had passed away and as there was no one to do the last rights the society members had done whatever they could. I was depressed. My parents had passed away without seeing their grand children.<br /><br />After couple more years passed away, much to my children's dislike and my wife's joy we returned to Indiato settle down. I started to look for a suitable property, but to my dismay my savings were short and the property prices had gone up during all these years. I had to return to the USA...<br /><br />My wife refused to come back with me and my children refused to stay in India... My 2 children and I returned to USAafter promising my wife I would be back for good after two years.<br /><br />Time passed by, my daughter decided to get married to an American and my son was happy living in USA... I decided that had enough and wound-up every thing and returned to India... I had just enough money to buy a decent 02 bedroom flat in a well-developed locality.<br /><br />Now I am 60 years old and the only time I go out of the flat is for the routine visit to the nearby temple. My faithful wife has also left me and gone to the holy abode.<br /><br />Sometimes I wondered was it worth all this?<br /><br />My father, even after staying in India,<br /><br />Had a house to his name and I too have the same nothing more.<br /><br />I lost my parents and children for just ONE EXTRA BEDROOM.<br /><br />Looking out from the window I see a lot of children dancing. This damned cable TV has spoiled our new generation and these children are losing their values and culture because of it. I get occasional cards from my children asking I am alright. Well at least they remember me.<br /><br />Now perhaps after I die it will be the neighbors again who will be performing my last rights, God Bless them.<br /><br />But the question still remains 'was all this worth it?'<br /><br />I am still searching for an answer.................!!!<br /><br />START THINKING<br /><br />IS IT JUST FOR ONE EXTRA BEDROOM???<br /><br />LIFE IS BEYOND THIS …..DON'T JUST LEAVE YOUR LIFE ……..START LIVING IT ……. LIVE IT AS YOU WANT IT TO BE …….Bleachingpowderhttp://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3650255165773264699.post-87394103889517017212008-06-12T17:03:00.000+05:302008-06-12T17:12:03.988+05:30DAVINCI CODE CHINESE VERSION - The Hidden Secret...Open this picture in a new window and Press Ctrl A... you may see something<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_GsEvljKWN1olnz1hfvnzFqD0ev33-wZAQPjdlP1wE2Q3kYgEK2rf6G0GtbLi_ip2Ah9UO1zr68uI4A-Q_QCGF6oOt1ynR3DaSkGZquntt4jXsWsaHSplsHzh_aqhKoP3bNl7x8FTnGI/s1600-h/chinesedavinci.GIF"><img id="BLOGGER_PHOTO_ID_5210958435271480498" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_GsEvljKWN1olnz1hfvnzFqD0ev33-wZAQPjdlP1wE2Q3kYgEK2rf6G0GtbLi_ip2Ah9UO1zr68uI4A-Q_QCGF6oOt1ynR3DaSkGZquntt4jXsWsaHSplsHzh_aqhKoP3bNl7x8FTnGI/s400/chinesedavinci.GIF" border="0" /></a><br /><div></div>Bleachingpowderhttp://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-3650255165773264699.post-51086813457132238842008-06-11T16:00:00.000+05:302008-06-11T20:15:37.588+05:30முடிஞா சிரிங்க...<span style="color:#cc0000;">முடிஞா சிரிங்க...</span><br /><br /><span style="font-size:85%;">This is a short story written by Dr Kishore Shah....he is a gynaecologist in Pune and a very gifted writer....enjoy this extremely funny story .</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">My wife is an ENT Surgeon while I am a Gynaecologist. This can lead to some complications, as I recently learned to my anguish. A General Practitioner called me up and told me that she is sending a patient of hers for an abortion. Unknown to me, she had also referred a female with earwax for removal of the wax to my wife.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">I duly informed the receptionist to send the patient right in as she was expected (and expecting!) As Murphy lays down the laws of our hospital, it was but natural that the patient who wanted the wax removed from her ear, landed up with me. This is the conversation that I had with the patient.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">"Please come in. Be seated." I said with a big smile. I always have a big smile, when I am going to earn some money. The patient gave a feeble smile and sat hesitantly on the edge of the chair. "Relax."</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">"Doctor, will this hurt a lot?"</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">"Not at all."</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">The patient relaxed visibly. "You know something, Doctor, we tried removing it at home, but failed."</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">I was shocked. "Thank God. Trying this at home can cause serious complications."</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">"I first tried to remove it by jumping up and down, but it just wouldn't budge."</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">I smiled and said, "If it were that easy, who would need doctors?"</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">She gave a cute smile and said, "Yeah! My neighbour tried to remove it with his finger, but the hole is so small that he used a hair pin."</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">"Oh my God!"</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">"Yes! My mother even tried a matchstick."</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">My blood pressure was shooting skywards. I just sputtered without uttering a word.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">"Tell me, doctor, how do I avoid getting this dirt inside me?"</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">I knew that it was an unwanted pregnancy, but calling it dirt was too much.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">I replied a bit angrily, "There are tablets which can prevent this happening. Or you could use protection at night."</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">Now it was the patient's turn to be confused, "You mean to say that it happens only at night?"</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">I saw her point. "No! No! I meant anytime of the day, whenever you are in the mood, you should use protection."</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">She was even more confused, "It depends on my moods?"</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">Again I saw her point. "My mistake. You need not be in any sort of mood. It just happens."</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">"My neighbour advised me to go to one of those chaps who sit by the roadside."</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">"You mean that pin man?"</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">"Yeah!"This neighbour of hers seemed to be a very dangerous man. Besides using pins, he was sending her to such quacks. The only safety he knew was among the pins. "You were wise not to heed his advice."</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">"But I tried his other advice. He told me to put warm oil inside and wait.However, that also did not work."</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">This was getting more and more bizarre. Her neighbour deserved to be locked up either in a padded cell or a barred one.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">"But have you taken your husband's permission?"</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">Now the patient looked confused. "Do I have to take my husband's permission? Because if you need his sign, he is working in Dubai. We were not able to meet for the last one year.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">"It was my turn to be shocked. I gave a sly smirk. It was one of 'those'cases. The pin-wielding neighbour seemed to me the usual suspect. I reassured her. "No! No! The husband's sign is not at all needed."</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">"However, I did inform him on phone."</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">Her husband seemed to me a very broad-minded fellow. I didn't know whether to congratulate her or to commiserate with her. So I hastily turned to other aspects. "Its good that you came a bit early."</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">"Actually I wanted to come early in the morning, but I had some other work."</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">"Oh! I did not mean early today. I meant that if you had delayed this removal, it would have started moving. Then it would have developed a heartbeat."</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">The patient was staring at me wide eyed as if watching a horror movie.</span><br /><span style="font-size:85%;">Looking at her face, I decided that she was not fit to listen to the grotesque details. I decided to relieve her a bit. I said, "You will bleed a bit, but only for a few days."</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">By now, the poor patient was trembling, "how-H-How much bleeding?"</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">"Oh, only slightly more than your menstrual period, and it will continue only for a week or so."</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">By now the patient was clutching her hair in her fingers and staring at me wide-eyed. I asked her soothingly, "Why don't you lie down on the examination table? Remove your clothes and relax."</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">This was the final straw. She didn't even wish me goodbye. I saw just a blur of motion leaving my consulting room at top speed.</span><br /><span style="font-size:85%;"></span>Bleachingpowderhttp://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.com0