பிரபல பதிவர்கள் மட்டும் படிக்க வேண்டிய பதிவு
தமிழ்மணத்தில் பதிவெழுதி நாமளும் கொஞ்சம் பிரபலம் ஆகிவிட்டால் அடுத்து செய்ய வேண்டியது என்ன என்பதை சில மூத்த பதிவர்களை பதிவை பார்த்து நான் கற்றுக்கொண்டதை உங்களுடம் பகிர்ந்து கொள்ள வேண்டியே இப்பதிவு. சரி இப்போ ஆக வேண்டிய காரியத்தை பார்ப்போம்.
1. பின்னூட்டமிட்ட அனைவருக்கும் விளக்கமாக நன்றி, பதில் எழுதுவதை உடனே நிறுத்த வேண்டும்.
2. எக்காரணத்தை கொண்டும் புதிய பதிவர்கள் எழுதிய பதிவிற்கு, மூத்த பதிவர்கள் பின்னூட்டமிட கூடவே கூடாது. அது போன்ற அகௌரவமான செயல் வேறெதுவுமில்லை.
3. நம் பேரை தலைப்பாக போட்டு யாராவது பதிவு எழுத மாட்டாங்களானு ஏங்கிட்டு இருக்கும் போது, அப்படி யாராவது பதிவெழுதினால் அந்த சந்தோஷத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல். வாட் நான்சென்ஸ் இஸ் திஸ்... ஐ டோண்ட் லைக் ஆல் திஸ் திங்க்ஸ்... எனக்கு ரொம்ப uneasyயா இருக்குனு சொல்லனும்.
4. அப்பப்போ யாருக்காவது பகிரங்க கடிதம் எழுதிட்டே இருக்கனும்.
5. யாராவது பதில் சொல்ல முடியாத படி ஏடாகூடமான கேள்வியை பின்னூட்டத்தில் கேட்டால், தப்பி தவறி கூட அதை வெளியிட கூடாது.
6. அப்படியும் எதாவது ஒரு நல்லவன் அத பதிவா போட்டுட்டான்னா, அவன் என் பேர யுஸ் பண்ணி அமெரிக்க ஜனாதிபதி ஆக முயற்சி பண்றானு ஒரு அறிக்கை விடனும்.
7. வாரம் ஐந்து படங்களுக்கு திரை விமர்சணம் எழுதியே ஆகனும்.
8. நமக்கு பிடித்த ஜால்ரா போடுற பதிவரை பத்தி யாராவது தவறுதலா உன்மையை எழுதினாலும், அந்த பதிவிற்கு எக்காரணம் கொண்டும் பின்னூட்டமிட்டு நம் நண்பர்களை பகைத்துக் கொள்ள கூடாது.
9. நான் ஒரு பகுத்தறிவாதி. நாட்டில் நடக்கும் அனைத்து திவிரவாத தாக்குதலுக்கும் காரணம் இந்து வெறியர்களே, இஸ்லாமிய சகோதரர்களுக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. பண உதவி, பொருளுதவி செய்து கட்டாய மத மாற்றம் செய்வது இந்துக்களே, கிறித்துவ சகோதரர்களுக்கு சேவை செய்வதை தவிர வேறெதுவும் தெரியாது என்று நடுநிலையாக எழுத வேண்டும்.
10.அடுத்து ரொம்ப முக்கியமானது பார்பாணிய எதிர்ப்பு பதிவு. வாரம் ஒரு முறையாவது, இந்த சமுகத்தை அசிங்கப் படுத்தி எழுதியே ஆக வேண்டும். ஏன்னா இவங்களை எவ்வளவு அசிங்கப்படுத்தினாலும், அதை ஒதுக்கி விட்டு நல்லா படிச்சு அமெரிக்கா போய் செட்டில் ஆகிடுவாங்க. பதிவு எழுதினவங்க தான் முக்கி முக்கி படிச்சு ஏதாவது இடஒதுக்கீட்டுல வேலை கிடைக்காதானு அரசாங்கத்திற்கு மனு எழுதிட்டு இருப்பாங்க.
11. பின்நவினதுவ இலக்கியம் பற்றி தெரியுதோ இல்லையோ, சும்மா எதையாச்சும் கிறுக்கி வையுங்க. யாருக்கும் புரியாது, நமக்கு புரியலைனு தெரிஞ்சா மத்தவன் தப்பா நினைப்பான்னு எல்லாரும் ஆஹா...ஒஹோ..சூப்பர்...கலக்கிடீங்கனு அள்ளி விடுவாங்க. விசியம் தெரிஞ்சவன் எவனும் நம்ம பதிவ படிக்க மாட்டான், அதனால கவலையே படாதீங்க.
12. சாரு, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்னன் போன்ற எழுத்தாளர்கள் யாராவது அவர்கள் நடத்தும் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தால்(வீடாவிட்டாலும்) மொத ஆள போய் அங்க எடுபிடி வேலையாவது செஞ்சு, உங்க பேர அவர்கிட்ட சொல்லிடுங்க. அப்ப தான் பதிவர் கூட்டத்தில், " ஆமா சாரு கூட கேட்டான், என்னுடைய கட்டுரையை கொஞ்சம் திருத்திக் கொடுக்க முடியுமானு, நான் முடியாதுன்னு சொல்லீட்டேனு" பீலா உட முடியும்.
13. அப்புறம் முக்கியமானது தலைப்பு. க்வட்டரும் கோழிப் பிரியாணியும், பாலக்காட்டு பால்காரி, சுவைக்கும் சுமதி, மிலிட்டரிகாரன் பொண்டாட்டி, மல்கோவா ஆண்டி போன்ற நாகரிகமான தலைப்பையே வைக்க வேண்டும்.
இப்போதைக்கு எனக்கு தோனுனது இவ்வளவு தான் மக்களே. ஏதாச்சும் விட்டு போயிருந்தா பின்னூட்டத்துல சொல்லுங்க.
1. பின்னூட்டமிட்ட அனைவருக்கும் விளக்கமாக நன்றி, பதில் எழுதுவதை உடனே நிறுத்த வேண்டும்.
2. எக்காரணத்தை கொண்டும் புதிய பதிவர்கள் எழுதிய பதிவிற்கு, மூத்த பதிவர்கள் பின்னூட்டமிட கூடவே கூடாது. அது போன்ற அகௌரவமான செயல் வேறெதுவுமில்லை.
3. நம் பேரை தலைப்பாக போட்டு யாராவது பதிவு எழுத மாட்டாங்களானு ஏங்கிட்டு இருக்கும் போது, அப்படி யாராவது பதிவெழுதினால் அந்த சந்தோஷத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல். வாட் நான்சென்ஸ் இஸ் திஸ்... ஐ டோண்ட் லைக் ஆல் திஸ் திங்க்ஸ்... எனக்கு ரொம்ப uneasyயா இருக்குனு சொல்லனும்.
4. அப்பப்போ யாருக்காவது பகிரங்க கடிதம் எழுதிட்டே இருக்கனும்.
5. யாராவது பதில் சொல்ல முடியாத படி ஏடாகூடமான கேள்வியை பின்னூட்டத்தில் கேட்டால், தப்பி தவறி கூட அதை வெளியிட கூடாது.
6. அப்படியும் எதாவது ஒரு நல்லவன் அத பதிவா போட்டுட்டான்னா, அவன் என் பேர யுஸ் பண்ணி அமெரிக்க ஜனாதிபதி ஆக முயற்சி பண்றானு ஒரு அறிக்கை விடனும்.
7. வாரம் ஐந்து படங்களுக்கு திரை விமர்சணம் எழுதியே ஆகனும்.
8. நமக்கு பிடித்த ஜால்ரா போடுற பதிவரை பத்தி யாராவது தவறுதலா உன்மையை எழுதினாலும், அந்த பதிவிற்கு எக்காரணம் கொண்டும் பின்னூட்டமிட்டு நம் நண்பர்களை பகைத்துக் கொள்ள கூடாது.
9. நான் ஒரு பகுத்தறிவாதி. நாட்டில் நடக்கும் அனைத்து திவிரவாத தாக்குதலுக்கும் காரணம் இந்து வெறியர்களே, இஸ்லாமிய சகோதரர்களுக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. பண உதவி, பொருளுதவி செய்து கட்டாய மத மாற்றம் செய்வது இந்துக்களே, கிறித்துவ சகோதரர்களுக்கு சேவை செய்வதை தவிர வேறெதுவும் தெரியாது என்று நடுநிலையாக எழுத வேண்டும்.
10.அடுத்து ரொம்ப முக்கியமானது பார்பாணிய எதிர்ப்பு பதிவு. வாரம் ஒரு முறையாவது, இந்த சமுகத்தை அசிங்கப் படுத்தி எழுதியே ஆக வேண்டும். ஏன்னா இவங்களை எவ்வளவு அசிங்கப்படுத்தினாலும், அதை ஒதுக்கி விட்டு நல்லா படிச்சு அமெரிக்கா போய் செட்டில் ஆகிடுவாங்க. பதிவு எழுதினவங்க தான் முக்கி முக்கி படிச்சு ஏதாவது இடஒதுக்கீட்டுல வேலை கிடைக்காதானு அரசாங்கத்திற்கு மனு எழுதிட்டு இருப்பாங்க.
11. பின்நவினதுவ இலக்கியம் பற்றி தெரியுதோ இல்லையோ, சும்மா எதையாச்சும் கிறுக்கி வையுங்க. யாருக்கும் புரியாது, நமக்கு புரியலைனு தெரிஞ்சா மத்தவன் தப்பா நினைப்பான்னு எல்லாரும் ஆஹா...ஒஹோ..சூப்பர்...கலக்கிடீங்கனு அள்ளி விடுவாங்க. விசியம் தெரிஞ்சவன் எவனும் நம்ம பதிவ படிக்க மாட்டான், அதனால கவலையே படாதீங்க.
12. சாரு, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்னன் போன்ற எழுத்தாளர்கள் யாராவது அவர்கள் நடத்தும் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தால்(வீடாவிட்டாலும்) மொத ஆள போய் அங்க எடுபிடி வேலையாவது செஞ்சு, உங்க பேர அவர்கிட்ட சொல்லிடுங்க. அப்ப தான் பதிவர் கூட்டத்தில், " ஆமா சாரு கூட கேட்டான், என்னுடைய கட்டுரையை கொஞ்சம் திருத்திக் கொடுக்க முடியுமானு, நான் முடியாதுன்னு சொல்லீட்டேனு" பீலா உட முடியும்.
13. அப்புறம் முக்கியமானது தலைப்பு. க்வட்டரும் கோழிப் பிரியாணியும், பாலக்காட்டு பால்காரி, சுவைக்கும் சுமதி, மிலிட்டரிகாரன் பொண்டாட்டி, மல்கோவா ஆண்டி போன்ற நாகரிகமான தலைப்பையே வைக்க வேண்டும்.
இப்போதைக்கு எனக்கு தோனுனது இவ்வளவு தான் மக்களே. ஏதாச்சும் விட்டு போயிருந்தா பின்னூட்டத்துல சொல்லுங்க.
Labels: பதிவரசியல்

119 Comments:
At October 15, 2008 10:21 AM ,
SurveySan said...
:)
நீங்க புச்சு. நான் இங்க பின்னூட்டினா, நான் ப்ரபலம் இல்லன்னு நானே ஒத்துக்கர மாதிரி ஆயிடுமா?
அப்படீன்னா, என் கமெண்ட்ட டெலீட்டிடுங்க ;)
At October 15, 2008 10:23 AM ,
வால்பையன் said...
//பின்னூட்டமிட்ட அனைவருக்கும் விளக்கமாக நன்றி, பதில் எழுதுவதை உடனே நிறுத்த வேண்டும்.//
இல்லையென்றால் மொத்த பின்னூட்டத்திற்கும் சேர்ந்து ஒரு ஸ்மைலி போடலாம்
At October 15, 2008 10:25 AM ,
வால்பையன் said...
//எக்காரணத்தை கொண்டும் புதிய பதிவர்கள் எழுதிய பதிவிற்கு, மூத்த பதிவர்கள் பின்னூட்டமிட கூடவே கூடாது. //
இதில் ஒரு சிக்கல் இருக்கிறது,
அந்த புதியவர்கள் நமக்கு எதிர் க்ரூப்பில் சேர வாய்ப்பிருக்கிறது.
அதனால் அவரை பற்றி விசாரித்து வசதி வாய்ப்புகள் பார்த்து பின்னூட்டி கொள்ளலாம்
At October 15, 2008 10:27 AM ,
வால்பையன் said...
//நம் பேரை தலைப்பாக போட்டு யாராவது பதிவு எழுத மாட்டாங்களானு ஏங்கிட்டு இருக்கும் போது, //
நாமே நம்மை திட்டி அனானியாக பின்னூட்டம் இடலாம், நம் மீது இரக்கப்பட்டு பதிவர்கள் நமக்கு ஆதரவு தெரிவிப்பார்கள்
At October 15, 2008 10:27 AM ,
வால்பையன் said...
//அப்பப்போ யாருக்காவது பகிரங்க கடிதம் எழுதிட்டே இருக்கனும்.//
அல்லது கண்டிக்கிறேன் பதிவு
At October 15, 2008 10:30 AM ,
வால்பையன் said...
//யாராவது பதில் சொல்ல முடியாத படி ஏடாகூடமான கேள்வியை பின்னூட்டத்தில் கேட்டால், தப்பி தவறி கூட அதை வெளியிட கூடாது.//
குடிகார பசங்க சாவகாசம் நமக்கெதுக்கு,
அதனால வெளியிட வேண்டாம்
At October 15, 2008 10:30 AM ,
வால்பையன் said...
//அப்படியும் எதாவது ஒரு நல்லவன் அத பதிவா போட்டுட்டான்னா,//
போலியும் அவனும் மாமன் மச்சான் என்று புரளியை கிளப்பி விடலாம்
At October 15, 2008 10:31 AM ,
வால்பையன் said...
//அவன் என் பேர யுஸ் பண்ணி அமெரிக்க ஜனாதிபதி ஆக முயற்சி பண்றானு ஒரு அறிக்கை விடனும்.//
எதிர் கட்சிகளின் சதி என்று கூட சொல்லலாம்
At October 15, 2008 10:32 AM ,
வால்பையன் said...
//வாரம் ஐந்து படங்களுக்கு திரை விமர்சணம் எழுதியே ஆகனும்.//
அதில் ஒன்று மேட்டர் படமாக இருக்க வேண்டும்
At October 15, 2008 10:33 AM ,
வால்பையன் said...
//நமக்கு பிடித்த ஜால்ரா போடுற பதிவரை பத்தி யாராவது தவறுதலா உன்மையை எழுதினாலும், அந்த பதிவிற்கு எக்காரணம் கொண்டும் பின்னூட்டமிட்டு நம் நண்பர்களை பகைத்துக் கொள்ள கூடாது.//
ஆனாலும் அந்த பதிவிற்கு பின்னூட்டம் இடுபவர்கள் நமக்கு எதிரிகள் என்று கருத்தில் கொள்ள வேண்டும்
(பாவம் சர்வேசன் மாட்டிகிட்டார்)
At October 15, 2008 10:34 AM ,
Bleachingpowder said...
//நீங்க புச்சு. நான் இங்க பின்னூட்டினா, நான் ப்ரபலம் இல்லன்னு நானே ஒத்துக்கர மாதிரி ஆயிடுமா?//
இப்படி எடக்குமுடக்கா கேள்வி கேட்டா நான் என்ன பண்ணுவேன்.சரி சமாளிக்குறேன்...அதாவது, சில நேரங்களில் பிரபல பதிவர்கள், புதிய பதிவர்களின் பதிவிற்கு பின்னூட்டமிட்டபின், வெளியே போய் நான் தாண் டா இவன வளர்த்து விட்டவன்னு, என் பின்னூட்டத்த படிக்க தான் எல்லாரும் இவன் ப்ளாகிற்கு வராங்க சொல்லிக்கலாம். So இப்போ நீங்களும் பிரபல பதிவர் தான்... :))
சும்மா தமாசுக்கு தல.. தப்பா எடுத்துகாதீங்க :))
At October 15, 2008 10:37 AM ,
Bleachingpowder said...
//அப்பப்போ யாருக்காவது பகிரங்க கடிதம் எழுதிட்டே இருக்கனும்
அல்லது கண்டிக்கிறேன் பதிவு//
ஹா..ஹா..ஹா.. அதுக்கு தானே நாம இருக்குறோம் :))
At October 15, 2008 10:37 AM ,
வால்பையன் said...
//சேவை செய்வதை தவிர வேறெதுவும் தெரியாது என்று நடுநிலையாக எழுத வேண்டும்.//
அந்த சேவையை மற்றவர்கள் ஆதாரத்தோடு எழுதினாலும், அங்கேயும் போய் அனானி பெயரில் திட்ட வேண்டும்
At October 15, 2008 10:39 AM ,
வால்பையன் said...
//பதிவு எழுதினவங்க தான் முக்கி முக்கி படிச்சு ஏதாவது இடஒதுக்கீட்டுல வேலை கிடைக்காதானு அரசாங்கத்திற்கு மனு எழுதிட்டு இருப்பாங்க.//
பாத்து ரொம்ப முக்கி டவுசர் கிளிஞ்சிற போகுது
At October 15, 2008 10:40 AM ,
Bleachingpowder said...
//ஆனாலும் அந்த பதிவிற்கு பின்னூட்டம் இடுபவர்கள் நமக்கு எதிரிகள் என்று கருத்தில் கொள்ள வேண்டும்
(பாவம் சர்வேசன் மாட்டிகிட்டார்)
//
சூது வாது தெரியாத புள்ள...இன்னும் கொஞ்ச நேரத்தில் சர்வேசன் தான் ப்ளிச்சிங்க் பவுடர் பேருல பதிவு எழுதுறாருனு ஒரு பதிவு வந்திரும்.
At October 15, 2008 10:40 AM ,
வால்பையன் said...
//விசியம் தெரிஞ்சவன் எவனும் நம்ம பதிவ படிக்க மாட்டான், அதனால கவலையே படாதீங்க.//
அப்படியே நம்மளுடயது ஏதாவது பிரபலம் மூலம் பிரபலம் ஆகிவிட்டால்,
அந்த பிரபலத்தை எனக்கு சிறு வயதிலிருந்தே தெரியும் என்று உடான்ஸ் விடலாம்
At October 15, 2008 10:41 AM ,
Bleachingpowder said...
//குடிகார பசங்க சாவகாசம் நமக்கெதுக்கு,
அதனால வெளியிட வேண்டாம்//
உங்களையாச்சும் இவ்வளவு டீசண்டா சொல்லுவாங்க. நான் பின்னூட்டம் இட்டா, கழிஞ்சிட்டு போயிட்டான்னு சொல்லீடுவாங்க
At October 15, 2008 10:42 AM ,
வால்பையன் said...
//" ஆமா சாரு கூட கேட்டான், என்னுடைய கட்டுரையை கொஞ்சம் திருத்திக் கொடுக்க முடியுமானு, நான் முடியாதுன்னு சொல்லீட்டேனு" பீலா உட முடியும்.//
அதனால் நமக்கு அவர்கள் மூலமும் விளம்பரம் கிடைக்கலாம்.
கிடைப்பது திட்டாக இருந்தாலும் நமக்கு தேவை விளம்பரம் தானே
At October 15, 2008 10:43 AM ,
வால்பையன் said...
//மிலிட்டரிகாரன் பொண்டாட்டி, மல்கோவா ஆண்டி போன்ற நாகரிகமான தலைப்பையே வைக்க வேண்டும்.//
அம்மாதிரியான தலைப்பு வைப்பவர்களுக்கு கண்ணா பின்னாவென்று ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
At October 15, 2008 10:43 AM ,
Bleachingpowder said...
//அந்த சேவையை மற்றவர்கள் ஆதாரத்தோடு எழுதினாலும், அங்கேயும் போய் அனானி பெயரில் திட்ட வேண்டும்///
நீங்க வேற.. இப்பெல்லாம் இதுக்கும் ஒரு ஐடியை கிரியேட் பண்ணிட்டு வந்து திட்டுவாங்க..காசா பணமா :))
At October 15, 2008 10:44 AM ,
வால்பையன் said...
இம்மாதிரி நமக்கு நாமே பின்னூட்டம் இடுவது
உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது
At October 15, 2008 10:47 AM ,
Bleachingpowder said...
//அம்மாதிரியான தலைப்பு வைப்பவர்களுக்கு கண்ணா பின்னாவென்று ஆதரவு தெரிவிக்க வேண்டும்.//
அப்புறம் தினம் ஒரு திருக்குறள் மாதிரி, தினமும் ஒரு மேட்டர் ஃபிகரோட போட்டோவை போட்டால், அத பார்க்கவாது நாலு பேரு வருவாங்க
At October 15, 2008 10:49 AM ,
Bleachingpowder said...
ஆகா வாலு, நாம இவ்வளவு மேட்டர தேத்திட்டோமே...இனி பதிவு என்ன பேசாம ஒரு புக்கே போட்டுடலாம். ஆனா ஒரு கண்டிசன், முன்னுரை அவர் தான் எழுதனும் :))
At October 15, 2008 10:50 AM ,
கார்க்கி said...
:))))
வாழ்க விஜய் ஆனந்த்
At October 15, 2008 10:50 AM ,
வால்பையன் said...
//முன்னுரை அவர் தான் எழுதனும் :)) //
அவர் வரலைனா இவர எழுத சொல்லலாம்
At October 15, 2008 10:51 AM ,
வால்பையன் said...
கார்க்கிக்கு இன்னும் விவரம் பத்தல
At October 15, 2008 10:51 AM ,
Bleachingpowder said...
//இம்மாதிரி நமக்கு நாமே பின்னூட்டம் இடுவது
உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது//
கொஞ்சம் உளரீட்டோமோ ???
At October 15, 2008 10:52 AM ,
நல்லதந்தி said...
நானும் ஒரு பின்னூட்டம் பின்னூட்டிடறேன்! :)
At October 15, 2008 10:52 AM ,
வால்பையன் said...
//கொஞ்சம் உளரீட்டோமோ ??? //
தலைக்கு மேலே வெள்ளம் போனா ஜான் என்ன முழம் என்ன
At October 15, 2008 10:53 AM ,
வால்பையன் said...
சலுப்பா இருக்கு
ஐடி மாத்தி மாத்தி பின்னூட்டம் போடறதுக்கு
At October 15, 2008 10:54 AM ,
நல்லதந்தி said...
//சலுப்பா இருக்கு
ஐடி மாத்தி மாத்தி பின்னூட்டம் போடறதுக்கு//
ஆமாம் வால்! என்ன பண்ணலாம்!
At October 15, 2008 10:55 AM ,
Bleachingpowder said...
//வாழ்க விஜய் ஆனந்த்//
//கார்க்கிக்கு இன்னும் விவரம் பத்தல//
அட நம்ம கார்க்கி. அது வேற ஒன்னுமில்ல நல்லதந்தியை தான் அவர் விஜய் ஆனந்த்னு நினைச்சுகிட்டு, உங்க கிட்ட சொல்றேனு என்கிட்ட பேசிகிட்டு இருக்காரு :))
At October 15, 2008 10:58 AM ,
யோசிப்பவர் said...
பின்னூட்டத்தில் நம்க்கு எதிர் கருத்து சொன்னவங்களை, நேரடியா திட்டக்கூடாது. ஏதாவது ஒரு அனானி பேர்ல ரொம்ப அநாகரிகமா திட்டனும். முக்கியமா எதிர்கருத்து சொன்னவர்(அவர் எந்த சமூகத்தை சேர்ந்தவரா இருந்தாலும்) சட்டைகுள்ள பூணூல் நெளியுதுன்னு சொல்லனும்.
At October 15, 2008 11:04 AM ,
நான் ஆதவன் said...
கேள்வியும் நீயே! பதிலும் நீயே!
At October 15, 2008 11:12 AM ,
Bleachingpowder said...
//முக்கியமா எதிர்கருத்து சொன்னவர்(அவர் எந்த சமூகத்தை சேர்ந்தவரா இருந்தாலும்) சட்டைகுள்ள பூணூல் நெளியுதுன்னு சொல்லனும்//
வாங்க யோசிப்பவர். ரொம்ம முக்கியமான விசியம் இது. எப்படி மறந்தேன்னு தெரியல. நியாபக படுத்தினதுக்கும் ரொம்ப நன்றி:))
At October 15, 2008 11:15 AM ,
Bleachingpowder said...
நான் ஆதவன் said..
//கேள்வியும் நீயே! பதிலும் நீயே!//
உஷ்ஷ்ஷ்ஷ்.. இப்படி பப்ளிக்கா சொல்லக் கூடாது.
At October 15, 2008 11:17 AM ,
Bleachingpowder said...
////சலுப்பா இருக்கு
ஐடி மாத்தி மாத்தி பின்னூட்டம் போடறதுக்கு//
ஆமாம் வால்! என்ன பண்ணலாம்!//
ஆமாம் நல்லதந்தி...எதாச்சும் செய்யனும் பாஸ்
At October 15, 2008 11:24 AM ,
நல்லதந்தி said...
கமெண்ட் போட்டவர்கள் பிராமணப் பதிவர்களாக இருந்தால் கொண்டைத் தெரியுதுன்னு சொல்லனும்.பிராமணர் அல்லாத பதிவரென்றால் அடிவருடின்னு திட்டனும்!.இதை மறந்துட்டீங்களே பாஸ்!
At October 15, 2008 11:36 AM ,
நான் ஆதவன் said...
//பின்னூட்டமிட்ட அனைவருக்கும் விளக்கமாக நன்றி, பதில் எழுதுவதை உடனே நிறுத்த வேண்டும்.//
இப்ப எனக்கு ரீப்ளே கொடுத்ததுனால பிரபல பதிவர் பதவியை நீங்க இன்னும் அடையலன்னு தெரியுது.
At October 15, 2008 11:37 AM ,
நான் ஆதவன் said...
:-))))))))))
At October 15, 2008 12:01 PM ,
கிரி said...
//பிரபல பதிவர்கள் மட்டும் படிக்க வேண்டிய பதிவு //
அய்யய்யோ நான் படித்துட்டேன்! படித்துட்டேன்!!
At October 15, 2008 12:46 PM ,
ஜிம்ஷா said...
//பிரபல பதிவர்கள் மட்டும் படிக்க வேண்டிய பதிவு //
அய்யய்யோ நான் படித்துட்டேன்! படித்துட்டேன்!!
At October 15, 2008 1:05 PM ,
Bleachingpowder said...
நான் ஆதவன் said,
//இப்ப எனக்கு ரீப்ளே கொடுத்ததுனால பிரபல பதிவர் பதவியை நீங்க இன்னும் அடையலன்னு தெரியுது//
அமாங்க இந்த பேருல இன்னும் அவ்வளவு பிரபலமாகல, வால்பையன் பேருல இன்னும் நான் பிரபலமாக தான் இருக்கிறேன்னு நினைக்குறேன். அங்க வந்து நீங்க பின்னூட்டம் போட்டா வெறும் ஸ்மைலி தான் :))))))))
அப்புறம் நல்லதந்தி பதிவும் நல்லா தான போயிட்டிருக்கு :))
At October 15, 2008 1:16 PM ,
தஞ்சாவூரான் said...
:))))
ரொம்பத்தான் ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்க போல?
At October 15, 2008 1:17 PM ,
பரிசல்காரன் said...
////பிரபல பதிவர்கள் மட்டும் படிக்க வேண்டிய பதிவு //
அய்யய்யோ நான் படித்துட்டேன்! படித்துட்டேன்!!//
ஐயையோ.. நானும் படிச்சுட்டேன்.
At October 15, 2008 1:19 PM ,
பரிசல்காரன் said...
அருண் (வால்பையன்)
நீ படுபயங்கரத் திறமைசாலின்னு நிரூபிச்சட்டாங்க.
At October 15, 2008 1:20 PM ,
வால்பையன் said...
//அருண் (வால்பையன்)
நீ படுபயங்கரத் திறமைசாலின்னு நிரூபிச்சட்டாங்க. //
விடுபட்டவை:
அருண்(வால்பையன்,ப்ளீச்சிங் பவுடர், நல்லதந்தி)
நீ படுபயங்கரத் திறமைசாலின்னு நிரூபிச்சட்டாங்க
At October 15, 2008 1:23 PM ,
குசும்பன் said...
பாட்டும் நானே பாவமும் நானே என்பது போல் பதிவும் நீங்க, பிளீச்சிங் பவுடரும் நீங்களா? மிஸ்டர் வால்:))))
At October 15, 2008 1:24 PM ,
குசும்பன் said...
பதிவு எனக்கு தெரிஞ்சு பலரை தாக்குது:)
At October 15, 2008 1:25 PM ,
குசும்பன் said...
முதல் ஆள்... அவரு
இரண்டாவது ஆள் அந்த சி
மூன்றாவது ஆள் சஞ்...
நான்காவது ஆள் பரி.
5 வது ஆள் வா...
At October 15, 2008 1:27 PM ,
குசும்பன் said...
//விடுபட்டவை:
அருண்(வால்பையன்,ப்ளீச்சிங் பவுடர், நல்லதந்தி)
நீ படுபயங்கரத் திறமைசாலின்னு நிரூபிச்சட்டாங்க//
விடுபட்டவையும் நீங்கதானா? அவ்வ்வ் அது தல பாலபாரதி எழுதுகிறார் என்று நினைச்சேன்:(((
At October 15, 2008 1:27 PM ,
வால்பையன் said...
//பதிவு எனக்கு தெரிஞ்சு பலரை தாக்குது:) //
ஏனென்றால் எங்களுக்கு தனி மனித தாக்குதல் பிடிக்காது
At October 15, 2008 1:35 PM ,
நான் ஆதவன் said...
//ஏனென்றால் எங்களுக்கு தனி மனித தாக்குதல் பிடிக்காது//
சாமி...கேப்பே இல்லாம இப்படி தாக்குறீங்க
At October 15, 2008 1:49 PM ,
வால்பையன் said...
//ஏனென்றால் எங்களுக்கு தனி மனித தாக்குதல் பிடிக்காது//
சாமி...கேப்பே இல்லாம இப்படி தாக்குறீங்க //
சிட்டிசன்ல அஜித் சொல்ற மாதிரி
நான் தனி ஆள் இல்லை
At October 15, 2008 1:52 PM ,
Bleachingpowder said...
பரிசல்காரன் said,
//ஐயையோ.. நானும் படிச்சுட்டேன்//
நீங்க சூப்பர் ஸ்டார் மாதிரி பரிசல்காரரே, எவ்வளவு தான் மேல போனாலும் தன்னடக்கம் தான் :))
அதனால நீங்க படிச்சாலும், படிக்காட்டியும் பிரபலம் தான்.
At October 15, 2008 1:54 PM ,
Bleachingpowder said...
கிரி said,
//அய்யய்யோ நான் படித்துட்டேன்! படித்துட்டேன்!!//
கவலை படாதீங்க கிரி,நீங்க தான் சூப்பர் ஸடார் ரசிகனாச்சே. நீங்களும் பரிசல்காரர் மாதிரி தான் தன்னடக்கத்தில் :))
At October 15, 2008 1:56 PM ,
Bleachingpowder said...
வாங்க ஜிம்ஷா...சாதாரணமா ஒரு நாளைக்கு நாலு பதிவு போட்டு அசத்துரவர் நீங்க. நீங்க எல்லாம் நம்ம பிரபல பதிவர்ன்றதையெல்லாம் தாண்டி ரொம்ப நாளாச்சுங்க :)
At October 15, 2008 2:01 PM ,
கிரி said...
//வால்பையன் said...
//பதிவு எனக்கு தெரிஞ்சு பலரை தாக்குது:) //
ஏனென்றால் எங்களுக்கு தனி மனித தாக்குதல் பிடிக்காது//
ஹா ஹா ஹா ஹா
At October 15, 2008 2:01 PM ,
Bleachingpowder said...
தஞ்சாவூர்காரன் said,
//ரொம்பத்தான் ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்க போல?//
என்ன பண்றதுங்க அமெரிக்க பொருளாதாரம் கொஞ்ச சரியாகும் வரை, ஃபராஜட் ஒன்னுமில்லை, ஆணி ஒன்னும் புடுங்க வேண்டாம்னு சொல்லீட்டாங்க அதான்....:))
At October 15, 2008 2:01 PM ,
புதுகை.அப்துல்லா said...
தலைப்பைப் பார்த்துட்டு அப்ப நமக்கு இல்லன்னு முடிவு பண்ணி நா பதிவப் படிக்கவே இல்லை. வந்ததுக்கு ஓரு அட்டெண்டெண்ஸ் போட்டுக்குறேன். :)
At October 15, 2008 2:18 PM ,
Bleachingpowder said...
அப்பாடா !!! நல்லதந்தியோட profileல First name,last name மாத்தியாச்சு.
At October 15, 2008 2:22 PM ,
அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
சூப்பர் தலைவா .
நல்லா ஆழ்ந்து ஆராய்ச்சி பண்ணி உண்மைகளை புட்டு புட்டு வைத்துவிட்டீர்கள் .
நல்லா ரசிச்சேன் .
At October 15, 2008 2:31 PM ,
Bleachingpowder said...
புதுகை.அப்துல்லா said,
//தலைப்பைப் பார்த்துட்டு அப்ப நமக்கு இல்லன்னு முடிவு பண்ணி நா பதிவப் படிக்கவே இல்லை.//
நான் சொல்லல பிரபல பதிவர்கள் எல்லாம் நம்ம பதிவ படிக்க மாட்டாங்கன்னு. இப்ப பாத்தீங்களா நான் சொன்னது சரியா போச்சு
At October 15, 2008 2:33 PM ,
Bleachingpowder said...
வாங்க அருப்புக்கோட்டை பாஸ்கர், நீங்களாவது ஒருத்தராவாது என்னை பாராட்டுறீங்களே ரொம்ப சந்தோசம், இங்க எல்லாரும் என்ன ரவுண்ட் கட்டி அடிக்குறாங்க
At October 15, 2008 3:06 PM ,
மாயவரத்தான்.... said...
Naan indha pakkamae varala
At October 15, 2008 3:06 PM ,
புதுகை.அப்துல்லா said...
நான் சொல்லல பிரபல பதிவர்கள் எல்லாம் நம்ம பதிவ படிக்க மாட்டாங்கன்னு. இப்ப பாத்தீங்களா நான் சொன்னது சரியா போச்சு
//
அண்ணே இது போங்குஆட்டம்... நா ஒத்துக்க மாட்டேன்ன்ன்ன்ன்ன்ன்.
At October 15, 2008 3:13 PM ,
Bleachingpowder said...
மாயவரத்தான் said,
//Naan indha pakkamae varala//
நீங்க எவ்வளவு உசத்தியான அதிகாரி, இந்த பக்கமெல்லாம் வருவீங்களா...:))
At October 15, 2008 3:14 PM ,
Bleachingpowder said...
புதுகை.அப்துல்லா said,
//அண்ணே இது போங்குஆட்டம்... நா ஒத்துக்க மாட்டேன்ன்ன்ன்ன்ன்ன்.//
ஹா..ஹா..ஹா.. அப்போ சொல்லுங்க பதிவ படிச்சீங்களா இல்லையா??
At October 15, 2008 3:18 PM ,
Gowri Shankar said...
அட இதை விடுங்க, இப்போ எல்லாரும் ஒரு 'செயின்' பதிவை போட்டுக்கிட்டு இருக்காங்க. நானும் போட்டிருக்கேன். ப்ளீச்சிங் பௌடர் தொடரணும்ன்னு விருப்பப்படறேன்....
அந்த பதைப் பார்க்க....
www.gowrishankar.info
At October 15, 2008 3:27 PM ,
ஜோசப் பால்ராஜ் said...
வாலு என்னா ஆச்சு உங்களுக்கு?
நீங்க தான் ப்ளீச்சிங்பவுடர், நீங்க தான் வாலுப்பையன்னு தான் எல்லாருக்கும் தெரியுமே, அப்றமும் எதுக்கு இப்படி ? இவரே ஒரு பதிவ ப்ளீச்சிங்பவுடர்னு எழுதுவாராம், அங்க வாலுப்பையனா வந்து பின்னூட்டம் போடுவாராம். அப்பறம் ப்ளீச்சிங்பவுடர் வந்து வாலுப்பையன் பின்னூட்டத்துக்கெல்லாம் பதில் சொல்லுவாராம். ஏன் இன்னொரு பதிவு இருக்கே உங்களுக்கு அந்த பெயர்லயும் பின்னூட்டம் போட்டு பதில் சொல்லிக்க வேண்டியது தானே? இன்னும் நல்லா இருக்கும்ல. ஒரு நல்ல நண்பணா சொல்றேன், நீங்க என்னமோ வலையுலகில் புது அரசியல் ஒன்னு செஞ்சுக்கிட்டு இருக்கீங்க. நீங்க யாரை குறிவைச்சு எல்லாம் எழுதுறீங்கன்னும் எல்லாருக்கும் தெரியும். வேண்டாம் வாலு. எல்லாருக்கும் எல்லாரையும் புடிச்சே ஆகணும்னு கட்டாயம் இல்லை. பிடிக்காதவங்க எல்லாரும் எதிரியில்ல. இதை இத்தோட விட்ருங்க. என் போலவே பலருக்கும் நீங்க இதுமாதிரி செய்யிறதுல உடன்பாடு இல்லாம இருக்கலாம், அதச் சொல்லமலேயே உங்ககிட்ட இருந்து விலகிப் போக வாய்ப்புகள் இருக்கு. நல்ல நண்பர்களை இழந்துவிடாதீர்கள். உங்கள் நண்பண் என்ற உரிமையில் இதை சொல்கிறேன். புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.
At October 15, 2008 4:09 PM ,
Bleachingpowder said...
நானும் போட்டிருக்கேன். ப்ளீச்சிங் பௌடர் தொடரணும்ன்னு விருப்பப்படறேன்....
அழைப்புக்கு நன்றி கௌரிசங்கர், கூடி சீக்கீரம் போட்டுடலாம், நம்ம கார்க்கியும் பதிவ போட சொல்லியிருக்கிறார்
At October 15, 2008 4:37 PM ,
பக்கி லுக் ... said...
சொல்லாமல் விட்டது ...
* புதிதாக ஒரு இணைய தளம் ஆரம்பித்து அது உருவான கதை என்று பீலா உடுவது ...
At October 15, 2008 4:38 PM ,
பக்கி லுக் ... said...
* பதிவர் கூட்டத்துக்கு தங்களுக்கு பிடிக்காதவர்கள் வராமல் தடுக்க அதற்க்கு முன்பாக அவர்களைப்பற்றி அவதூறு கிளப்புவது ...
At October 15, 2008 4:38 PM ,
பக்கி லுக் ... said...
* அநாகரிகமாக திட்டுவதற்கென்றே ஒரு அனானி பெயர் வைத்துக்கொள்வது
At October 15, 2008 4:39 PM ,
பக்கி லுக் ... said...
//வாலு என்னா ஆச்சு உங்களுக்கு?
நீங்க தான் ப்ளீச்சிங்பவுடர், நீங்க தான் வாலுப்பையன்னு தான் எல்லாருக்கும் தெரியுமே, அப்றமும் எதுக்கு இப்படி ? இவரே ஒரு பதிவ ப்ளீச்சிங்பவுடர்னு எழுதுவாராம், அங்க வாலுப்பையனா வந்து பின்னூட்டம் போடுவாராம். //
நான் அவரில்லைனு எத்தனை தடவை சொல்லுவது
At October 15, 2008 4:42 PM ,
பக்கி லுக் ... said...
அதி முக்கியமான ஒன்று ..
கைல காசில்லாம சரக்கடிக்காம ...மண்டைல ஒன்னும் இல்லாம இருக்கும் போது மீள்பதிவிடுவது
At October 15, 2008 4:44 PM ,
பக்கி லுக் ... said...
//சிட்டிசன்ல அஜித் சொல்ற மாதிரி
நான் தனி ஆள் இல்லை//
ஆதியும் நானே அந்தமும் நானே
At October 15, 2008 4:48 PM ,
பக்கி லுக் ... said...
பொழைப்பு அற்று பொய் செயின் பதிவுன்னு சொல்லி கேவலமான கேள்விகளுக்கு பதில் சொல்ல அனைவரையும் அழைப்பது ....
At October 15, 2008 4:48 PM ,
பக்கி லுக் ... said...
//பொழைப்பு அற்று பொய் செயின் பதிவுன்னு சொல்லி கேவலமான கேள்விகளுக்கு பதில் சொல்ல அனைவரையும் அழைப்பது .... //
அந்த கேவலமான கேள்விக்கும் வேலை இல்லாம பதில் சொல்வது
At October 15, 2008 5:07 PM ,
Bleachingpowder said...
ஹாஹாஹா...வாங்க பக்கி லுக், வந்து ஜோதியில ஐக்கியமாகுங்க :))
At October 15, 2008 5:10 PM ,
அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
எனது பதிவு ஒவ்வொரு வாரமும் சூடான இடுகையில் வந்ததால் காண்டாகி , எனது இடுகை தமிழ்மணம் முகப்பு மற்றும் சூடான இடுகையில் வரமுடியாமல் செய்துவிட்டார்கள் அந்த நல்ல எண்ணம் படைத்தவர்கள் .!
நீங்களும் தொடர்ந்து இதுபோல் செய்தால் உங்களுக்கும் ஏதாவது ஒரு முத்திரை குத்தி ஒடுக்க பார்ப்பார்கள் !!
At October 15, 2008 5:43 PM ,
பக்கி லுக் ... said...
//நீங்களும் தொடர்ந்து இதுபோல் செய்தால் உங்களுக்கும் ஏதாவது ஒரு முத்திரை குத்தி ஒடுக்க பார்ப்பார்கள் !!//
தேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிகவுழன்று - பிறர் வாடப் பலசெயல்கள்செய்து - நரை கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போல - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?...
நாங்க வீழமாட்டோம் ..வீழ்த்துவோம்
At October 15, 2008 5:44 PM ,
ILA said...
//இல்லையென்றால் மொத்த பின்னூட்டத்திற்கும் சேர்ந்து ஒரு ஸ்மைலி போடலாம்//
:)
At October 15, 2008 6:12 PM ,
ஜோசப் பால்ராஜ் said...
வாலுப்பையன் என்கிற ப்ளீச்சிங் பவுடர் என்கிற பக்கிலுக் என்கிற அருண்,
இம்புட்டுத்தானா? இல்ல இன்னும் இருக்கா உங்க அவதாரங்கள்?
At October 15, 2008 6:31 PM ,
Rajaraman said...
அருமையான பதிவு. இங்கு ஜல்லியடித்து கொண்டிருக்கும் பக்கிளுக், காந்தழல் புரி, பாவிபொண்ணன், பிரிசல்பூறான், சொரவனையான் போன்ற இன்னும் சில பொரம்போக்குகளின் முகமூடியை கிழிதுள்ளிர்கள். Hatts Off. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். நன்றி..
At October 15, 2008 6:45 PM ,
அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
//வாலுப்பையன் என்கிற ப்ளீச்சிங் பவுடர் என்கிற பக்கிலுக் என்கிற அருண்,
இம்புட்டுத்தானா? இல்ல இன்னும் இருக்கா உங்க அவதாரங்கள்?//
வந்துட்டாருய்யா நியாயவான் !!
At October 15, 2008 6:47 PM ,
பக்கி லுக் ... said...
//வாலுப்பையன் என்கிற ப்ளீச்சிங் பவுடர் என்கிற பக்கிலுக் என்கிற அருண்,
இம்புட்டுத்தானா? இல்ல இன்னும் இருக்கா உங்க அவதாரங்கள்? //
ஏனுங்க வாலுபையன் நான் அவரல்லனு தினமும் சொல்றார் ....
அவர் நான் இல்லன்னு நான் இப்போ சொல்றேன் ...
அசுரர்களை அழிக்க கடவுள் பல அவதாரம் எடுக்கலாம் ...ஆனால் நோக்கம் ஒன்றே ...
நதிமூலம் ரிஷிமூலம் ..பாக்காதீங்கோ ....
ஹி..ஹி ..ஹி ..மெசேஜ் நல்லா இருக்கா ..
At October 15, 2008 6:49 PM ,
பக்கி லுக் ... said...
//இங்கு ஜல்லியடித்து கொண்டிருக்கும் பக்கிளுக், காந்தழல் புரி, பாவிபொண்ணன், பிரிசல்பூறான், சொரவனையான் போன்ற இன்னும் சில பொரம்போக்குகளின் முகமூடியை கிழிதுள்ளிர்கள். //
கலைஞர் ஆட்சில கூடிய சீக்கிரம் பட்டா வாங்கிடுவோம் ..கவலைபடாதீங்கோ
At October 15, 2008 6:53 PM ,
அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
பகுத்தறிவு பகலவன்கள் ஒருத்தரையும் காணோமே ?
ஆத்திகம் மற்றும் வாத்தியார் வகுப்பறைக்கெல்லாம் சென்று வில்லங்கமான கேள்விகள் கேட்கும் வில்லன்கள் ஒருத்தரையும் காணோமே !
ஓடி ஒளிந்து விட்டார்களா ?
At October 15, 2008 6:55 PM ,
பக்கி லுக் ... said...
//ஹாஹாஹா...வாங்க பக்கி லுக், வந்து ஜோதியில ஐக்கியமாகுங்க :)) //
வலையுலக அசிங்கத்தை பத்தி பேசி வாயெல்லாம் நாறுது ...இப்போ உங்க புண்ணியத்துல பல்பொடிக்கு பதிலா ப்ளீசிங் பவுடர் போட்டு பல் விளக்குகிறேன் .
வரவேற்புக்கு நன்றி தல....
At October 15, 2008 6:56 PM ,
குசும்பன் said...
என் பின்னூட்டத்துக்கு மட்டும் பதில் சொல்லாமல் மற்றவர்களுக்கு பதில் சொன்னதில் இருந்து மற்றவர்கள் எல்லாம் பெரியவர்கள் என்று புரிகிறது.
At October 15, 2008 6:59 PM ,
பக்கி லுக் ... said...
//பகுத்தறிவு பகலவன்கள் ஒருத்தரையும் காணோமே ?
ஆத்திகம் மற்றும் வாத்தியார் //வகுப்பறைக்கெல்லாம் சென்று வில்லங்கமான கேள்விகள் கேட்கும் வில்லன்கள் ஒருத்தரையும் காணோமே !
ஓடி ஒளிந்து விட்டார்களா ?//
அவசரமா வந்திருக்கும் ....
கொஞ்சம் பொறுங்க ...
வருவாங்க..
At October 15, 2008 7:40 PM ,
Bleachingpowder said...
குசும்பன் said,
//விடுபட்டவையும் நீங்கதானா? அவ்வ்வ் அது தல பாலபாரதி எழுதுகிறார் என்று நினைச்சேன்:(((//
ஏன் பதிவுலக சுனாமிய விட்டுடீங்க :))
//என் பின்னூட்டத்துக்கு மட்டும் பதில் சொல்லாமல் மற்றவர்களுக்கு பதில் சொன்னதில் இருந்து மற்றவர்கள் எல்லாம் பெரியவர்கள் என்று புரிகிறது.//
கோச்சுக்காதிங்க குசும்பன், உங்க பின்னூட்டத்தை கவணிக்கலை. நீங்க வந்தா தானே எந்த பதிவுமே களை கட்டும். இப்படி வந்துட்டு சீரியஸா கேள்வி கேட்டா எப்படி..கோதாவுல குதிங்க
At October 15, 2008 10:53 PM ,
பொய்யன் said...
nkoyyaala inga inna nadakkuthu
At October 15, 2008 10:56 PM ,
பரிசல்காரன் said...
//Rajaraman said...
அருமையான பதிவு. இங்கு ஜல்லியடித்து கொண்டிருக்கும் பக்கிளுக், காந்தழல் புரி, பாவிபொண்ணன், பிரிசல்பூறான், சொரவனையான் போன்ற இன்னும் சில பொரம்போக்குகளின் முகமூடியை கிழிதுள்ளிர்கள். //
பாராட்டுக்கு நன்றி ராஜாராமன். மிகவும் மன நெகிழ்வாய் உணர்கிறேன்.
-பரிசல்காரன் (எ) பொறம்போக்கு
At October 15, 2008 11:12 PM ,
இரா. வசந்த குமார். said...
The woods are lovely, dark and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep.
***
காலமோ குறுகியது; செல்ல வேண்டிய தொலைவோ அதிகம்;
விரைவாக...! விரைவாக...!
At October 15, 2008 11:47 PM ,
பக்கி லுக் ... said...
எருமையின் வரலாறு : நீரின்றி அமைந்த வாழ்க்கை! ..
ஒரு எருமையின் சோகக்கதையை கேளுங்கள் ...உங்கள் ஆறுதல் வார்த்தையை பதியுங்கள்
http://pakkilook.blogspot.com/2008/10/blog-post_15.html
At October 16, 2008 12:25 AM ,
ச்சின்னப் பையன் said...
நானே நானா... யாரோதானா??
At October 16, 2008 12:26 AM ,
ச்சின்னப் பையன் said...
ஒண்ணுமே புரியல (பதிவு) உலகத்திலே....
At October 16, 2008 12:26 AM ,
ச்சின்னப் பையன் said...
100
At October 16, 2008 3:10 AM ,
Thooya said...
க்கிகிகிகிகிகி :)
At October 16, 2008 5:31 PM ,
Bleachingpowder said...
வாங்க ச்சின்ன பையன் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்து சென்சுரி போட்டுட்டிங்க.
//ஒண்ணுமே புரியல (பதிவு) உலகத்திலே....//
ஆமா ச்சின்ன பையன், எனக்கும் ஒன்னுமே புரியல. இந்த வால்பையன் நல்லதந்தியெல்லாம் யாரு,அவங்களுக்கும் எனக்கும் என்னா சம்மந்தம். அவங்க நல்லவங்களா இல்ல கெட்டவங்களா. நீங்களாச்சும் கொஞ்சம் விசாரிச்சு சொல்லுங்களேன் உங்களுக்கு புண்ணியமாக போகும்.
At October 16, 2008 5:32 PM ,
Bleachingpowder said...
//nkoyyaala inga inna nadakkuthu//
அதானே... இப்போ எனக்கே நான் யாருன்னு தெரியல
At October 16, 2008 9:48 PM ,
நல்லதந்தி said...
//அதானே... இப்போ எனக்கே நான் யாருன்னு தெரியல/
எனக்கும்தான் தலை!
At October 16, 2008 9:54 PM ,
நல்லதந்தி said...
அதை விடுங்க! நான் ஒரு ஆட்டம் சொல்லித்தர்ரேன்.அதை வெச்சி கண்டு பிடிக்கலாமா?.”அபுளிக்க முபுளிக்க கஞ்சினி மினிமினி டாம் டூம் டச்சாம் முச்சாம் கையிலே போட்டா டமீர் குண்டு”!.இப்படி இந்த ஆட்டத்தை வெச்சிக்கலாமா?.இந்த விளையாட்டு நாங்கள்லாம் சின்ன புள்ளையில இருந்து விளையாடுற விளையாட்டு!
At October 17, 2008 12:08 AM ,
புதுகை.அப்துல்லா said...
ஓன்னு மட்டும் நிச்சயம் பீளீச்சிங்கும் வாலும் ஓரே ஆள் அல்ல !
At October 17, 2008 9:27 AM ,
துளசி கோபால் said...
பிரபல பதிவர்கள் மட்டுமுன்னு போட்டுட்டீங்களே. அதான் இது நமக்கில்லைன்னு ஒதுங்கி இருந்தேன். இப்ப என்னன்னா செஞ்சுரி அடிச்சு இன்னும் ரன் குவிக்குது இந்தப் பதிவு. அதாங்க வந்து படிச்சுட்டு ஒரு பின்னூட்டம் போட்டுருக்கேன்.
சொல்ல மறந்துட்டேனே....
நல்ல பதிவு
At October 17, 2008 7:30 PM ,
Bleachingpowder said...
புதுகை.அப்துல்லா said...
//ஓன்னு மட்டும் நிச்சயம் பீளீச்சிங்கும் வாலும் ஓரே ஆள் அல்ல !//
நீங்க ரொம்பபபபப.....நல்லவன் சார்...நான் சொன்னாதான் யாரும் நம்ப மாட்டேங்கறாங்க, நீங்களாச்சும் சொல்லுங்க, அப்படியாச்சும் நம்பறாங்களான்னு பாப்போம்
At October 17, 2008 7:32 PM ,
Bleachingpowder said...
துளசி கோபால் said,
//சொல்ல மறந்துட்டேனே....
நல்ல பதிவு//
நன்றி நண்பரே. அடிக்கடி வாங்க :)
At October 17, 2008 7:39 PM ,
Bleachingpowder said...
நல்லதந்தி said,
//இந்த விளையாட்டு நாங்கள்லாம் சின்ன புள்ளையில இருந்து விளையாடுற விளையாட்டு!//
சூப்பர் ஐடியா, ஆனா இந்த விளையாட்டுக்கு யாரையெல்லாம் சேத்திலாம்னும் நீங்களே சொல்லிடுங்க
At October 19, 2008 10:00 AM ,
ஆட்காட்டி said...
அடிச்சுகிட்டு சாவுங்கடா.
At October 19, 2008 5:25 PM ,
tamil cinema said...
சில பூனைகளுக்கு யார் மணி கட்ட போகிறார்கள் என்று நினைத்தேன். நீர் சரியான ஆள் தான்.... மணி கட்டும் விஷயத்தில்...
At October 19, 2008 6:00 PM ,
செந்தழல் ரவி said...
///நன்றி நண்பரே. அடிக்கடி வாங்க :)////
அவ்வ்வ்வ்வ்வ்
துளசி டீச்சர் ஆண் அல்ல !!! என்ன தான் புதிய பதிவரா இருந்தாலும் இப்படியா ?
At October 20, 2008 4:55 PM ,
Bleachingpowder said...
//ஆட்காட்டி said...
அடிச்சுகிட்டு சாவுங்கடா//
நன்றி தலைவா !
At October 20, 2008 4:57 PM ,
Bleachingpowder said...
//tamil cinema said...
சில பூனைகளுக்கு யார் மணி கட்ட போகிறார்கள் என்று நினைத்தேன். நீர் சரியான ஆள் தான்.... மணி கட்டும் விஷயத்தில்...//
நன்றி tamil cinema.
வெறும் பூனை தானே, இதுக்கு மணி கட்ட எதுக்கு பயம்:)
At October 20, 2008 5:00 PM ,
Bleachingpowder said...
//செந்தழல் ரவி said...
துளசி டீச்சர் ஆண் அல்ல !!! என்ன தான் புதிய பதிவரா இருந்தாலும் இப்படியா ?//
நிஜாமாவே தெரியாதுங்க சாரி :(
//துளசி கோபால் said,
சொல்ல மறந்துட்டேனே....
நல்ல பதிவு//
நன்றி சகோதரி. அடிக்கடி வாங்க :)
At October 24, 2008 8:52 PM ,
சுரேகா.. said...
கடுமையான ஆராய்ச்சி முடிவா இருக்கு!
:)
உங்களை மாதிரி
ஒரு பிரபல பதிவரே இப்படி எழுதறதால
ஒண்ணும் பிரச்னையில்ல!
:))))
கலக்குங்க!
At October 26, 2008 3:05 PM ,
Known Stranger said...
ada oka maka.. nanum kuda nalla dila ezhuthararaynu vanthu padicha palla perula suya villambaram pozhapathu poi paul sollra mathiri thanay post potu thanay veru peyarula comment potu athukum comment potu ena pozhapu ithelam paditha muttal manithayray.
anna onu enaku time pass achu intha padikarthula. nenga kalakunga courageous coward. time pass aguthu enaku thunkam kalanchu pochu. yevan enna sonna enna nenga podunga post ipadi than edaku modaka podanum appathan gujalsa irukum
At November 8, 2008 6:59 PM ,
Basaki said...
நானும் படிச்சுட்டேன், மன்னிச்சு விட்டுடுங்க சாமியோவ் :-)
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home