படிச்ச முட்டாள், பயந்த புத்திசாலி

Wednesday, November 19, 2008

முத்துராமலிங்க தேவர் ஜாதி வெறியனா? அப்போ நீங்கெல்லாம் யாரு??

இது வரை பார்பனர்களை மட்டுமே ஜென்ம வீரோதிகளாக கருதி வந்த பதிவர்கள் இப்பொழுது அதை விட கேவலமாகவும், அநாகரிகமாகவும் தேவர் இனத்தையும், மூத்துராமலிங்க தேவரையும் இழிவு படுத்தி எழுதி வருகிறார்கள். தேவர் ஜெயந்தி விழா சுவரொட்டியில் அம்பேத்கர் பெயரை போடாததனால் தான் இவ்வளவு வன்முறைக்கும் காரணமாம். அவன் சொந்த காசுல சுவரொட்டி அடிக்கும் போது யார் பெயரை போடுவது போடாமல் இருப்பது என்பது அவரவர் விருப்பம். அவர்கள் என்ன கல்லூரி பணத்திலா சுவரொட்டி அடித்தார்கள் மற்ற மாணவர்கள் கேள்வி கேட்க?

இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி பள்ளி கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் தான் அவர்களின் அடுத்த தலை முறையாவது இடஒதுக்கீட்டை பயன்படுத்தி வாய்ப்பு தேட வேண்டிய சூழ்நிலையை தவிர்க்க இயலும். அவன் இப்படி இருந்தால் நாங்களும் இப்படிதான் இருப்போம் என்றால் இன்னும் பத்து தலைமுறையானாலும் இப்படியே இருக்க வேண்டியது தான்.

பிற்படுத்த பட்ட சமுகத்தை சேர்ந்தவர்களும் அவர்கள் என்ன செய்தாலும் நியாயம் கற்பிக்கும் பதிவர்களும் முதலில் அவர்களுடைய தாழ்வு மணப்பான்மையை விட்டொழிக்க வேண்டும். அமெரிக்கா என்ன செஞ்சாலும் தப்பு, பார்பணர்கள் உயர் பொறுப்பில் இருந்தால் ஆத்திரம், தேவர் இனத்தை சேர்ந்தவர்களை கண்டால் வெறுப்பு. மொத்தத்தில் தன்னை விட மேல யாராவது இருந்தால் அவன் கெட்டவன். வன்முறையில் மட்டும் தான் உங்களால் அவர்களிடம் போட்டி போட முடியுமா?

வன்முறையில் போட்டி போடுவதை தவிர்த்து படிப்பில் போட்டி இடுங்கள். இந்தியாவில் இருக்கும் மருத்துவ,பொறியில்,சட்ட கல்லூரியில் மற்ற இனத்தவருடன் சேர்ந்து படிப்பால் மட்டும் மேலே வந்து விட முடியாது. நாலு வருடம் படிப்பு முடிந்து வெளியே செல்லும் போது, உயர் ஜாதியினர் என கூறி கொள்ளும் மாணவர்களை விட அதிக மதிப்பெண் எடுத்து காட்டுங்கள். அது தான் நீங்கள் அவர்களுக்கு கொடுக்கும் சரியான பதிலடியாக இருக்கும்.

Labels: , ,